நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் வெளியிட தடை கோரிய வழக்கில் தற்போது புதிய திருப்பம் வந்துள்ளது.
நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் வெளியிட தடை கோரி போடப்பட்ட வழக்கில், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய பாக்கித் தொகை நாளை வழங்கப்படும் என ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம், பல திரைப்பட தயாரிப்புக்கு வாங்கிய 99.22 கோடியில் மீதமுள்ள 55 கோடியை திரும்ப வழங்காததால், கங்குவா படம் வெளியிட தடை விதிக்க வேண்டும் என ரிலையன்ஸ் நிறுவனம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நினையில் நாளைக்குள் மீதமுள்ள தொகை வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதை அடுத்து, வழக்கின் விசாரணை நாளைக்கு ஒத்திவைத்து நீதிபதி அப்துல் குத்தூஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.