தன்னுடைய அடுத்த செயல்திட்டம் என்பது அரசியல் அணுகுண்டு எனக்கூறி, தங்களுடன் கூட்டணி வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுத்து அதிகாரப்பகிர்வு செய்யப்படும் என விஜய் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தால் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு உண்டு என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் விக்கிரவாண்டி, வி.சாலையில் நடைபெற்றது. லட்சக்கணக்கானோர் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் விஜய் தங்கள் கொள்கை, கோட்பாடுகளையும், செயல்திட்டங்களையும் தெரிவித்துள்ளார்.
இந்த மாநாட்டில் தங்கள் கட்சியின் செயல்திட்டங்களை விளக்கும்போது பேசிய விஜய், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கான பாதுகாப்பில் தான் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதை உறுதி செய்ய அதற்காக தனித்துறை உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் ஏற்றத்தாழ்வில்லாத கல்வி, மருத்துவம், இடஒதுக்கீடு என எல்லாம் எல்லாருக்கும் கிடைக்கச் செய்ய அதை அடிப்படை உரிமையாக செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். இதற்காக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதுதான் சமூகநீதிக்கான சரியான அணுகுமுறையாக இருக்கும்.
தொடர்ந்து பேசிய அவர், தன்னுடைய அடுத்த செயல்திட்டம் என்பது அரசியல் அணுகுண்டு எனக்கூறி, தங்களுடன் கூட்டணி வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுத்து அதிகாரப்பகிர்வு செய்யப்படும் என தெரிவித்தார். அதன்படி வரும் 2026 தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆட்சியை அமைக்கும். இருந்தாலும் நம்மை தேடி வரக்கூடியவர்களை நம்முடன் அரவணைத்துக் கொண்டு கூட்டணி கட்சிகளுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு தரப்படும்” என்றார்.தமிழ்நாட்டில் சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என கூறியது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், விஜய் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என கூறியது அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.இந்த நிலையில் விஜய்யின் அறிவிப்புக்கு பிறகு, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற குரல்கள் தமிழ்நாட்டில் எழத்தொடங்கியுள்ளது எனவும் இனி தமிழ்நாட்டின் அரசியல் களம் புதிய பாதையை நோக்கிப் பயணப்படும் எனவும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.