Restrictions | கொரோனா மீண்டும் தலைதூக்கும் நிலையில் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கையை தொடங்கியுள்ளன
கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கர்நாடக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.சீனா உள்பட சில நாடுகளில் கொரோனா நோய் தொற்றில் பரவல் அதிகரித்து வருவதையடுத்து, கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளிகளை பின்பற்றுவது போன்ற பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற மாநில அரசுகளுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்த கர்நாடக அரசு, இந்த ஆண்டும் சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
இது குறித்து பேசிய மாநில சுகாதாரத்துறை அமைச்சர் , திரையரங்குகள், பள்ளி, கல்லூரிகளில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றார். மேலும்,
உணவகங்கள், நட்சத்திர விடுகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், புத்தாண்டு கொண்டாட்டங்கள் அனைத்தும் நள்ளிரவு 1 மணிக்குள் நிறைவடைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.