“எம்பி பதவியும் இல்ல.. அமைச்சர் பதவியும் இல்ல” நாம் தமிழரில் இருந்து விலகிய காளியம்மாளின் முதல் பேட்டி!

109 0

கச்சத்தீவு விவகாரம், தமிழ்நாடு மீன்பிடி சட்டத்திருத்தம் என திமுக-விற்கு எதிரான கருத்துக்களை நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள் பேசியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியில் இருந்து கடந்த சில மாதங்களாக நிர்வாகிகள் பலரும் விலகி வந்த நிலையில், அக்கட்சியின் முக்கிய பேச்சாளரான காளியம்மாள் கடந்த சில நாட்களுக்கு முன்பு விலகினார். இது நாம் தமிழருக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

எங்களுக்காக யாரும் இல்ல:

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய பிறகு காளியம்மாள் நிருபர்களுக்கு முதன்முறையாக பேட்டி அளித்தார். ராமேஸ்வரத்தில் அவர் கூறியதாவது, தமிழர்கள் கடலோர மக்களை ஒரு ஓரமாக ஒதுக்கிப் பார்க்கிறார்கள். எங்களுக்கான பெரிய பங்களிப்பு கிடையாது. ராஜ்யசபாவில் எங்களுக்காக பேசுறதுக்கு ஆளு கிடையாது. மக்களவையில் எங்களோட குறைகளைப் பேசுறதுக்கு யாரும் கிடையாது.

ஒரு சட்டத்தைத் திருத்துறாங்கனா கடலோர முறைப்படுத்துதல் சட்டம், நீர்கொள்கை, மீன்பிடி கொள்கையா இருக்கட்டும் யாரை கேட்டு அந்த கொள்கையை உருவாக்கியிருக்கீங்க? தேசிய மீன்வளக் கொள்கையை உருவாக்கியிருக்கிறது மத்திய அரசு. அதற்கு யாருடன் விவாதிக்கப்பட்டது. எந்த மக்களுடன் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது?

யாரை கேட்டு திருத்துனீங்க?

தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் திருத்தம் செய்றாங்க. அது யாரை கேட்டா திருத்துனீங்க? மீன்பிடிக்கப் போறது நாங்க. கேரளாவுல இருக்குற மீனவர்கள் கடலுக்கு பட்டா கேட்குறாங்க. எங்களுக்கே பட்டா இல்லாமல் நாங்க தவிக்குறோம். நாங்கள் மாற்றாந்தாய் பிள்ளைகளாக கூட நடத்தப்படவில்லை. ஏதிலிகள் போல நடத்தப்படுகிறோம். எங்களுக்கான எந்த உரிமையும் கிடையாது, சலுகையும் கிடையாது. மீன்வளத்துறை அமைச்சர்னு ஒரு பதவி. அதுவும் எங்களுக்கு இல்லை. எங்களோட பிரச்சினையை யார் இப்போது பேசப்போகிறார்கள்?

கடல்குடி மக்களா பிறந்தது குத்தமா?

ஒரு தாயை இழந்த பிள்ளையப் போல நாங்கள் இருக்கிறோம். இதுதான் யதார்த்தமான உண்மை. எங்களுக்கான உரிமையை கூட பெற முடியாத மக்களாகத்தான் நாங்கள் இருக்கிறோம். என் வீட்டுக்காரர் இலங்கையில் இருந்து வந்த பிறகு 60 நாள் நான் சிகிச்சை கொடுத்தேன். ஒவ்வொரு பெண்களும் என்ன பாவம் செய்தோம்? கடல் குடி மக்களாக பிறந்தது குத்தமா?

கச்சத்தீவு

எங்களோட கச்சத்தீவை கொடுத்துவிட்டு, எங்களோட நிலத்திற்கு நாங்கள் போகும்போது நீங்கள் அத்துமீறி வருகிறீர்கள்? என்கிறார்கள். இந்த எல்லைக் கோட்டை யாரு போட்டீங்க? இந்திய – இலங்கை அரசும் போடுவீங்களா? எங்களுக்கான பிரதிநிதித்துவத்திற்காகவாது எங்களை உட்கார வச்சுருக்கனும்ல? இது யாரால் வரையறுக்கப்பட்டது?

இவ்வாறு அவர் பேசினார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நாம் தமிழரில் இருந்து விலகிய காளியம்மாள் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. அவர் தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்க உள்ளதாக தகவல் கூறப்பட்டது. ஆனால், அவர் திமுக-வில் இணைய இருப்பதாகவும், அவருக்கு ராஜ்யசபா எம்பி பதவி வழங்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலம் தமிழ்நாடு மீன்பிடி சட்டத் திருத்தம், கச்சத்தீவு விவகாரம் என திமுக-விற்கு எதிராக காளியம்மாள் பேசியுள்ளார்.

Related Post

‘மார்ச் 1ல் முக்கிய முடிவு – மாநாடு’ திமுக மாஸ்டர் ப்ளான்..!

Posted by - February 9, 2026 0
’கே.என்.நேரு தலைமையில் ஏ.வே.வேலு உள்ளிட்டோரை உள்ளடக்கிய தொகுதி பங்கீட்டு குழுவை திமுக அமைக்கவிருப்பதாக கூறப்படுகிறது’ சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக தன்னுடைய  பிரச்சாரத்தை தீவிரமாக…

2 கோடி உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க இலக்கு.. தவெக அறிவிப்பு

Posted by - February 19, 2024 0
சென்னை பனையூரில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகளின் கூட்டத்திற்கு பிறகு அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக வெற்றிக் கழகம் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளது. கடந்த பிப்ரவரி…

யாருக்கும் பாதுகாப்பில்லாத ஆட்சி.. திமுக அரசு மீது விஜய் தாக்குதல்

Posted by - November 14, 2024 0
தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் தீவிர அரசியலில் இறங்கியுள்ள நிலையில் மக்களின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்தும், அறிக்கைகள் வெளியிட்டும் வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் தனது…

”நீர்த்துப் போன மாண்டஸ் புயல்.. பில்டப் செய்யும் ஸ்டாலின்”- எடப்பாடி பழனிசாமி பரபர பேச்சு!

Posted by - December 13, 2022 0
நீர்த்துப் போன மாண்டஸ் புயலை பேரிடர் என பில்டப் செய்வதா என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். திருப்பூர் குண்டடம் பகுதியில், மாற்று கட்சியினர் அதிமுகவில்…

மருத்துவமனையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஓய்வு!

Posted by - July 22, 2025 0
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் சென்னை  கிரீம்ஸ் சாலையில் உள்ள…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *