ஸ்கூட்டர் மீது மோதிய திருமாவளவன் கார்! தட்டிக்கேட்ட வழக்கறிஞரை அடித்து துவைத்த விசிகவினர்!

158 0

சென்னை உயர்நீதிமன்றம் அருகே தனது ஸ்கூட்டர் மீது திருமாவளவன் கார் மோதியதை தட்டிக் கேட்ட வழக்கறிஞரை விசிகவினர் சரமாரியாக தாக்கினார்கள். இதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தமிழகத்தில் அசைக்க முடியாத அரசியல் தலைவர்களில் ஒருவராக விளங்கி வருகிறார். இந்நிலையில், திருமாவளவன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான தாக்குதல் முயற்சியை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சென்னை உயர்நீதிமன்றம் அருகே தனது காரில் சென்று கொண்டிருந்தார்.

ஸ்கூட்டர் மீது மோதிய திருமாவளவன் கார்

அப்போது திருமாவளவன் சென்ற கார், முன்னாள் சென்ற ஒரு ஸ்கூட்டர் மீது மோதியதாக கூறப்படுகிறது. அந்த ஸ்கூட்டரை ஓட்டி வந்த வழக்கறிஞர், அதை சாலையில் நிறுத்தி விட்டு ”ஏன் எனது ஸ்கூட்டர் மீது மோதினீர்கள்” என்று கேட்டுள்ளார். அப்போது திருமாவளவன் காரில் இருந்தவர்கள் அந்த வழக்கறிஞரை சூழ்ந்து கொண்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

வழக்கறிஞரை தாக்கிய விசிகவினர்

மேலும் வழக்கறிஞரை சரமாரியாக தாக்கிய அவர்கள் அவரின் ஸ்கூட்டரையும் ஆவேசமாக தள்ளி சேதப்படுத்தினர். வழக்கறிஞரை தாக்கிய விசிகவினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்கள்.

ஆனாலும் விசிகவினர் அந்த வழக்கறிஞரை விடாமல் துரத்தி தாக்கியதால் அவர் உடனடியாக நீதிமன்ற வளாகத்துக்குள் சென்றார். தொடர்ந்து திருமாவளவனுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி விசிகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், காவல்துறையினருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

விசிகவினர் மீது நடவடிக்கை வேண்டும்

நடுரோட்டில் வழக்கறிஞரை விசிகவினர் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. வழக்கறிஞரை தாக்கிய விசிகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.விசிகவினரின் செயலுக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை கண்டனம்

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அண்ணாமலை, ”பட்டப்பகலில் அதிர்ச்சியூட்டும் வகையில் வி.சி.க (VCK) ரவுடிகள் ஒரு வழக்கறிஞரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அந்த வழக்கறிஞர், தான் மீது மோதிய கார் ஓட்டுநரிடம் கேள்வி கேட்டதற்காகத் தாக்கப்பட்டார். இந்த கார், வி.சி.க தலைவர் திருமாவளவன் அவர்களை ஏற்றிச் சென்றது.

இதில் வேடிக்கை என்னவென்றால் திருமாவளவன் இந்தியத் தலைமை நீதிபதி மீதான தாக்குதலைக் கண்டித்து ஒரு போராட்டத்தில் கலந்துகொண்டு திரும்பிக் கொண்டிருந்தபோதுதான் அவரது கட்சியினர் வழக்கறிஞரை தாக்கியுள்ளனர்” என்றார்.

Related Post

அமுக்கிரா கிழங்கு.. ஊளைச்சதை முதல் நரம்பு தளர்ச்சிவரை நீக்கும் அமுக்கிரான் கிழங்கு பொடி.. செம மூலிகை

Posted by - January 9, 2024 0
சென்னை: நரம்புகளை பலப்படுத்துவது முதல் முதுமையில் ஏற்படும் பிரச்சனைகளை விரட்டுவதுவரை பயன்படக்கூடியது அமுக்கிரா கிழங்கு.. அதனால்தான், சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த கிழங்குக்கெனவே தனி இடம் உள்ளது.…

ஆரஞ்சு பழம் சீசன் வர போகுது! நல்லதுதான் செய்யும்! ஆனா மறந்தும் கூட “இந்த” உணவுகளுடன் சாப்பிடாதீர்!

Posted by - December 12, 2023 0
சென்னை: ஆரஞ்சு பழத்துடன் எப்போதும் இந்த பழத்தை சேர்த்து சாப்பிடவே கூடாது தெரியுமா? மேலும் ஆரஞ்ச் பழத்தின் நன்மைகளையும் தெரிந்து கொள்ளுங்கள். ரத்த குழாய்களில் சேரும் கெட்ட…

இப்போ எங்க போனாரு நடிகர் சூர்யா? முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விளாசல்!

Posted by - December 31, 2024 0
தமிழக மக்களுக்காக நடைபெற்ற அதிமுக ஆட்சியை மு.க.ஸ்டாலின் ஊர் ஊராக சென்று ஜீபூம்பா செய்து ஆட்சியை பிடித்து விட்டார். சிறைச்சாலை அதிமுகவினருக்காக கட்டப்பட்டது. நாங்கள் யாருக்கும் பயப்படவில்லை,…

பாக்கியலட்சுமி சீரியல் இனியாவா இது? இந்த உடையில் அடையாளமே தெரியலையே

Posted by - January 7, 2023 0
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் மகள் ரோலில் நடித்து வருபவர் நேஹா. அவர் நடித்துவரும் இனியா ரோல் அந்த தொடரின் கதையில் முக்கிய ஒன்றாக இருந்து வருகிறது. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக…

அரசு வேலை கிடைக்காததால் விரக்தி: புதுச்சேரி சட்டசபைக்குள் சான்றிதழ்களை வீசிய விளையாட்டு வீரர் கைது

Posted by - August 9, 2023 0
புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த கொம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராபர்ட். இவரது மகன் சத்யராஜ் (வயது 29). பிளஸ்-2 வரை படித்துள்ள அவர், வலு தூக்கும் போட்டியில் மாநில…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *