தி.மு.க.வில் இணைந்தது ஏன்? லிஸ்ட் போட்டு காரணம் சொன்ன சத்யராஜ் மகள்!

117 0

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த நடிகர் சத்யராஜ் மகள் ஏன் தி.மு.க.வில் இணைந்தேன் என்று விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் புகழ்பெற்ற நடிகர் சத்யராஜ். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார். இவரது மகள் திவ்யா. இவர் ஊட்டச்சத்து மருத்துவர் ஆவார். இவர் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். தி.மு.க.வில் அவர் இணைந்தபோது அமைச்சர் சேகர்பாபு, தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு உடனிருந்தனர்.

தி.மு.க.வில் இணைந்தது ஏன்?

தி.மு.க.வில் இணைந்த பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த திவ்யா கூறியிருப்பதாவது, “நான் ஒரு ஊட்டச்சத்து நிபுணர். ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியத்துவம் அளிப்பேன். தி.மு.க. ஆரோக்கியத்திற்கு மரியாதை தரும் கட்சி. அதற்கு ஒரு உதாரணம் காலை உணவுத் திட்டம். தி.மு.க. பெண்களுக்கு மிகவும் மரியாதை தரும் கட்சி. அதற்கு ஒரு உதாரணம் புதுமைப் பெண் திட்டம். அனைத்து மதத்திற்கும் மரியாதை தரும் கட்சி தி.மு.க.

கனிமொழி, தமிழச்சி, மேயர் பிரியா, மம்தா பானர்ஜி, ஜோதிமணி ஆகியோரை ரொம்ப பிடிக்கும். நான் இணைந்ததில் அவருக்கு மிக்க மகிழ்ச்சி. என் பணிகளை அவர் பார்த்துள்ளார். எனக்கு மு.க.ஸ்டாலின்தான் ரோல் மாடல். அவரின் உழைப்புதான் காரணம். குடும்பத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சி.

விஜய்க்கு வாழ்த்து:

விஜய் அண்ணா மட்டுமின்றி மக்கள் பணி செய்யும் யாராக இருந்தாலும் அரசியலுக்கு வர வேண்டும். இதுவரை விஜய் அண்ணா மக்கள் பணி செய்து நான் பார்க்கவில்லை. அவருக்கு வாழ்த்துகள். 2026 சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க. ஆட்சிதான்.”

இவ்வாறு அவர் கூறினார்.

மருத்துவர் திவ்யா கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நிகழும் அரசியல் நிகழ்வுகள் குறித்து அவ்வப்போது கருத்து தெரிவித்து வந்தார். அரசியல் மீது ஆர்வம் கொண்ட அவர் ஏதேனும் கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தி.மு.க.வில் இணைந்துள்ளார்.  அவரது தந்தையும், நடிகருமான சத்யராஜ் தீவிர பெரியார் ஆதரவாளர். திராவிட கட்சித் தலைவர்களுடன் அவர் நெருக்கமான உறவு கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திவ்யா சத்யராஜ் தற்போது தி.மு.க.வில் இணைந்துள்ளார். தி.மு.க.வில் இணைந்துள்ள அவருக்கு விரைவில் கட்சியில் ஏதேனும் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

முருங்கை மரம்.. வேர் முதல் காய் வரை கொட்டிக்கிடக்கும் அதிசயம்.. ஆச்சரிய குச்சிகளும், அதிசய பூக்களும்

Posted by - December 21, 2023 0
சென்னை: முருங்கை என்றாலே பெண்களுக்கு அருமருந்தாகக்கூடிய கீரையாகும்.. முருங்கை ஈர்க்குகள் பெண்களுக்கு எப்படி உதவுகிறது தெரியுமா? முருங்கை விதைகளை வைத்து என்ன செய்யலாம்? பெண்களுக்கு 45 வயதாகிவிட்டாலே…

இன்னும் 2 ஆண்டுகளில் சந்திரயான்-4 ஏவப்படும்: நிலவில் உள்ள மணல், கற்களை பூமிக்கு எடுத்துவர புதிய திட்டம்

Posted by - November 22, 2023 0
சென்னை: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தயாரித்து அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் ‘விக்ரம்’ லேண்டர் கடந்த ஆகஸ்ட் 23-ந்தேதி வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. அடுத்த கட்டமாக…

குடந்தை:அரசு அதிகாரிகளின் அலட்சியபோக்கு..அவதிபடும் பொது மக்கள்…

Posted by - December 8, 2023 0
கும்பகோணம்: வட்டாட்சியர் அலுவலகத்தில் கொடுக்கபடும் மனுக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போடபடுகிறது.அரசு அதிகாரிகள் தங்கள் கடமையை செய்யாமல் அதன் மீது நடவடிக்கை எடுக்காமலும் மக்களை…

சூப்பர்ஸ்டார்-னா ஒருத்தர் தான், தல-ன்னா.. லியோ மேடையில் விஜய் அதிரடி பேச்சு

Posted by - November 2, 2023 0
அடுத்த சூப்பர்ஸ்டார் விஜய் தான் என தொடர்ந்து சர்ச்சை வரும் நிலையில் அதற்கு அவர் முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார். சூப்பர்ஸ்டார் ஒருத்தர் தான்.. “புரட்சி தலைவர்-னா ஒருத்தர்…

அடுத்த 10 நாட்களுக்கு: மழைக்கான வாய்ப்பு குறைவு

Posted by - November 24, 2022 0
காற்றழுத்த தாழ்வு மண்டலம், தாழ்வு பகுதியாக வலுவிழந்து, தற்போது தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலை கொண்டு இருக்கிறது. தமிழகத்தின் வட மற்றும் உள்மாவட்டங்களில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *