எனக்கு கர்வம் வராமல் வேற எவனுக்குடா வரும்…ஆவேசமாக பேசிய இளையராஜா

187 0

யாரும் செய்யாத சாதனைகளை எல்லாம் செய்துகொண்டிருக்கும் எனக்கு கர்வம் இல்லையென்றால் வேறு யாருக்கு வரனும் என்று இளையராஜா கேள்வி எழுப்பியுள்ளார்

இளையராஜ

உலகளவில் இசைத்துறையின் மாபெரும் ஆளுமையாக கருதப்படுபவர் இசைஞானின் இளையராஜா. 1500 க்கும் மேற்பட்ட படங்கள் 5000 பாடல்கள் என தனது வாழ்நாளை இசைக்காக அர்பனித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான விடுதலை 2 படத்தில் இடம்பெற்ற பாடல்கள் வரை ரசிகர்களை தன்வசப்படுத்தினார். தற்போது இந்தியாவில் முதல்முறையா சிம்ஃபனி ஒன்றை உருவாக்கியுள்ளார் இளையராஜா. இசையில் மேதையாக கருதப்படும் இளையராஜாவின் பேச்சுக்கள் பல சமயங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. அவரது கருத்துக்களுக்கு ஆதரவும் எதிர்வினைகளும் சம அளவில் இருந்து வருகின்றன. அந்த வகையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இளையராஜா பேசியுள்ளது மீண்டும் சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

எனக்கு ஏன் கருவம் இருக்கக் கூடாது ?

” உங்களை கட்டிப்போட வேண்டும் என்று நான் இசையமைக்கவில்லை. நான் ஒரு ட்யூனை உருவாக்குகிறேன் அது உங்களுக்கு இசைக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியாக தெரிகிறது. வயிற்றில் அசைவே இல்லாத ஒரு குழந்தைக்கு என்னுடைய இசை உயிரை கொடுத்திருக்கிறது. சிங்கப்பூரில் பெண் ஒருவரின் குழந்தை வயிற்றில் குழந்தை அசையாமல் இருந்திருக்கிறது. அந்த பெண் திருவாசகம் கேட்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். திருவாசகம் கேட்டது அந்த குழந்தைக்கு உயிர் வந்திருக்கு. தூக்கம் இல்லாமல் மதம் பிடிக்கும் எல்லைக்கு போன கோயின் யானை என்னுடைய தாலாட்டு பாட்டை கேட்டு தூங்கியிருக்கு. மலைப்பகுதியை ஒட்டிய ஒரு தியேட்டரில் ஒரு படம் ஓடிக் கொண்டிருக்கிறது. அப்போது நான் இசையமைத்த ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு பாட்டு ஓடுகிறது. அந்த பாட்டைக் கேட்க ஒரு பெரிய யானை கூட்டம் வந்து அந்த பாட்டை அமைதியாக கேட்டு திரும்பி செல்கிறது. உலகத்தில் எந்த இசையமைப்பாளருக்காவது இப்படி நடந்திருக்கா. இதை எல்லாம் நான் சொன்னால் எனக்கு தலைக்கனம் அதிகம் என்று சொல்வார்கள். எனக்கு வராமல் வேற எவனுக்குடா வரும்..எனக்குதான் கர்வம் அதிகம் இருக்கனும். ஏனால் உலகத்தில் யாராலும் செய்ய முடியாததை நான் செய்துகொண்டிருக்கிறேன். எனக்கு திமிரு இல்லாமல் எப்படி இருக்கும். ஆனால் எனக்கு திமிரு இல்லை . எனக்கு திமிரு என்று சொல்பவனுக்கு எவ்வளவு திமிரு இருக்கனும். விஷயம் இருக்கவன்கிட்ட கர்வம் இருக்காதா? ” என இளையராஜா பேசியுள்ளார்

Related Post

சோனியின் புதிய தமிழ் அலைவரிசை!

Posted by - February 9, 2026 0
சோனி நிறுவனம் தனது புதிய தமிழ் அலைவரிசையை அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் பல சர்வதேச நிறுவனங்கள் தமிழ் மொழிக்கு ஏற்ப சில வித்தியாசமான முயற்சிகளுடன் தொடர்ந்து…

ஆளுநர் பிரச்சினை ஓவர்! அடுத்து ’நீட்’தான்! திமுகவின் அடுத்த ப்ளான் ரெடி!

Posted by - April 9, 2025 0
நீட் விலக்கு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. நீட் விலக்கு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில்…

ஆப்பு வைக்கும் ஆன்லைன் “LOAN APP”கள்!

Posted by - March 20, 2025 0
தமிழ்நாட்டில் லோன் ஆப் செயலியை பயன்படுத்தி சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவதாக , காவல்துறை சமீபத்தில் ஒரு அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டிருக்கிறார்கள்… ஆன்லைன் கடன் செயலி மூலம்…

திமுகவையும், காங்கிரஸையும் நிராகரிக்க சென்னை தயாராக உள்ளது : பிரதமர் மோடி

Posted by - April 10, 2024 0
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், இந்த ஆற்றல் மிக்க நகரத்தில் ரோட்ஷோ என் நினைவில் என்றும் நிலைத்திருக்கும். மக்கள் சேவையில் தொடர்ந்து கடினமாக உழைக்கவும்,…

முடிந்தது 1st Sitting பேச்சுவார்த்தை மீண்டும் இணையும் இலை!…

Posted by - November 9, 2023 0
தமிழகத்தில் பிரபல ஊடகவியலாளரின் YOUTUBE ஊடகம் ஒன்று  ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணியினரின் முதலாம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் அனைத்துகட்ட பேச்சுவார்த்தைகளும் முடிந்து இரண்டு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *