கேலிச்சித்திரத்தை நீக்க வேண்டும் – விகடன் குழுமத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

97 0

பிரதமர் மோடி தொடர்பாக இணைதளம் வெளியிட்ட கேலி சித்திரத்தை நீக்க வேண்டும் என விகடன் குழுமத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடி சந்திப்புக்கு முன் விகடன் குழுமம் தனது இணைதள பக்கத்தில் கேலிச்சித்திரம் ஒன்றை வெளியிட்டது.

இது தொடர்பான புகாரின் அடிப்படையில் கடந்த 15ஆம் தேதி விகடன் இணையதளத்தை மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்புத்துறை முடக்கியது.

மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து விகடன் குழுமம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி பரத சக்ரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு தரப்பில், நட்பு நாடுகளில் உறவில் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் விகடன் கேலி சித்திரம் வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டது. விகடன் குழுமம் தரப்பில், கேலி சித்திரத்திரம் வெளியிட்டதற்காக ஒட்டு மொத்த இணையதளத்தையும் முடக்க அவசியமில்லை என வாதிடப்பட்டது.

இதனை பதிவு செய்த நீதிபதி, விகடன் இணையதளத்தில் இடம்பெற்றுள்ள பிரதமர் தொடர்பான கேலிச் சித்திரத்தை நீக்க வேண்டும் என விகடன் குழுமத்திற்கு உத்தரவிட்டார்.

 

 

மேலும், கேலி சித்திரத்தை நீக்கியது குறித்து மத்திய அரசுக்கு விகடன் குழுமம் தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும், அதன் அடிப்படையில் இணைதள முடக்கத்தை மத்திய அரசு நீக்க வேண்டும் எனவும் ஆணையிட்டார்.

Related Post

இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம்: சென்னையில் திடீரென மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

Posted by - December 30, 2025 0
சென்னை: சம வேலைக்கு சம ஊதி​யம் கோரி சென்​னை​யில் தொடர்ந்து 4-வது நாளாக போராட்​டம் நடத்​திய இடைநிலை ஆசிரியர்கள், திடீரென சாலை மறியலில் ஈடு​பட்​ட​தால் பரபரப்பு நில​வியது. தமிழகத்​தில்…

வங்க கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. வெளுக்கப்போகுது கனமழை!

Posted by - November 14, 2023 0
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், ஆங்காங்கே விடிய விடிய மழை கொட்டி தீர்த்து வருகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடற்பகுதிகளில் குறைந்த…

டி.பி.ஐ. வளாகத்தில் ஆசிரியர்கள் போராட்டம்: 4 நாட்களில் 79 ஆசிரியர்கள் மயக்கம் ..

Posted by - December 30, 2022 0
போராட்டத்தில் நேற்று வரை 69 ஆசிரியர்-ஆசிரியைகள் மயக்கம் அடைந்தனர். இன்று காலை 10 பேர் மயக்கம் அடைந்து மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை: சம…

வேங்கை வயல் சம்பவத்தில் பட்டியல் சமூக மக்களை திமுக ஏமாற்றுகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு

Posted by - April 16, 2024 0
வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் நடந்து, கிட்டத்தட்ட 16 மாதங்கள் கடந்தும் குற்றவாளிகள் கைது செய்யாமல் இருப்பதற்கு அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது…

ரஜினி இதெல்லாம் விட்டறலாமே.. ரசிகர்கள் கெட்டுட போறாங்க.. ஜானகி அம்மாவிடம் எம்ஜிஆர் வருத்தம்

Posted by - November 26, 2024 0
தமிழ் சினிமாவில் எம்.கே. தியாகராஜ பாகவதருக்குப் பின் சூப்பர் ஸ்டாராக ஜொலித்தவர் எம்.ஜி.ஆர். இவர் ரஜினியைப் பற்றி ஜானமி அம்மாவிடம் கூறிய சம்பவத்தை ரஜினி பகிர்ந்துள்ளார். முன்னாள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *