20 லட்சம் மதிப்புள்ள 557 கிலோ நாட்டு வெடிகள் 204 மூலப்பொருள் மூட்டைகளை பறிமுதல்

198 0
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகிலுள்ள நாச்சியார்கோயில் காவல் சரகத்திற்கு உட்பட்ட நாகரசம்பேட்டை கிராமத்தில் ரமேஷ்குமார் என்பவர் வீட்டில் வெடி பொருட்கள் மற்றும் வெடி தயாரிப்பதற்கான மருந்து பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

 

அதன் பேரில் நாச்சியார்கோயில் காவல் ஆய்வாளர் ரேகாராணி தலைமையிலான போலீசார், தாசில்தார் வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள் நாகரசம்பேட்டை அக்ரஹாரத் தெருவில் உள்ள ரமேஷ் குமார் வீட்டிற்குள் ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் அங்கு வெடி பொருட்கள் எதுவும் சிக்கவில்லை.
அப்போது இடதுபுறத்தில் பூட்டப்பட்டிருந்த குடோனை திறக்குமாறு வீட்டில் இருந்த ரமேஷ்குமார் உறவினர்களிடம் போலீசார் கூறியுள்ளனர். அதற்குள் உரம் மூட்டைகள் இருப்பதாகவும் வேறு எதுவும் இல்லை என திறக்க மறுத்துள்ளனர். அதேபோல் குடோனில் இருந்து உரம் வாசனை அடித்துள்ளது. பின்னர் போலீசார் அரையின் கதவை உடைத்து பார்த்தபோது மூட்டை மூட்டையாக நாட்டு வெடிகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. வெளி நபர்கள் யாரும் கண்டுபிடித்து கூடது என்பதற்காக .வெடி மூட்டைகளை சுற்றி உரங்களை தூவி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.பின்னர் பதுக்கி வைத்திருந்த 557 கிலோ நாட்டு வெடிகள் மற்றும் நாட்டு வெடி தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் அடங்கிய 204 மூட்டைகளை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு 20 லட்சம் இருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
இதுகுறித்து ரமேஷ் குமார், சரவணன், சந்திரசேகர்  மூன்று பேர் மீது  போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகின்றனர்.

Related Post

திக்குமுக்காட செய்த தமிழ்நாடு பட்ஜெட்..! எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி? பள்ளிக்கல்வித்துறை டாப்..!

Posted by - March 14, 2025 0
தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம். பள்ளிக்கல்வித்துறைக்கு சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.…

அதிகார துஷ்பிரயோகம் – கொதிக்கும் அண்ணாமலை..!!

Posted by - July 26, 2024 0
முதல்வர் ஸ்டாலின், தனக்கு நெருக்கமானவர்களுக்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டுமென்றால், அவரது கட்சியில் முக்கியப் பதவிகள் கொடுக்கலாம். அதை விடுத்து, பொறுப்பு மிக்க அரசுப் பதவிகளில் அதிகார துஷ்பிரயோகம்…

தீபாவளி ஸ்பெஷலாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்கள்- முழு விவரம் இதோ

Posted by - November 1, 2023 0
தீபாவளி ஸ்பெஷல் தொலைக்காட்சிகளில் எல்லா மாதங்களும் சீரியல்கள் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகின்றன. ஆனால் ஏதாவது ஒரு ஸ்பெஷல் தினம் வந்துவிட்டால் போதும் படங்களாக ஒளிபரப்பி விடுவார்கள். அப்படி…

விஜயகாந்த் எப்போது மனம் உடைந்து போனார்? அவரது மகனே சொன்ன தகவல்

Posted by - December 29, 2023 0
மறைந்த கேப்டன் விஜயகாந்த் அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் எப்போது மனம் உடைந்துபோனார் என்பதை அவருடைய மகன் சண்முக பாண்டியன் ஒருமுறை தெரிவித்திருக்கிறார்.  மறைந்த கேப்டன் விஜயகாந்த்…

தமிழகத்தில் 500 அரசுப் பள்ளிகள் தனியாருக்கு தத்துக் கொடுக்கும் முயற்சி.. மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

Posted by - January 2, 2025 0
அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகளோடு இணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக 500 பள்ளிகளை தத்துக் கொடுக்கும் நடவடிக்கையினை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். “கல்வி கொடுக்க…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *