போன் தொலைஞ்சா, அக்கவுண்ட்ல காசு காணாம போனா இனி போலீசுக்கு போக வேண்டாம்.. இந்த நம்பருக்கு ஒரு கால் போதும்

214 0

Cybercrime: சைபர் கிரைம் தற்போது இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலக அளவில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பணப்பரிவர்த்தனை எல்லாம் டிஜிட்டல் மயமானதிலிருந்து அக்கவுண்டில் இருந்து பணம் எப்படி போகிறது என தெரியாமல் நிறைய பேர் சொந்த காசை இழந்து வருகிறார்கள்.

சமீபத்தில் ஒருவர் ஆன்லைனில் ஆர்டர் செய்துவிட்டு அதற்கான விருப்ப படிவங்களை பூர்த்தி செய்து இருக்கிறார்.

கொஞ்ச நேரத்தில் அவர் அக்கவுண்டில் இருந்த 60,000 அபேஸ் ஆகி இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் பேங்கில் இருந்து போன் பண்ணுகிறேன், வேலைவாய்ப்பு கொடுக்கிறோம், ஏடிஎம் லாக் ஆகிவிடும் என எக்கச்சக்க போன் கால்களில் பணத்தை சுருட்ட பல திட்டங்களை போட்டு இருக்கிறது நாச கும்பல்.

பணம் இழந்த பிறகு அதை மீண்டும் மீட்டெடுப்பது என்பது பெரிய விஷயம். போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து, அது சைபர் க்ரைம் வழக்காக மாற்றி ஆளை கண்டுபிடிப்பதற்குள் பறிபோன பணத்தை விட அதிகமாகவே செலவாகி விடுகிறது.

தற்போது இந்த பிரச்சனைக்கு தமிழக காவல்துறை ஒரு புதிய வழியை சொல்லி இருக்கிறது. இது போன்ற சைபர் கிரைம் நடந்தால் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து புகார் கொடுக்க வேண்டிய அவசியம் எல்லாம் இல்லை. 1930 நம்பர் இருக்கு போன் பண்ணி என்ன நடந்தது என்று சொன்னால் போதும்.

போன் தொலைந்து போனால் அந்த போனின் ஐபிஎம் நம்பரை கண்டுபிடித்து உடனே லாக் செய்து விடுகிறார்கள். அதேபோன்று திடீரென வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்படுகிறது என்றால் இந்த நம்பருக்கு புகார் கொடுத்தால் அந்த வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியாத அளவிற்கு லாக் செய்து விடுகிறார்கள். பணத்தை இழந்து பரிதவிபோருக்கு இது ஒரு பேருதவியாக இருக்கும்.

Related Post

AI துறையில் பெருகும் வேலை வாய்ப்பு… சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Posted by - December 14, 2024 0
இளைஞர்கள் மத்தியில் சேர்க்கை நுண்ணறிவு துறை அதிக வரவேற்பை பெற்று வருகிறது இப்போது AI இன்ஜினியரிங் துறையில் சிறந்த வேலைகள் எவை மற்றும் அதில் எவ்வளவு சம்பளம்…

இந்தியாவின் 2ஆம் உயர் பதவி; தமிழ்நாட்டுக்கு கிடைத்த கவுரவம்; குடியரசு துணை தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன்!

Posted by - September 10, 2025 0
சி.பி.ராதாகிருஷ்ணன் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு, இந்தியாவின் இரண்டாவது உயரிய பதவியான குடியரசு துணைத் தலைவர் ஆகியுள்ளார். இந்தியத் திருநாட்டின் குடியரசுத் துணைத் தலைவராக தேசிய…

மீனாட்சி அம்மன் கோவில் அருகில் ஷாரிக் தங்கி இருந்தாரா?- கர்நாடக தனிப்படை விசாரணை

Posted by - November 26, 2022 0
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மிக அருகில் ஷாரிக் 2 நாட்கள் தங்கி இருந்து உள்ளான். மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக…

உஷார் மக்களே! Whatsapp-ல் உலா வரும் வைரஸ்; தொட்டால் சோலி முடிஞ்சு… உடனே Delete பண்ணுங்க

Posted by - December 31, 2024 0
SBI ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி பெயரில் போலியாக உலாவும், வாட்ஸாப் லிங் கை தொட்டால், உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் பறிபோய் விடும்…

ஜி20 மாநாடு எதிரொலி – பாதுகாப்பு பணியில் 1.30 லட்சம் போலீசார்

Posted by - September 8, 2023 0
புதுடெல்லி: ஜி20 கூட்டமைப்பின் 18-வது உச்சி மாநாடு இந்திய தலைநகர் புதுடெல்லியில் பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டப மாநாட்டு மையத்தில் செப்டம்பர் 9 மற்றும் 10…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *