தவெக மாநாட்டிற்கு வருபவர்களின் மொபைல் சிக்னல் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தற்காலிக டவர் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநாட்டு திடலில் 150 மருத்துவர்கள் உட்பட 350 பேர் அடங்கிய மருத்துவக் குழுவுடன், 17 மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தவெக மாநாட்டு திடலில், குடிநீர், கழிவறை, செல்போன் சிக்னல் கிடைக்க டவர், எல்இடி திரைகள் என பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தவெக மாநாட்டிற்காக காவல்துறையிடம் அனுமதி பெற்றபடி, தொண்டர்கள் அமர 40 கேபின்களும் அமைக்கப்பட்டுள்ளன.
மாநாட்டுத் திடலில் 50 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. மாநாட்டை சிரமமின்றி காணும் வகையில், மாநாட்டு பந்தல் முதல் தேசிய நெடுஞ்சாலை வரை எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டில் 300 மொபைல் கழிவறைகள் மற்றும் 700 குடிநீர் தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன.மாநாட்டு திடலுக்கு உள்ளே செல்ல 3 வழிகள், வெளியே செல்ல 10க்கும் மேற்பட்ட வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டிற்கு ஏராளமானோர் வருவார்கள் என்பதால், மொபைல் சிக்னல் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தற்காலிக டவர் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநாட்டு திடலில் 150 மருத்துவர்கள் உட்பட 350 பேர் அடங்கிய மருத்துவக் குழுவுடன், 17 மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.மாநாட்டிற்கு வரும் வாகனங்களை நிறுத்த பிரமாண்ட வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. 152 ஏக்கரில் பேருந்துகளையும், 127 ஏக்கரில் வேன், கார் உள்ளிட்ட வாகனங்களையும் நிறுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.