இந்தியாவிற்கு ஆப்பு வைக்கும் ஆப்கானிஸ்தான்; சீனா, பாகிஸ்தானுடன் கைகோர்ப்பு – நடந்தது என்ன.?

161 0

சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்திற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அந்த வழித்தடத்தை ஆப்கானிஸ்தான் வரை நீட்டிக்க இன்று 3 நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

சீனாவில் நடைபெற்ற கூட்டத்தின் போது, சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை, ஆப்கானிஸ்தான் வரை நீட்டிக்க, மூன்று நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த திட்டத்திற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஆபரேஷன் சிந்தூரின் போது இந்தியாவிற்கு ஆதரவளித்த ஆப்கானிஸ்தான், தற்போது சீனாவுடன் கைகோர்த்துள்ளது.

சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம்

சீனா, பாகிஸ்தானில் ஏராளமான முதலீட்டை செய்துள்ளது ஏற்கனவே தெரிந்த விஷயம்தான். அதில் முக்கியமான ஒன்று, சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம். இது வடக்கு-தெற்கு பொருளாதார பாதை எனவும் அழைக்கப்படுகிறது. இந்த வழித்தடம், பல்வேறு திட்டங்களை உள்ளடக்கிய முக்கியமான பொருளாதார பாலம். இதன் மொத்த கட்டுமானச் செலவு சுமார் 54 பில்லியன் டாலர்களாகும்.

சிபிஇசி என அழைக்கப்படும் இந்த வழித்தடம், சீனாவின் காசர் நகரையும், பாகிஸ்தானின் குவாடர் நகரையும் சாலை, குழாய்கள், இருப்புப் பாதை வழியே இணைக்கும் திட்டமாகும். இந்த பொருளாதார பாதை, பாகிஸ்தானின் உள்கட்டமைப்பை விரைவாக மேம்படுத்துவதுடன், இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார உறவை பலப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படுகிறது. மேலும், உள்கட்டமைப்பு மட்டுமல்லாமல், சீனாவிற்கும் பாகிஸ்தானுக்கு இடையேயான ஒத்துழைப்புப் பகுதிகளையும் இத்திட்டம் கொண்டுள்ளது. இது ஒருபுறமிருக்க, இந்த வழித்தடத்தால், ஐரோப்பாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகம் மேம்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தான் வரை நீட்டிக்கப்படும் சிபிஇசி

இந்த சீனா-பாகிஸ்தான் பொருளாதாரப் பாதை ஆப்கானிஸ்தான் வரை நீட்டிக்கப்பட உள்ளது. இன்று சீனாவின் பெய்ஜிங்கில் மூன்று நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும் பங்கேற்ற கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில், சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெறியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் தார் மற்றும் ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முத்தகி ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த முத்தரப்பு சந்திப்பின்போது, சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை, ஆப்கானிஸ்தான் வரை நீட்டிக்க 3 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் தேசிய கண்ணியத் பாதுகாக்க சீனா ஆதரவளிப்பதாக, சீன வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. இத்தகவலை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தர் தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படத்துடன் உறுதி செய்துள்ளார்.

Related Post

’’எனக்கு END-ஏ கிடையாதுடா’’ நேரலையில் பேசப்போகும் நித்தியானந்தா! வெளியான அறிவிப்பு- எப்போது?

Posted by - April 2, 2025 0
நேரத்தை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்திய நேரப்படி ஏப்ரல் 3ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு நித்தியானந்தா நேரலையில் பேசுவார்- கைலாசா. பிரபல ஆன்மிகவாதியான நித்தியானந்தா இறந்துவிட்டதாகத்…

அமெரிக்காவில் எலும்பை உறைய வைக்கும் குளிர்.. சமாளிக்க முடியாமல் 22 பேர் பலி!

Posted by - December 27, 2022 0
கடும் பனியுடன் மணிக்கு 65 மைல் வேகத்தில் காற்றும் வீசுவதால் மக்கள் வீடுகளுக்குள் முடக்கம் அமெரிக்காவில் வீசும் பனிப்புயலால் 22 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் பெரும்பாலான மாகாணங்களில்…

உலகம் முழுவதும் திடீரென முடங்கிய பேஸ்புக், இன்ஸ்டாகிராம் – பயனர்கள் தவிப்பு.!

Posted by - March 6, 2024 0
பேஸ்புக்கை விட ரீல்ஸ்கள் நிறைந்த இன்ஸ்டா முடங்கியது பலரையும் ஏமாற்றம் அடைய வைத்தது. மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் முடங்கியதால், பயனாளர்கள் தவிப்புக்கு ஆளாகினர்.…

பக்கா ஸ்கெட்ச்.. வணிக வளாகத்தில் வன்முறை, கோடிக்கணக்கில் கொள்ளை.. 50 பேர் கும்பல் வெறிச்செயல்

Posted by - August 15, 2023 0
அமெரிக்காவின் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் உள்ளது கனோகா பூங்கா (Canoga Park). இதன் அருகே உள்ளது வெஸ்ட்ஃபீல்ட் டோபங்கா வணிக வளாகம் (Westfield Topanga shopping…

மோடி பார்த்த வேலை? இந்திய விமானங்களை சுட்டு தள்ளிய பாக்., போட்டுக் கொடுத்த ராணுவ அதிகாரி?

Posted by - June 30, 2025 0
இந்திய அரசியல் தலைவரின் நிலைப்பாடு காரணமாகவே, ஆப்ரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானால் நமது விமானங்கள் சில சுட்டு வீழ்த்தப்பட்டதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்திய அரசியல்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *