ரவுண்டு கட்டப்பட்ட 6 திமுக அமைச்சர்கள் – வீட்டுக்கா? சிறைக்கா? தலை தப்புமா? ஆட்சி கிட்டுமா?

230 0

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் 6 அமைச்சர்களுக்கு வழக்குகளால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் சில அமைச்ச்சர்களுக்கு, பழைய வழக்குகள் தற்போது வினையாக உருவெடுத்துள்ளது.

ஆட்சி கிட்டுமா?

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் வென்று 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக மீண்டும் ஆட்சி அமைத்தது. அந்த வெற்றியை தக்கவைத்து 2026ம் ஆண்டும் மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என ஸ்டாலின் தற்போது பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டுள்ளார். அதற்காக வலுவான கூட்டணியை கட்டமைத்துள்ளார். ஆனால், அவரது ஆசை நிறைவேறுமா? மீண்டும் ஆட்சி கிட்டுமா? என்பது தான் தற்போது பெரும் கேள்வியாக உள்ளது. அதற்கு காரணம், அவரது அமைச்சரவையில் உள்ள நபர்கள் மீதுள்ள வழக்குகள் தான். அதுவே திமுகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது.

ஹிட் லிஸ்டில் அமைச்சர்கள்:

தமிழ்நாடு அமைச்சரவையில் உள்ள சில அமைச்சர்கள் தற்போது வழக்குகளில் சிக்கி தவிக்கின்றனர். அவற்றின் மீதான விசாரணையின் முடிவில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அதிலும் சில அமைச்சர்கள் மீதான வழக்குகள் மத்திய புலனாய்வு அமைப்புகளால் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் பல அதிரடி சம்பவங்கள் தமிழக அரசியலில் அரங்கேறலாம் என கூறப்படுகிறது.

நெருக்கடியில் 6 அமைச்சர்கள்:

1. செந்தில் பாலாஜி: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிக்கியுள்ள செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வேண்டுமா? அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா? என கேள்வி எழுப்பி உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது. இதனால் அடுத்த 48 மணி நேரத்தில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

2. பொன்முடி: அமைச்சர் பொன்முடி சர்ச்சைக்குரிய விதமாக பேசிய வழக்கில் தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதோடு, சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை ரத்து செய்த நீதிமன்றம், அதனை மீண்டும் விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

3.துரைமுருகன்: திமுக மூத்த அமைச்சர் துரைமுருகன் முன்பு பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கை கீழமை நீதிமன்றம் ரத்து செய்தது. இந்நிலையில் கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்றம் வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

4.MRK பன்னீர் செல்வம்: கடந்த 1996- 2001 மற்றும் 2006 – 2011 ம் ஆண்டுகளில் அமைச்சராக பதவி வகித்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வருமானத்துக்கு அதிகமாக 3 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.  இதனை ரத்து செய்த கீழமை நீதிமன்ற உத்தரவை தள்ளுபடி செய்து, வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

5. அனிதா ராதாகிருஷ்ணன்: வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சராக இருந்போது வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.90 கோடி சொத்து சேர்த்ததாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்கு அமலாக்கத்துறையிடம் விசாரணையில் உள்ளது.

6. கே.என். நேரு: தமிழ்நாடு அமைச்சரவையின் மற்றொரு முக்கிய நபரான கே.என். நேருவின் சகோதரர் வீடுகளில் அண்மையில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், நிதி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தலை தப்புமா?

இதனால், சட்டமன்ற தேர்தல் நேருங்கும் நேரத்தில் யார் யார் பதவிகள் பறிபோகும்? யார் வெளியே இருப்பார்கள், யார் சிறைக்கு செல்வார்கள்? யார் தலை உருளும் என பெரிய கணக்குகள் ஓடிக்கொண்டுள்ளன. இதனால் அடுத்த சில மாதங்களிலேயே தமிழ்நாட்டில் தேர்தல் சூடு அனல் பறக்க தொடங்க வாய்ப்புள்ளது.

Related Post

சர்க்கரைக்கு பதிலாக மெக்னீசியம் சல்பேட் கலந்த பால் குடித்த குழந்தைகள் 4 பேருக்கு தீவிர சிகிச்சை

Posted by - August 14, 2023 0
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் முஸ்லிம் தெருவைச் சேர்ந்தவர் சேக் அப்துல்லா. கூலித் தொழிலாளி. இவரது மனைவி ராபிக் (வயது 23). இவர்களுக்கு இனாமல் ஸசன் (4)…

கர்ப்பிணிகளே உஷார்; மீண்டும் படையெடுக்கும் கொரோனா – சுகாதாரத்துறை கூறியது என்ன தெரியுமா.?

Posted by - June 7, 2025 0
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகாதாரத்துறை ஒரு அறிவுறுத்தலை கொடுத்துள்ளது. அது என்ன தெரியுமா.? நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5…

முதல்நாளே கோளாறு.. மோடி திறந்து வைத்த ராமேஷ்வரம் புதிய பாம்பன் பாலத்திற்கு ஏற்பட்ட நிலைமை

Posted by - April 6, 2025 0
ராமேஷ்வரம் புதிய பாம்பன் செங்குத்து தூக்கு பாலம் திறந்து வைத்த ஒரு சில மணி நேரங்களிலேயே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், பாலத்தின் ஒரு பக்கம் ஏற்றமாகவும்…

வெறும் வேர் போதுமே.. நாடி வருபவருக்கு நலனை மட்டுமே தரும் நன்னாரி.. கல்லீரலின் நண்பன் நன்னாரி வேர்கள்

Posted by - November 25, 2023 0
சென்னை: ஒரு கொடியின் வேர், இலை, பழம் என அனைத்துமே நன்மைகளை வாரி தருகிறது என்றால் அது நன்னாரிதான்.. தலைவலி முதல் பால்வினை நோய் வரை போக்கக்கூடிய…

சட்டம் – ஒழுங்கைக் காப்பதில் காவல்துறை தோல்வி அடைந்துள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Posted by - November 13, 2025 0
சட்டம் – ஒழுங்கைக் காப்பதில் தமிழக காவல்துறை தோல்வி அடைந்துள்ளதாகப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். கோவையில் அவர் அளித்த பேட்டியில், தமிழகத்தில் குற்றம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *