சனிபகவானின் கோபத்தை தூண்டும் செயல்களை செய்யாமல் அவரை சாந்தப்படுத்த நாம் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. சனிக்கிழமையன்று செய்யக்கூடாத 5 விஷயங்களை இப்போது தெரிந்துகொள்ளலாம்.
சனி பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாள் சனிக்கிழமை. சனி பகவான் கோபம், நேர்மை ஆகியவற்றின் அடையாளமாக கருதப்படுகிறார். சனி பகவானை மகிழ்விப்பவர்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகம்.
சனிபகவானின் கோபத்தை தூண்டும் செயல்களை செய்யாமல் அவரை சாந்தப்படுத்த நாம் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. சனிக்கிழமையன்று செய்யக்கூடாத 5 விஷயங்களை இப்போது தெரிந்துகொள்ளலாம்.
எண்ணெய் வாங்குதல்: கடுகு எண்ணெய் சனி பகவானுக்கு விருப்பமான பொருட்களில் ஒன்று என்பதால், சனிக்கிழமையில் எந்த வகையான எண்ணெயையும் வாங்குவது துரதிர்ஷ்டவசமாக கருதப்படுகிறது. சனிக்கிழமையன்று எண்ணெய் வாங்குவது வீட்டில் கடனை அதிகரிப்பதுடன் குடும்பத்தின் பிற நிதி சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது என்று நம்பப்படுகிறது.
கருப்பு காலணிகள் அல்லது ஆடைகள் அணிதல்: இந்து மத புராணங்களின்படி, சனி பகவான் கருப்பு நிறத்தை விரும்புகிறார். மறுபுறம், ஒரு பூஜை அல்லது பிற மங்கள நிகழ்ச்சிகளில் கருப்பு உடை அணிவது அவருக்கு மிகவும் அதிருப்தி அளிக்கிறது என்று கூறப்படுகிறது. கூடுதலாக, சனிக்கிழமைகளில் கருப்பு காலணிகளை அணிவது உங்கள் தொழில் வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும். இவை இரண்டும் உங்கள் வேலையில் பதவி உயர்வு பெறுவதில் தடைகளை ஏற்படுத்தலாம்.
மது அருந்துதல்: ஆல்கஹால் பொதுவாக உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இது விரும்பத்தகாத கவலைகளை ஊக்குவிக்கிறது மற்றும் சில கடுமையான உடல்நலப் பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது. சனி கிழமைகளில் மது அருந்துவதால் சனி பகவானின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். ஒருவேளை பயன்படுத்தினால் அது அவர்களின் வாழ்க்கையை எதிர்மறையாக பாதிக்கலாம்.
துடைப்பம் வாங்குதல்: செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் துடைப்பம் வாங்குவது ஒரு வீட்டில் நிலையற்ற நிதியை விளைவிப்பதாக நீண்ட கால புராணம் கூறுகிறது. இது சனி பகவான் மட்டுமல்ல, செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியையும் கோபப்படுத்துகிறது.
கத்தரிக்கோல் வாங்குதல்: கத்தரிக்கோலை அலட்சியமாகப் பயன்படுத்த வேண்டாம் என பெரியவர்கள் அடிக்கடி கூறுவதை நாம் கேட்டிருப்போம். ஏனெனில் இது குடும்ப உறுப்பினர்களிடையே வாக்குவாதத்திற்கு வழிவகுக்கும். சனிக்கிழமையன்று கத்தரிக்கோல் வாங்குவது அல்லது கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் இது குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களுடன் வாக்குவாதத்திற்கு வழிவகுக்கும்.