5ஜி சேவையால் டேட்டா வேகமா காலியாகுதா? ஏர்டெல் வழங்கும் சூப்பர் டேட்டா வவுச்சர் பிளான்

205 0

AIRTEL:

எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் சப்ஸ்கிரிப்ஷன் 28 நாட்களுக்கு மட்டுமே என்பதையும், மேலும் இந்த 28 நாட்களுக்கு யூஸர்கள் ஏதாவது ஒரு பிளாட்ஃபார்மை மட்டுமே தேர்வு செய்ய முடியும் என்பதையம் யூஸர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

நாட்டின் இரண்டாவது பெரிய டெலிகாம் ஆப்ரேட்டரான  ஏர்டெல் நிறுவனம் தற்போது தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ150-க்கும் குறைவான விலையில் OTT (ஓவர்-தி-டாப்) பெனிஃபிட்ஸ்களை அளிக்கும், ப்ரீபெய்ட் 4ஜி டேட்டா வவுச்சரை வழங்குகிறது.

இந்த பிளான் மூலம் ரூ.150-க்குள் ஏர்டெல் யூஸர்கள் ஏராளமான டேட்டாவுடன் OTT நன்மைகளையும் சேர்த்து பெறலாம்.  இவை வாடிக்கையாளர்கள் நாட்டில் புதிதாக அறிமுகமாகி இருக்கும் 5ஜி-யை சிறப்பாக அனுபவிக்க உதவும். ஏனென்றால் இன்னும் 5ஜி சேவைக்கென்று தனியாக கட்டணங்கள் நிர்ணயிக்கப்படவில்லை. எனவே யூஸர்கள் தங்களது 4ஜி பிளான்கள் வழியே தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 5ஜி-யை பயன்படுத்துகிறார்கள்.

எனினும் 4G -ஐ விட 5G அதிவேகமுடையது என்பதால் அடிப்படை 4G திட்டங்கள் பல யூஸர்களுக்கு போதுமானதாக இல்லை. எனவே சீக்கிரம் காலியாகி விடும் டேட்டா பிரச்சனையை சமாளிக்க டேட்டா வவுச்சர் பிளான்கள் உதவுகின்றன. தற்போது நாம் இங்கே  ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.148 டேட்டா வவுச்சர் பற்றி பார்க்க போகிறோம். இந்த பிளானில் யூஸர்கள் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் அக்சஸ்-உடன் கூடுதலாக 15GB ஆட்-ஆன் டேட்டாவை 28 நாட்கள் வேலிடிட்டியில் பெறுகிறார்கள். ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீமில் பல பிளாட்ஃபார்ம்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் SonyLIV, LionsgatePlay, Eros Now, Hoichoi மற்றும் பல பிளாட்ஃபார்ம்கள் யூஸர்கள் 28 நாட்களுக்குத் தேர்வு செய்ய கிடைக்கும்.

எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் சப்ஸ்கிரிப்ஷன் 28 நாட்களுக்கு மட்டுமே என்பதையும், மேலும் இந்த 28 நாட்களுக்கு யூஸர்கள் ஏதாவது ஒரு பிளாட்ஃபார்மை மட்டுமே தேர்வு செய்ய முடியும் என்பதையம் யூஸர்கள் நினைவில் கொள்ள வேண்டும். ரூ.148 பிளானின் வேலிடிட்டியை பொறுத்தவரை இது யூஸர்களின் பேசிக் ப்ரீபெய்ட் பிளானை போன்றே இருக்கும். அதாவது இந்த பிளான் ஸ்டான்ட்அலோன் வேலிடிட்டியுடன் வரவில்லை.

ரூ.148-க்கு 15GB எனும்போது 1GB டேட்டாவின் விலை ரூ.9.86-ஆக இருக்கிறது.இந்த ரூ.148 பிளானை தவிர யூஸர்கள் தேர்வு செய்ய வேறு சில டேட்டா பேக்ஸ்களும் உள்ளன. ரூ.19 பிளான் 1GB டேட்டா மற்றும் 1 நாள் வேலிடிட்டியுடன் வருகிறது. ரூ.58 பிளான் 3GB டேட்டாவுடன் யூஸரின் பேசிக் பிளான் வேலிடிட்டி வரை வரும். மிக சமீபத்தில் ஏர்டெல் ரூ.65 பிளானை அறிமுகப்படுத்தியது, இது 4GB டேட்டாவுடன் வருகிறது. இதுவும் குறிப்பிட்ட யூஸரின் பேசிக் ப்ரீபெய்ட் பிளான் வரை வேலிடிட்டியை கொண்டிருக்கிறது. ஏர்டெல் வழங்கும் முழு டேட்டா பேக் வவுச்சர் பற்றிய விவரங்களுக்கு ஏர்டெலின் அதிகாரப்பூர்வ வெப்சைட் அல்லது அல்லது ஏர்டெல் ஆப்-ற்கு யூஸர்கள் விசிட் செய்யலாம். விரைவில் புதிய ஆண்டு துவங்க உள்ளதால் நிறுவனம் மேலும் பல ரீசார்ஜ் பிளான்களை அறிமுகபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

BSNL வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய IFTV திட்டம் – 600+ Live TV சேனல்கள், 75 Mbps இணைய வேகம்!

Posted by - December 15, 2025 0
BSNL (Bharat Sanchar Nigam Limited) தனது FTTH (Fiber To The Home) வாடிக்கையாளர்களுக்காக IFTV (Intranet Fiber TV) என்ற புதிய வசதியை அறிமுகம்…

அப்படி நல்லா சொல்லுங்க சார்.. மக்களின் சிரமத்தை போக்க வங்கிகளுக்கு RBI போட்ட உத்தரவு…

Posted by - April 29, 2025 0
ஏடிஎம்-களுக்கு சென்று பணம் எடுக்கும் மக்களின் ஒரு முக்கிய பிரச்னையை சரி செய்ய, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது மக்களுக்கு மிகவும் தேவையான ஒரு…

பழச மறந்துடுங்க.. 7 நாட்களுக்கு இலவசம்.. மொபைலுக்கு தானாக ரீசார்ஜ்..

Posted by - August 2, 2024 0
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), பார்தி ஏர்டெல் (Bharti Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தினாலும், கஸ்டமர்களுக்கு உரிய நேரத்தில் சலுகைகளை கொடுப்பதற்கு…

அட்ரா சக்க.. ரூ.54,000 கோடியில் நவீனமயமாகும் இந்திய ராணுவம்.. ஓகே சொன்ன ராஜ்நாத்…

Posted by - March 21, 2025 0
இந்தியாவின் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்த, ரூ.54,000 கோடி மதிப்பில் மூலதன கையகப்படுத்துதல் முன்மொழிவுகளுக்கு, பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான…

ஒரு நாளுக்கு 26 சிகரெட் பிடிப்பதற்கு சமம்… 441 ஐ எட்டிய டெல்லி காற்றுமாசு.. நிலை 3 செயல்திட்டம் அமல்

Posted by - November 15, 2024 0
டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்தும் விதமாக புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலக்கு வருகிறது. தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப், ஹரியானா…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *