பிரபல வங்கிக்கு ரிசரவ் பேங்க் திடீர் தடை.. உங்களுக்கு அதுல அக்கவுண்ட் இருக்கா?

261 0

பிரபல வங்கிக்கு ரிசரவ் பேங்க் திடீர் தடை.. உங்களுக்கு அதுல அக்கவுண்ட் இருக்கா?

நாட்டில் உள்ள வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்களை ரிசர்வ் வங்கி தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அதில் வங்கி விதிமுறைகளை மீறி செயல்படும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க , கோடக் மஹிந்திரா வங்கிக்கு ரிசர்வ் வங்கி அதிரடியாகத் தடை விதித்துள்ளது.

ஆன்லைன், மொபைல் மூலமாக எந்தவொரு புதிய கணக்குகளோ புதிய கிரெடிட் கார்டுகளோ கோடக் மஹிந்திரா வங்கியில் தொடங்கக் கூடாது என ரிசர்வ் வங்கி தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது. வங்கியினுடைய IT systems மீது கடந்த இரண்டு ஆண்டுகளாக ரிசர்வ் வங்கி அதிருப்தியைத் தெரிவித்து வந்ததாகவும் ஆனால் அவற்றை சரி செய்ய வங்கி தரப்பில் எந்தவொரு நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை எனவும் அதனால்தான் இம்முடிவை ரிசர்வ் வங்கி எடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.அதே நேரம், ரிசர்வ் வங்கியின் இந்நடவடிக்கை, ஆன்லைன் மூலம் தொடங்கப்படும் புதிய கணக்குகளுக்கும், புதிதாக வழங்கப்படும் கிரெடிட் கார்டுகளுக்கும் மட்டுமே பொருந்தும். மற்றபடி ஏற்கெனவே இருக்கும் வங்கி நடவடிக்கைகள் வழக்கம் போல் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

கூகுள் தேடல் 2024:இதையெல்லாமா கூகுளில் தேடுவீங்க…

Posted by - December 11, 2024 0
இந்தியர்கள் மொத்தமாக கூகுளில் அதிகம் தேடியது என்ன? இந்தியன் பிரீமியர் லீக் T20 உலகக் கோப்பை பாரதிய ஜனதா கட்சி தேர்தல் முடிவுகள் 2024 ஒலிம்பிக்ஸ் 2024…

ஆன்லைன் நிறுவன இணையத்தை முடக்கி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த ஆந்திரா வாலிபர்

Posted by - September 13, 2023 0
பெங்களூரு: தகவல் தொழில்நுட்ப நகரான பெங்களூருவில் நாளுக்கு நாள் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. பெங்களூருவில் இயங்கி வரும் ஒரு தனியார் வங்கியுடன் தொடர்புடைய தனியார் ஆன்லைன்…

காதலன்தான் எல்லாம் என்ற மாயையில் வாழ்வை இழக்கும் சிறுமிகள்- ஆண் நண்பர்கள் இல்லாததை அவமானமாக கருதும் அவலம் …

Posted by - March 11, 2025 0
காதல்… 18 வயதுக்குள் இருக்கும் சிறுமிகள் காதல் அல்லது ஆண் நண்பர் இல்லாமல் இருப்பதை அவமானமாகக் கருதுவது அதிகரித்து வருகிறது. உடலில் ஏற்படும் மாற்றங்களை காதல் என்று…

ரயில் விபத்து.. தமிழகத்தில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு

Posted by - June 3, 2023 0
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. ஒடிசா ரயில் விபத்தையொட்டி தமிழகத்தில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.…

இந்தியாவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை விகிதம்..! ஆய்வு சொல்லும் அதிர்ச்சி தகவல்..

Posted by - April 5, 2023 0
உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலையால், நிறுவனங்களில் பணி நீக்க நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இந்த நிலையில், வேலைவாய்ப்பின்மை விகிதமும் அதிகரித்து வருவதாக ஆய்வுகளில் தெரிய வருகிறது. இந்தியாவில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *