ரூ. 100 கோடி சொத்துக்கு ஆப்பு.. வைத்திலிங்கத்திற்கு ED போட்ட ஸ்கெட்ச்.. கலக்கத்தில் ஓபிஎஸ்!

178 0

பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், வைத்திலிங்கத்திற்கு சொந்தமான கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை அமலாக்கததுறை முடக்கியுள்ளது.

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கத்திற்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை அமலாக்கததுறை முடக்கியுள்ளது. வைத்திலிங்கத்திற்குச் சொந்தமான 2 அசையா சொத்துகளை முடக்கியதாக எக்ஸ் தளத்தில் அமலாக்கத்துறை பதிவிட்டுள்ளது. வீட்டு வசதித்துறை அமைச்சராக பதவி வகித்தபோது சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

ED ஸ்கெட்ச்சில் சிக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர்:

கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக பதவி வகித்தவர் வைத்திலிங்கம். தற்போது, ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து வருகிறார்.

தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றுக்கு அபார்ட்மெண்ட் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கட்டி தருவதற்கு திட்ட அனுமதி வழங்க வைத்திலிங்கம், அமைச்சராக இருந்தபோது, 28 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக புகார் கூறப்படுகிறது.

கலக்கத்தில் ஓபிஎஸ்:

லஞ்சமாக பெற்ற பணத்தை தனியார் கட்டுமான நிறுவனத்திடம் இருந்து கடனாக பெற்றது போல அவர் கணக்கு காட்டியதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு காவல்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக வைத்திலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்தாண்டு அக்டோபர் மாதம் சோதனை நடத்தி, பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இந்த நிலையில், பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், வைத்திலிங்கத்திற்கு சொந்தமான கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை அமலாக்கததுறை முடக்கியுள்ளது. 2 அசையா சொத்துகளை முடக்கியதாக எக்ஸ் தளத்தில் அமலாக்கத்துறை பதிவிட்டுள்ளது.

Related Post

திமுகவுக்கும், ஸ்டாலினுக்கும் சமூக நீதி குறித்து பேச யோக்கியதை கிடையாது – எல்.முருகன் குற்றச்சாட்டு!

Posted by - April 12, 2024 0
நீலகிரியில் போட்டியிடும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அங்கு தீவிர தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். செய்தியாளரிடம் பேசிய எல்.முருகன், இந்த தொகுதியில் எனக்கு நல்ல வாய்ப்பு…

பால் உற்பத்தியாளரை ஒருமையில் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ்!

Posted by - November 22, 2025 0
பால் உற்பத்தியாளரை அமைச்சர் மனோ தங்கராஜ் தொலைத்து விடுவேன் என மரியாதை குறைவாகப் பேசிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள பாண்டியராஜபுரம்…

தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்ட விவகாரம்… கனிமொழிக்கு அண்ணாமலை பதில்…!

Posted by - April 28, 2023 0
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துககொண்ட நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்தை ஈஸ்வரப்பா பாதியில் நிறுத்திய விவகாரம் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில், சிவமோகா தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை…

3 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய கல்யாண மன்னன் கைது

Posted by - August 23, 2023 0
ராயக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுக்கா உத்தனப்பள்ளி ஊராட்சி சின்ன லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆஞ்சப்பா. இவரது மகன் கார்த்திக் (வயது23). பொக்லைன் டிரைவான இருவருக்கும், உத்தனப்பள்ளியை…

20 லட்சம் மதிப்புள்ள 557 கிலோ நாட்டு வெடிகள் 204 மூலப்பொருள் மூட்டைகளை பறிமுதல்

Posted by - October 31, 2023 0
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகிலுள்ள நாச்சியார்கோயில் காவல் சரகத்திற்கு உட்பட்ட நாகரசம்பேட்டை கிராமத்தில் ரமேஷ்குமார் என்பவர் வீட்டில் வெடி பொருட்கள் மற்றும் வெடி தயாரிப்பதற்கான மருந்து பொருட்கள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *