புதுச்சேரியில் மீண்டும் கொரோனா பரவல்: பொதுமக்கள் அச்சம்

344 0

புதுச்சேரி:

புதுச்சேரியில் சில மாதமாக கொரோனா தொற்று இல்லாமல் பூஜ்ஜியமாக இருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் மக்கள் சளி, காய்ச்சலால் அவதியடைந்து வந்தனர். தற்போது புதுச்சேரியில் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதற்கு சிகிச்சை பெற அரசு ஆஸ்பத்திரியில் அதிக அளவில் நோயாளிகள் வருகின்றனர். இதில் சிகிச்சைக்காக வந்த புதுச்சேரியை சேர்ந்த 43 நோயாளிகளின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.Read all Latest Updates on and about corona virus in Puducherryஇதில் 9 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 3 பேர் ஜிப்மர் உள்பட அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 6 பேர் தங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுவதாக புதுவை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் விபரம் சேகரிக்கப்பட்டு, அனைவரும் கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதுச்சேரியில் கடந்த மே மாதத்திற்கு பிறகு கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை. 7 மாதத்திற்கு பிறகு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது புதுச்சேரியில் கொரோனா மீண்டும் பரவி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். புதுவையில் கடந்த ஆண்டை விட டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ஆயிரத்து 673 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு இதுவரை 2 ஆயிரத்து 436 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதுவை அரசு மருத்துவமனையில் டெங்குவுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டும் அமைக்கப்பட்டுள்ளது. தொடர் காய்ச்சலால் அவதிக்குள்ளாவோர் உடனடியாக மருத்துவமனையை அணுகுமாறும் பொதுமக்கள் வெளியே செல்லும்போது முககவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் புதுவை சுகாதாரதுறை அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலுகூறியதாவது:-

புதுவை அரசு மருத்துவமனைகளில் போதுமான மருந்துகள் கையிருப்பில் உள்ளது. பொதுமக்கள் தங்கள் வீட்டையும், சுற்றுபுறத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். டெங்கு கொசுக்களை ஒழிக்க தஞ்சாவூரில் இருந்து வரவழைக்கப்பட்ட கம்போசியா மீன்களை குட்டைகளில் விடப்பட்டுள்ளது. வரும் காலங்களில் புதுவையிலேயே கம்போசியா மீன்களை வளர்க்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Post

மும்முனை போட்டிக்கு தயாராகும் அரசியல் களம்!

Posted by - July 5, 2025 0
தமிழக அரசியல் களத்தில் புதிய வரவாக அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டத்தில் திமுக அணி மற்றும் பாஜக அணிகளுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூட்டணி இல்லை…

கடுப்பில் அரசு ஊழியர்கள், ஐஸ் வைத்த ஸ்டாலின்.. நினைத்தது நடக்குமா? சொன்னதெல்லாம் நியாபகம் இருக்கா?

Posted by - April 28, 2025 0
அதிருப்தியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர்களை குளிர்விக்கும் விதமாக முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அரசு ஊழியர்கள் திருமணத்திற்கான முன்பணமாக ரூ.5 லட்சம் வரை…

முதலில் வந்தது கோழியா…? முட்டையா..? பல ஆண்டு கால புதிருக்கு விடை தேடி கொடுத்த விஞ்ஞானிகள்

Posted by - June 16, 2023 0
உலகில் முதலில் வந்த கோழியா அல்லது முட்டையா… சிறுவயதில் இருந்தே நாம் ஒருவருக்கொருவர் வேடிக்கையாக கேட்டுக்கொண்ட கேள்விதான் இது. சில சமயங்களில் நமக்குள் எழும் இதுபோன்ற இயல்பான…

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் – சமாதானம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்

Posted by - February 28, 2024 0
சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சமாதானமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர்…

“மக்களை பற்றி கவலை இல்ல.. பாசாங்கு வேலை” தமிழக பட்ஜெட்டை வெளுத்து வாங்கிய தவெக விஜய்!

Posted by - March 14, 2025 0
தேர்தல் வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு, வெற்றுக் காகிதத்தால் பட்டம் விடும் பாசாங்கு வேலையே தமிழக பட்ஜெட் என தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார். மக்களைப் பற்றிக் கவலைப்படாமல்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *