இந்தியாவின் 2ஆம் உயர் பதவி; தமிழ்நாட்டுக்கு கிடைத்த கவுரவம்; குடியரசு துணை தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன்!

185 0

சி.பி.ராதாகிருஷ்ணன் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு, இந்தியாவின் இரண்டாவது உயரிய பதவியான குடியரசு துணைத் தலைவர் ஆகியுள்ளார்.

இந்தியத் திருநாட்டின் குடியரசுத் துணைத் தலைவராக தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரும் தமிழருமான சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது, குடியரசுத் தலைவர் பதவிக்கு அடுத்தபடியாக, நம் நாட்டின் இரண்டாவது உயரிய பதவி ஆகும்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில், வெற்றிக்கு 391 வாக்குகள் தேவை என்ற நிலையில், 452 வாக்குகளை பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம், நாட்டின் 15-வது குடியரசு துணைத் தலைவராக பதவியேற்க உள்ளார் சி.பி. ராதாகிருஷ்ணன்.

சொந்த ஊர், குடும்பம்

சி.பி.ராதாகிருஷ்ணன் கொங்கு மண்டலத்தில், திருப்பூர் மாவட்டம், சந்திராபுரத்தைச் சேர்ந்தவர். 1957ஆம் ஆண்டு பிறந்த ராதாகிருஷ்ணனின் தந்தை பொன்னுசாமி, தாய் ஜானகி ஆவர். 1985ஆம் ஆண்டு சுமதி என்பவரை சிபிஆர் மணந்தார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

ஆர்எஎஸ்எஸ் பின்புலம்

16 வயதிலேயே ஆர்.எஸ்.எஸ்ஸில் இணைந்த ராதாகிருஷ்ணன், பாரதிய ஜன சங்கத்திலும் இருந்துள்ளார். பின்பு பாஜகவில் இணைந்தார். பாஜகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்த சிபிஆர் 1996-ல் தமிழக பாஜகவின் பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளார்.

பாஜக மாநிலத் தலைவராகப் பொறுப்பு வகித்தவர், அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைக்க முக்கியக் காரணமாக இருந்தார். பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

அரசு உயர் பதவிகள்

கட்சிப் பொறுப்புகளைத் தொடர்ந்து, அரசுப் பொறுப்புகளையும் சி.பி.ஆர். வகித்துள்ளார். இந்திய தென்னை நார் வாரியத் தலைவராகப் பணியாற்றிய அவர், ஜார்க்கண்ட் ஆளுநராகவும் பதவியேற்றார்.

தெலங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் பொறுப்பு ஆளுநராகப் பணியாற்றிய அவர், கடைசியாக மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநராகப் பொறுப்பு வகித்து வந்தார். தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு, இந்தியாவின் இரண்டாவது உயரிய பதவியான குடியரசு துணைத் தலைவர் ஆகியுள்ளார். இது தமிழருக்குக் கிடைத்த கவுரவம் என நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

முன்னதாக குடியரசு துணைத் தலைவர் ஆக இருந்த ஜெகதீப் தன்கர், தன் பதவியை ராஜினாமா செய்த நிலையில், தேர்தல் அறிவிப்பு வெளியானது. இதில் எதிர்க் கட்சிகளின் இண்டி கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி களம் இறங்கினார். இந்தத் தேர்தல் இன்று (செப்.9) காலை 10 மணி முதல் 5 மணி வரை நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி உட்பட மக்களவை, மாநிலங்களை உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

இந்தத் தேர்தல் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Post

முதல் நாளே ஹிட் அடித்த பிரீமியர் எனர்ஜிஸ் ஐபிஓ…. ரூ.450 முதலீடு செய்திருந்தால் ரூ.990 கிடைத்திருக்கும்… ஒரே நாளில் 120% லாபம்..

Posted by - September 4, 2024 0
பிரீமியர் எனர்ஜிஸ் நிறுவனத்தின் ஐபிஓ பங்குகள்  பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டன. முதல் நாள் பங்கின் விலை 120 சதவிகிதம் பிரீமியம் விலையில் வர்த்தகத்தை தொடங்கியது. அதாவது ரூ.450க்கு வாங்கிய…

இன்றைய பங்குச் சந்தையில் இந்த 5 பங்குகளை வாங்கலாம்.. கிரீன் சிக்னல் கொடுத்த சந்தை நிபுணர்!

Posted by - August 5, 2024 0
அமெரிக்க நாட்டின் பொருளாதார மந்தநிலையால், உலக அளவில் பங்குச் சந்தைகள் கடுமையான சரிவை சந்தித்துள்ளன. குறிப்பாக வெள்ளிக்கிழமை இந்திய பங்குச் சந்தை கடும் சரிவை சந்தித்தது. வெள்ளிக்கிழமை…

ரூ.500 கோடி சொத்து மதிப்பு கொண்ட அல்லு அர்ஜுன் திடீர் கைது.. என்ன நடந்தது..?!

Posted by - December 13, 2024 0
ஹைதராபாத்தில் டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற்ற அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 திரைப்பட வெளியீட்டு விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் ஒரு பெண் இறந்தது தொடர்பாக,…

இனி டேட்டாவிற்கு பணம் கட்ட வேண்டாம்… புதிய பிளான்களை அறிமுகம் செய்த ஏர்டெல், ஜியோ…

Posted by - January 23, 2025 0
செல்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், இனி டேட்டாவிற்கு பணம் செலுத்தாமல், வாய்ஸ் கால் மட்டும் பேசும் வகையில், புதிய பிளான்களை ஜியோ மற்றும் ஏர்டெல் அறிமுகம் செய்துள்ளன. செல்போன்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *