2019-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், சிறப்பு அலுவலர்களை நியமனம் செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் 2019 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது.
அதிமுக ஆட்சியில் புதிதாக 9 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதால், நடைபெற்ற வார்டு மறு சீரமைப்புப் பணி காரணமாக, அவை தவிர்த்து மற்ற இடங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது.
2019 டிசம்பரில் தேர்வு செய்யப்பட்ட பிரிதிநிதிகளின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைவதால், சிறப்பு அலுவலர்களை நியமிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.இதற்கான அவசர சட்டம் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ள போதும், இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.இந்நிலையில், நாளை தொடங்கவுள்ள சட்டப்பேரவை கூட்டத் தொடரில் சிறப்பு அதிகாரிகளை நியமிப்பது தொடர்பான மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.