கடந்த ஆண்டை விட தீபாவளி தினத்தில் குறைந்த தீ விபத்து… கைகொடுத்த விழிப்புணர்வு.. தீயணைப்பு துறை!

255 0

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தீபாவளிக்கு தீ விபத்துகள் குறைவாக இருந்ததாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தீபாவளிக்கு தீ விபத்துகள் குறைவாக இருந்ததாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பட்டாசுகளை வெடித்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கவனக் குறைவாக பட்டாசுகளை வெடிக்கும்போது தீ விபத்துகளும், தீக்காயங்களும் ஏற்படுவது வழக்கம். இந்த விபத்துகளை தவிர்ப்பது எப்படி? என தீயணைப்பு துறையினரும், காவல்துறையினரும் ஏற்கெனவே ஆலோசனை வழங்கி இருந்தனர்.

தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாடும் வகையில், தீயணைப்புத்துறை சார்பில் சென்னையில் 276 இடங்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் இரண்டாயிரத்து 46 இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதன் காரணமாக இந்த ஆண்டு பட்டாசு தீ விபத்துகள் குறைவாகவே பதிவாகியுள்ளதாக தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் 254 தீ விபத்துகள் ஏற்பட்ட நிலையில், இந்த ஆண்டு 150 விபத்துகள் மட்டுமே பதிவாகியுள்ளன. சென்னையில் கடந்த ஆண்டு 102 தீ விபத்துகள் ஏற்பட்ட நிலையில் இந்த ஆண்டு 48 தீ விபத்துகள் பதிவானதாக தீயணைப்புத்துறை கூறியுள்ளது.தீ விபத்தில் காயமடைந்த 544 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் ஒருவர் மட்டும் உயிரிழந்துள்ளார். இதனிடையே சென்னையில் நேர விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக 345 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

Related Post

அரையாண்டு விடுமுறை : சிறப்பு வகுப்பு நடத்தினால் நடவடிக்கை – பள்ளி கல்வித்துறை அதிரடி

Posted by - December 24, 2022 0
பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அசைன்மென்ட் மட்டும் வழங்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரையாண்டு தேர்வு விடுமுறையில் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என மாவட்ட முதன்மைக்…

பிரதமர் மோடியை விமர்சித்து கார்ட்டூன் – விகடன் இணையதளம் முடக்கம்!

Posted by - February 17, 2025 0
பிரதமர் மோடியை விமர்சித்து கார்ட்டூன் வெளியிட்ட விகடன் நிறுவனத்திற்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. தனியார் ஊடக நிறுவனமான விகடன் தனது வார இதழுக்கான அட்டைப்படத்தில் பிரதமர் மோடியை…

கோவையில் பிரபலமான பெண் பேருந்து ஓட்டுநருக்கு சிக்கல்… போலீசார் வழக்குப்பதிவு

Posted by - February 7, 2024 0
கோவையின் பெண் பேருந்து ஓட்டுனர் என பிரபலமான சர்மிளா மீது காட்டூர் காவல் உதவி ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு…

மணமகன் கட்டிய தாலியை கழற்றி வீசிய இளம்பெண்: உறவினர் பெண் திடீர் மணமகள் ஆனார்

Posted by - September 4, 2023 0
போளூர்: போளூரில் உள்ள ஒரு வங்கியில் வேலை செய்யும் வாலிபருக்கும், போளூரை அடுத்த ஒரு கிராமத்தில் வசிக்கும் பட்டதாரி இளம் பெண்ணுக்கும் பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்டு நேற்று…

யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி

Posted by - February 21, 2025 0
ஆனாலும் பாஜக தலைவர்களுக்கும் மற்ற கட்சி தலைவர்களுக்கும் வார்த்தை போர் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியுதவியை கேட்கிறோம் எனவும் மொழியை வைத்து என்ன அரசியல்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *