20 லட்சம் மதிப்புள்ள 557 கிலோ நாட்டு வெடிகள் 204 மூலப்பொருள் மூட்டைகளை பறிமுதல்

192 0
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகிலுள்ள நாச்சியார்கோயில் காவல் சரகத்திற்கு உட்பட்ட நாகரசம்பேட்டை கிராமத்தில் ரமேஷ்குமார் என்பவர் வீட்டில் வெடி பொருட்கள் மற்றும் வெடி தயாரிப்பதற்கான மருந்து பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

 

அதன் பேரில் நாச்சியார்கோயில் காவல் ஆய்வாளர் ரேகாராணி தலைமையிலான போலீசார், தாசில்தார் வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள் நாகரசம்பேட்டை அக்ரஹாரத் தெருவில் உள்ள ரமேஷ் குமார் வீட்டிற்குள் ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் அங்கு வெடி பொருட்கள் எதுவும் சிக்கவில்லை.
அப்போது இடதுபுறத்தில் பூட்டப்பட்டிருந்த குடோனை திறக்குமாறு வீட்டில் இருந்த ரமேஷ்குமார் உறவினர்களிடம் போலீசார் கூறியுள்ளனர். அதற்குள் உரம் மூட்டைகள் இருப்பதாகவும் வேறு எதுவும் இல்லை என திறக்க மறுத்துள்ளனர். அதேபோல் குடோனில் இருந்து உரம் வாசனை அடித்துள்ளது. பின்னர் போலீசார் அரையின் கதவை உடைத்து பார்த்தபோது மூட்டை மூட்டையாக நாட்டு வெடிகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. வெளி நபர்கள் யாரும் கண்டுபிடித்து கூடது என்பதற்காக .வெடி மூட்டைகளை சுற்றி உரங்களை தூவி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.பின்னர் பதுக்கி வைத்திருந்த 557 கிலோ நாட்டு வெடிகள் மற்றும் நாட்டு வெடி தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் அடங்கிய 204 மூட்டைகளை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு 20 லட்சம் இருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
இதுகுறித்து ரமேஷ் குமார், சரவணன், சந்திரசேகர்  மூன்று பேர் மீது  போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகின்றனர்.

Related Post

கடலூரில் “அந்தரத்தில்” தொங்குச்சாமே.. மிட்நைட்டில் ஊசலாடிய 40 உயிர்கள்.. கண்விழித்து பார்த்தால்???

Posted by - September 26, 2023 0
கடலூர்: அரசு பஸ் ஒன்று அந்தரத்தில் தொங்கி கொண்டிருப்பதை பார்த்து, கடலூரே அதிர்ந்து போய்விட்டது.. என்ன நடந்தது நள்ளிரவில்? சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு விரைவு…

நாளைமறுநாள் வரை தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

Posted by - January 8, 2024 0
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், கேரளா மற்றும்…

விவசாயிகள் எதிர்ப்பை தொடர்ந்து பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு சேர்ப்பு..

Posted by - December 28, 2022 0
பொங்கல் பரிசு தொகுப்பு குறித்தான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்கப்படும் என முதலமைச்சர் ஆலோசனையில்…

தாம்பரத்தில் போலீசாரை கண்டித்து கோர்ட்டு முன்பு வக்கீல்கள் தர்ணா போராட்டம்

Posted by - November 29, 2022 0
வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் அந்த வக்கீலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோட்டார் சைக்கிளை பறித்து வைத்து அனுப்பிதாக கூறப்படுகிறது. வக்கீல்கள் அவரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.…

தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு | உங்கள் பெயர் உள்ளதா? முழு விவரம்

Posted by - December 19, 2025 0
தமிழ்நாட்டில் நடைபெறும் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *