“ஸ்டாலின் பற்ற வைத்த தீ.. இந்தியா முழுவதும் காட்டுத்தீயா பரவி இருக்கு” கொதிக்கும் உதயநிதி!

170 0

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் பற்றவைத்த சுயமரியாதை நெருப்பு இந்தியா முழுவதும் காட்டுத்தீ போல பரவியுள்ளது என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

மும்மொழிக் கொள்கை, நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக முதல்வர் மு.க. ஸ்டாலின் பற்றவைத்த சுயமரியாதை நெருப்பு இந்தியா முழுவதும் காட்டுத்தீ போல பரவியுள்ளது என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார். பல தென்மாநிலத் தலைவர்கள் நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு குறித்து பேச ஆரம்பித்து இருக்கிறார்கள் என கூறியுள்ளார். ஸ்டாலினை தொடர்ந்து, கர்நாடக முதல்வர் சித்தராமையா, தெலங்கானா முன்னாள் அமைச்சர் கே.டி. ராமாராவ் ஆகியோர் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அதிரடியாக பேசிய துணை முதல்வர் உதயநிதி:

சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அதில் பேசிய அவர், “புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் நிதி கொடுக்க மாட்டோம் என்று மத்திய கல்வி அமைச்சர் மிரட்டுகிறார்.

ஆனால், இவர் மிரட்டினால் பயப்பட நாம் அதிமுக அல்ல. திமுக. இங்கு எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடக்கவில்லை. மு.க. ஸ்டாலின் ஆட்சி நடக்கிறது என்பதை மத்திய அரசு உணர வேண்டும்” என்றார்.

தொடர்ந்து பேசிய துணை முதல்வர் உதயநிதி, “தமிழ்நாட்டில் இந்தி மொழியை திணிக்க முடியாது. தமிழ்நாட்டிற்குள் இந்தியை அனுமதித்தால் நம்முடைய தாய்மொழியே அழிந்துவிடும். தமிழ்நாட்டில் எப்பொழுதும் இருமொழிக்கொள்கைதான். இந்தியை திணிக்க குறுக்கு வழியில் மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. நீங்கள் மிரட்டினால் பயப்பட நாங்கள் அதிமுகவோ, எடப்பாடி பழனிசாமியோ கிடையாது.

“ஸ்டாலின் பற்றவைத்த நெருப்பு”

மும்மொழிக் கொள்கை, நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக முதல்வர் மு.க. ஸ்டாலின் பற்றவைத்த சுயமரியாதை நெருப்பு இந்தியா முழுவதும் காட்டுத்தீ போல பரவியுள்ளது. பல தென்மாநிலத் தலைவர்கள் நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு குறித்து பேச ஆரம்பித்து இருக்கிறார்கள்” என்றார்.

ஸ்டாலினின் குற்றச்சாட்டை தொடர்ந்து, தென் மாநிலங்களை சேர்ந்த தலைவர்கள் தொகுதி மறுசீரமைப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கர்நாடக முதல்வர் சித்தராமையா, தெலங்கானா முன்னாள் அமைச்சர் கே.டி. ராமாராவ் ஆகியோர் இதுகுறித்து பேசியுள்ளனர்.

ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்த கே.டி. ராமாராவ், “ஸ்டாலினுடன் நான் முழுமையாக உடன்படுகிறேன். மேலும், இந்த விஷயத்தில் அவரை முற்றிலும் ஆதரிக்கிறேன். தேசத்திற்கு மிகவும் தேவைப்படும்போது, ​​குடும்பக் கட்டுப்பாட்டு திட்டங்களை முறையாகசெயல்படுத்தியதற்காக தென் மாநிலங்களை நீங்கள் தண்டிக்க முடியாது.

தென் மாநிலங்களின் முயற்சிகளைக் கருத்தில் கொள்ளாமல் தொகுதி மறுசீரமைப்பை செயல்படுத்துவது ஜனநாயகம், கூட்டாட்சி இல்லை” என்றார்.

Related Post

இரட்டை இலை சின்னம் யாருக்கு.? சிதறுமா வாக்குகள்.. திரும்பும் எம்.ஜி.ஆர். கால வரலாறு!?

Posted by - February 3, 2023 0
AIADMK : ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு தனி சின்னத்தில் போட்டியிட்டால் யாருக்கு லாபம்? அதிமுக வாக்குகள் சிதறுமா? இரட்டை இலை சின்னம் முடங்க தான் காரணமாக…

விஜயை மட்டும் விடாமல் அடிக்கும் சீமான்.. அண்ணனுக்கே ஆபத்தா?

Posted by - September 15, 2025 0
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து விஜய்யை மட்டும் எல்லை மீறி விமர்சித்து வருவது அவருக்கே பின்னடைவாகும் ஆபத்து உள்ளதாக அரசியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தமிழ்நாட்டில்…

அமைச்சர் முத்துசாமியுடன் விவாதம் நடத்த தயார்.. சவாலுக்கு சம்மதம் சொன்ன அன்புமணி!

Posted by - October 29, 2025 0
திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் குறித்து அமைச்சர் முத்துசாமியுடன் விவாதம் நடத்த தயார் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று…

“பழம் நமக்குத்தான்” – அன்புமணி உற்சாகப் பேச்சு

Posted by - November 13, 2025 0
“தேர்தல் ஆணையம் என்னை அங்கீகாரம் செய்துவிட்டார்கள். மாம்பழம் சின்னத்தை நமக்கு தான் தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது; அதை ஒன்றும் செய்ய முடியாது” என்று பாமக தலைவர்…

அமைச்சர் மெய்யநாதனை புறக்கணிக்கிறாரா அமைச்சர் ரகுபதி?

Posted by - August 26, 2025 0
புதுக்கோட்டை மாவட்ட திமுக-வில் அமைச்சர்கள் ரகுபதியும் சிவ.வீ.மெய்யநாதனும் அசைக்கமுடியாத சக்தியாக இருப்பவர்கள். இதில், ரகுபதி புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் இருப்பதால் கூடுதல் அதிகாரத்துடன் கோலோச்சி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *