யார் அந்த சார்? பேட்ஜ்.. சட்டப்பேரவையின் முதல் நாளே அதிரடியாக ஆரம்பித்த அதிமுக!

209 0

பிற்பகல் நடைபெறும் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில், சட்டப்பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவை இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ள நிலையில் முதல் நாளே அதிமுக தடாலடியாக ஆரம்பித்துள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆண்டுதோறும் ஆளுநர் உரையோடு தொடங்குவது மரபு. அந்த வகையில் 2025ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. இதற்காக சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் ஆர்.என்.ரவியை முறைப்படி நேரில் சந்தித்து அழைப்பு விடுத்த நிலையில், ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். காலை 9.30 மணி அளவில் பேரவையில் ஆளுநர் உரை நிகழ்த்த உள்ளார். தொடர்ந்து, பிற்பகல் நடைபெறும் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில், சட்டப்பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது.அதன்படி, சற்று நேரத்தில் தொடங்கவுள்ள நிலையில் முதல் நாளே அதிமுக தடாலடியாக ஆரம்பித்துள்ளது. “யார் அந்த சார்?” என்று அச்சிடப்பட்ட பேட்ஜுடன் அதிமுக எம்எல்ஏக்கள் சட்டமன்றத்திற்கு வந்துள்ளனர்.சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது, மாணவி வன்கொடுமை விவகாரத்தைக் கையில் எடுத்து குரல் எழுப்பவும் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தயாராகியுள்ளன. இதனால், கூட்டத்தொடரில் காரசார விவாதங்களுக்குப் பஞ்சம் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படும் நிலையில், மாணவி வன்கொடுமை குறித்து கவன ஈர்ப்பு நோட்டீஸ் அளித்துள்ளது அதிமுக.

இந்த நிலையில் தான் “யார் அந்த சார்?” என்று அச்சிடப்பட்ட பேட்ஜ் அணிந்து அதிமுக எம்எல்ஏக்கள் சட்டமன்றத்திற்கு வந்துள்ளனர். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் “யார் அந்த சார்?” என்று அச்சிடப்பட்ட பேட்ஜை அணிந்து வந்துள்ளனர்.

Related Post

“சென்னை மாஸ்டர் பிளான் 3”.. சிட்டியே மாற போகுது! இனி நீர் நிலைகள் அருகே கட்டுமானம் கட்ட கட்டுப்பாடு?

Posted by - December 12, 2023 0
சென்னை: சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சென்னை பெருநகரப் பகுதிக்கான (சிஎம்ஏ) மூன்றாவது மாஸ்டர் பிளானுக்காக (டிஎம்பி) பணிகளை தொடங்கி உள்ளது. இதில் வெள்ளம், புயலில்…

உஷார்: அடுத்த 3 மணி நேரத்துக்கு இந்த 32 மாவட்டங்களில் மழை.. எங்கெங்கு தெரியுமா?

Posted by - October 14, 2024 0
TN Rain | 16 – 17 ஆம் தேதி வாக்கில், வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் துவங்கக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில்…

போதை கலாச்சாரத்தால், சிறுவர்களும் பாதிக்கப்படும் நிலை!

Posted by - November 26, 2024 0
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் போதை கலாச்சாரத்தால், சிறுவர்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளளனர். சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள திரையரங்க வாசலில் 3…

“பாஜக அரசுக்கு தமிழ் என்றால் கசப்பு, தமிழர்கள் என்றால் வெறுப்பு“ – கடுமையாக விமர்சித்த முதல்வர்

Posted by - June 19, 2025 0
முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், கீழடி விவகாரத்தில் பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். கடிதத்தின் விவரங்களை காணலாம். திமுக தலைவர் ஸ்டாலின்,…

புதிய ஆலியா மானசா.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..

Posted by - November 30, 2022 0
சரிகம தயாரிப்பு நிறுவனம் தற்போது தயாரித்துள்ள மெகாத் தொடர் இனியா. இந்த தொடரில் நடிகை ஆலியா மானசா கதாநாயகியாக நடிக்கிறார். சரிகம தயாரிப்பு நிறுவனத்தின் ஒரு புதிய…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *