‘பாரத் மாதா கி ஜே’ திமுக எம்பி பேசும்போது பாஜகவினர் கூச்சல்… மேடையில் எல்.முருகன்!

254 0

கும்பகோணம் அருகே மத்திய இணையமைச்சர் முருகன் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் திமுக எம்.பி., கல்யாணசுந்தரம் பேசிக்கொண்டிருக்கும் போது, பாஜகவின் கூச்சலிட்ட சம்பவம் அங்கு சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 'பாரத் மாதா கி ஜே' திமுக எம்பி பேசும்போது பாஜகவினர் கூச்சல்... மேடையில் எல்.முருகன்!

கொரோனா வைரஸ் பரவல் தொடங்குவதற்கு முன் சென்னையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் விரைவு ரயில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள பாபநாசம் ரயில் நிலையத்தில் நின்று சென்றது. கொரோனா வைரஸ் பரவலுக்கு பின் இயக்கப்பட்ட இந்த விரைவு ரயில் பாபநாசத்தில் நிறுத்தப்படாமல் சென்று வந்தது.kumbakonam

இப்பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ,சட்டமன்ற உறுப்பினர்கள் ரயில்வே துறைக்கு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக நேற்று (டிச. 3) முதல் திருச்செந்தூரில் இருந்து சென்னை செல்லும் விரைவு ரயிலும், சென்னையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் விரைவு ரயிலும் பாபநாசத்தில் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்தது.

நேற்று (டிச. 3) இரவு, சென்னையில் இருந்து திருச்செந்தூர் சென்ற விரைவு ரயில் பாபநாசத்தில் நின்று சென்றது. அதனை பச்சைக்கொடி அசைத்து ஒன்றிய இணை அமைச்சர் முருகன் வழி அனுப்பிவைத்தார்.இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணை அமைச்சர் முருகன்,”ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளில் உள்ள மீனவப் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் தமிழக அரசு 126 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் கடல்பாசி வளர்க்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பி உள்ளது. இது மத்திய அரசின் பரிசினை உள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள மீன்பிடி துறைமுகங்களை மேம்படுத்த 1200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் திருவெற்றியூர் பகுதியில் புதிதாக மீன்பிடி துறைமுகம் 150 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டு வருகிறது. தற்போது 90 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

இதனைப் போல் செங்கல்பட்டிற்கும், விழுப்புரத்திற்கு இடைப்பட்ட பகுதியில் 250 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் புதிதாக மீன்பிடி துறைமுகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்த 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுக மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம்,”ஒன்றிய அமைச்சராக இருக்கக்கூடிய முருகன் தமிழகத்திற்கு என்னென்ன செய்தார் என்பது பின்னாளில் கேள்விக்குறியாக இருக்கும். முருகன் அமைச்சராக இருக்கும் போது அவரால் தமிழகத்திற்கு என்னென்ன செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்தால் அவரது பெயர் நிலைத்து நிற்கும்.

அப்போது பாஜக தொண்டர்கள் ‘பாரத் மாதா கி ஜே’ என முழக்கங்களோடு கூச்சலிட்டனர்.
அவர்களிடம் இந்தப் பகுதி வளர்ச்சிக்கு என்னென்ன தேவை என அமைச்சரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, அதற்கு இடையூறாக  ஏன் கத்துகிறீர்கள் என தெரிவித்து அவர் தனது பேச்சை தொடர்ந்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Related Post

செப்டம்பர் மாதத்தில் பள்ளிகளுக்கு இத்தனை நாட்கள் விடுமுறையா? – மகிழ்ச்சியில் மாணவர்கள்!

Posted by - August 31, 2023 0
4-12ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.27 தேதி முதல் அக்.2ம் தேதி வரை 5 நாட்கள் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு மற்றும்…

Smallpox Prevention : பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன.?

Posted by - March 2, 2026 0
தமிழகத்தில் பரவும் சின்னம்மை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவடைந்து, பனியின் தாக்கம் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் வெயிலின் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில்…

சட்டென்று மாறிய வானிலை… கொட்டித் தீர்த்த கனமழை… இன்று எங்கெல்லாம் மழை தெரியுமா?

Posted by - May 31, 2023 0
சென்னை மற்றும் புறநகரில் குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் நேற்று இரவு கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் மின்சாரம்…

“தாய் மற்றும் மகள்களை ஆபாச வீடியோ எடுத்த கொத்தனார்” – தொடர்ந்து பாலியல் சைகை காட்டி டார்ச்சர்.. கைது செய்யப்பட்ட காமக்கொடூரன்!

Posted by - November 22, 2025 0
கன்னியாகுமரி மாவட்டம், மொட்டவிளை பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவர் அதே பகுதியை சேர்ந்த 32 வயதுடைய கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணை கடந்த சில வருடங்களுக்கு…

அதிகரிக்கும் கொரோனா: சென்னையில் தொற்று பாதித்த வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி தொடக்கம்

Posted by - April 6, 2023 0
சென்னையில் கொரோனா பாதித்த வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கையை சென்னை மாநகராட்சி மீண்டும் தொடங்கியுள்ளது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *