வீட்டு கேஸ் சிலிண்டர் விலையை தடாலடியாக உயர்த்திய மத்திய அரசு!

206 0

 விலை அதிகரிப்பால் மானிய விலையில் பெறும் கேஸ் சிலிண்டர் விலை 803 ரூபாயில் இருந்து 853 ரூபாயாக அதிகரிக்க உள்ளது.

வீட்டு உபயோகத்துக்கான கேஸ் சிலிண்டர் விலையை 50 ரூபாய் அளவுக்கு மத்திய அரசு உயர்த்தி உள்ளதாக, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார். இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விலை எவ்வளவு அதிகரிக்கும்?

இதன்மூலம் மானிய விலையில் பெறும் கேஸ் சிலிண்டர் விலை 803 ரூபாயில் இருந்து 853 ரூபாயாக அதிகரிக்க உள்ளது.

சென்னையைப் பொறுத்தவரையில் வீட்டு உபயோக 14.2 கிலோ சிலிண்டரின் விலை 818.50 ரூபாயாக இருந்தது. விலை உயர்வுக்குப் பிறகு நாளை 868.5 ரூபாயாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டரின் விலை, 1,965 ரூபாயில் இருந்து 2015 ரூபாயாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் உஜ்வாலா திட்டத்தின்கீழ் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறும் மக்களுக்கான சிலிண்டர் விலை 500 ரூபாயில் இருந்து 550 ரூபாயாக அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

விலை உயர்வுக்கு என்ன காரணம்?

எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்டும் வகையில், இந்த விலை உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாக, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார். மேலும் குறைந்த விலையில் சமையல் எரிவாயுவை விற்பனை செய்வதால், 41 ஆயிரத்து 338 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்து வருவதாகவும் அதை ஈடுகட்டவே கேஸ் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டதாகவும் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

கலால் வரி உயர்வு

முன்னதாக, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை மீதான கலால் வரியை மத்திய அரசு லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியது. இந்த கலால் விலை உயர்வு நாளை (ஏப்ரல் 8ஆம் தேதி) முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த கலால் வரி உயர்வால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இருக்காது என்று மத்திய அரசு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related Post

ஒரு நாளுக்கு 26 சிகரெட் பிடிப்பதற்கு சமம்… 441 ஐ எட்டிய டெல்லி காற்றுமாசு.. நிலை 3 செயல்திட்டம் அமல்

Posted by - November 15, 2024 0
டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்தும் விதமாக புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலக்கு வருகிறது. தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப், ஹரியானா…

சனிக்கிழமைகளில் இந்த 5 விஷயங்களை தவறி கூட செய்யாதீங்க… இல்லன சனி பகவானின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்!

Posted by - November 30, 2024 0
சனிபகவானின் கோபத்தை தூண்டும் செயல்களை செய்யாமல் அவரை சாந்தப்படுத்த நாம் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. சனிக்கிழமையன்று செய்யக்கூடாத 5 விஷயங்களை இப்போது தெரிந்துகொள்ளலாம். சனி…

கொட்டும் மழையில் ஐந்தரை வயது சிறுமிக்காக அவசர அவசரமாக வந்திறங்கிய இதயம்… நெகிழ வைத்த ஊழியர்கள்!

Posted by - April 24, 2023 0
திருமலை திருப்பதி தேவஸ்தான குழந்தைகள் இதய நல மருத்துவமனையின் மூன்றாவது இதயமாற்று அறுவை சிகிச்சை, வெற்றிகரமாக நடந்துள்ளது. திருப்பதியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் குழந்தைகள் இதய…

தங்கம் விலை அதிர்ச்சிகர உச்சம்: பவுன் ரூ.97,000-ஐ கடந்தது!

Posted by - October 17, 2025 0
சென்னை: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை இன்று (அக்.17) வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அதன்படி, தங்கம் விலை ஒரு பவுன் ரூ.97,000-ஐ தாண்டி…

எமோஷனலாக பேசிய பிரதமர் மோடி.. “ஏழைகளின் நலனே முக்கியம்.. கருணையுள்ள அரசு”

Posted by - June 5, 2025 0
ஏழைகள் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கருணையுடன் கூடிய மத்திய அரசு, கடந்த பத்தாண்டுகளில், வறுமையின் பிடியிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கு பல்வேறு முன்னோடித் திட்டங்களை செயல்படுத்தியுள்ளது என பிரதமர் மோடி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *