பிற்பகல் நடைபெறும் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில், சட்டப்பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆண்டுதோறும் ஆளுநர் உரையோடு தொடங்குவது மரபு. அந்த வகையில் 2025ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. இதற்காக சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் ஆர்.என்.ரவியை முறைப்படி நேரில் சந்தித்து அழைப்பு விடுத்த நிலையில், ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். காலை 9.30 மணி அளவில் பேரவையில் ஆளுநர் உரை நிகழ்த்த உள்ளார். தொடர்ந்து, பிற்பகல் நடைபெறும் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில், சட்டப்பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது.அதன்படி, சற்று நேரத்தில் தொடங்கவுள்ள நிலையில் முதல் நாளே அதிமுக தடாலடியாக ஆரம்பித்துள்ளது. “யார் அந்த சார்?” என்று அச்சிடப்பட்ட பேட்ஜுடன் அதிமுக எம்எல்ஏக்கள் சட்டமன்றத்திற்கு வந்துள்ளனர்.சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது, மாணவி வன்கொடுமை விவகாரத்தைக் கையில் எடுத்து குரல் எழுப்பவும் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தயாராகியுள்ளன. இதனால், கூட்டத்தொடரில் காரசார விவாதங்களுக்குப் பஞ்சம் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படும் நிலையில், மாணவி வன்கொடுமை குறித்து கவன ஈர்ப்பு நோட்டீஸ் அளித்துள்ளது அதிமுக.
இந்த நிலையில் தான் “யார் அந்த சார்?” என்று அச்சிடப்பட்ட பேட்ஜ் அணிந்து அதிமுக எம்எல்ஏக்கள் சட்டமன்றத்திற்கு வந்துள்ளனர். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் “யார் அந்த சார்?” என்று அச்சிடப்பட்ட பேட்ஜை அணிந்து வந்துள்ளனர்.