”கேஸ் வாங்குறதுலாம் துணிக்கடைல கட்டப்பை வாங்குற மாதிரி..” மீண்டும் சர்ச்சையில் சிக்கும் டிடிஎஃப் வாசன்!

197 0

செம்ம வெறி ஆகிட்டேன். டிடிஎஃப் பிராண்ட் உருவாக்க போறேன். யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வராதா? – டிடிஎஃப் வாசன்

நம்மை விரட்டியே காவல்துறையினரே நம்மை ராஜ மரியாதையுடன் அமர வைப்பார்கள் என யூட்யூப் பிரபலம் டிடிஎஃப் வாசன் பேசியுள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு, கடலூர் புதுப்பாளையம் பகுதியில் திரைப்பட இயக்குனர் செந்தில் செல்லம் என்பவரது கடலூர் அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக வாசன் வந்திருந்தார். இதனை முன்கூட்டியே அறிந்த டிடிஎஃப் வாசன் (Youtuber TTF Vasan) ஆதரவாளர்கள் அப்பகுதியில் குவிந்தனர்.

2 சக்கர வாகனங்களில் அதிவேகமாக வந்து பல்வேறு இடங்களில் வாகனங்களை நிறுத்தவும் செய்தனர். இதனால் புதுப்பாளையம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது கூட்டத்தை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

காரில் வந்த டிடிஎஃப் வாசன் அங்கு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு புறப்பட்டபோது அவரை வழியனுப்புவதற்கு மீண்டும் 2 சக்கர வாகனங்களில் அதிக அளவில் ஒலி எழுப்பியவாறு அவரது ஆதரவாளர்கள் வந்து கொண்டிருந்தனர். அண்ணா மேம்பாலம் அருகே வரும்பொழுது சாலையில் சென்றவர்கள் மீது இரண்டு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் ஆத்திரமடைந்த போலீசார் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களை பிடித்தனர்.

200க்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்தி அபராதம் விதித்து அவற்றை வசூல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேலும் உடன் வந்து வாகனங்கள் அனைத்தையும் செல்போன் மூலம் படம் எடுத்து அந்த வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர்.

முதலில் காவல்துறையினர் மீது தவறு இல்லை. அவர்கள் நல்ல விதத்தில் நடந்து கொண்டனர் என கூறிய வாசன், தற்போது காவல்துறையினர் தன்னிடம் பொய் சொல்லிவிட்டதாக தனது ரசிகர்களிடம் விளக்கம் அளித்தார்.

யூட்யூப் லைவ்வில் பேசிய அவர், “நம்மல விரட்டுன போலிஸ்காரங்களே நம்மல ராஜ மரியாதையோட ஒக்கார வைப்பாங்க. இது வாய் வார்த்தையா சொல்றது இல்ல” என பேசினார்.

மேலும், “நம்ம மேல 5 வழக்கு போட்ருகாங்க. இதுக்கு வருத்தப்படல. நம்ம தான் துணிக்கடைல கட்டப்பை வாங்குற மாதிரி கேஸ் வாங்குறோமே. என்னை அடிச்சிருந்தா கூட மன்னிச்சிருப்பேன். ஆனா அவங்க பசங்க மேல கை வச்சுட்டாங்க. நான் போலீஸ்ட கேட்டதுக்கு அவங்க கல் எடுத்து அடிச்சாங்க தம்பினு போலீஸ் பொய் சொன்னாங்க.

செம்ம வெறி ஆகிட்டேன். டிடிஎஃப் பிராண்ட் உருவாக்க போறேன். யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வராதா?” என தெரிவித்தார்.

Related Post

“மியூட் மோடில் திமுக அரசு” தீக்குளித்த விவசாயி.. பொங்கி எழுந்த இபிஎஸ்

Posted by - June 5, 2025 0
“80 வயது மூதாட்டிக்கு பாதுகாப்பு இல்லை என்பது எவ்வளவு வெட்கக்கேடான நிலை? ஒரு முதல்வராக இந்த செய்தியெல்லாம் ஸ்டாலினை ஏன் உறுத்தவில்லை?” என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.…

இந்த ஆட்சியில் பொதுமக்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

Posted by - January 27, 2024 0
சிவகங்கை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை அரிவாளால் கொடூரமாக வெட்டிவிட்டு, வீட்டில் உள்ள நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…

உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் Smoke Biscuit?? அதிரடி உத்தரவிட்ட உணவுப்பாதுகாப்புத்துறை

Posted by - April 25, 2024 0
ஸ்மோக் பிஸ்கட்களை, குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம் என தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது. திரவ நைட்ரஜனை பயன்படுத்தி தயாரிக்கும் ஸ்மோக் பிஸ்கட்டை சிறுவன் ஒருவர் உட்கொண்டு துடிதுடித்த…

ஒரு வயது குழந்தைக்கு அரிய வகை நோய்: சிகிச்சை செலவுக்காக ரூ.17½ கோடி உதவியை நாடும் பெற்றோர்

Posted by - July 29, 2023 0
சென்னை: சென்னை சேலையூரில் வசித்து வருபவர் ஆகாஷ் மிஸ்ரா. ஐ.டி. நிறுவன ஊழியரான இவருக்கு ஒரு வயதில் சிவான்ஷி என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை…

மகா சிவராத்திரி: ராமேசுவரம் கோவிலில் நாளை இரவு முழுவதும் நடை திறந்திருக்கும்

Posted by - February 17, 2023 0
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் மாசி சிவராத்திரி திருவிழா கடந்த 11-ந்தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள், சாமி புறப்பாடு நடைபெற்று வருகின்றது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *