இந்தியாவிற்கு ஆப்பு வைக்கும் ஆப்கானிஸ்தான்; சீனா, பாகிஸ்தானுடன் கைகோர்ப்பு – நடந்தது என்ன.?

166 0

சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்திற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அந்த வழித்தடத்தை ஆப்கானிஸ்தான் வரை நீட்டிக்க இன்று 3 நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

சீனாவில் நடைபெற்ற கூட்டத்தின் போது, சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை, ஆப்கானிஸ்தான் வரை நீட்டிக்க, மூன்று நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த திட்டத்திற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஆபரேஷன் சிந்தூரின் போது இந்தியாவிற்கு ஆதரவளித்த ஆப்கானிஸ்தான், தற்போது சீனாவுடன் கைகோர்த்துள்ளது.

சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம்

சீனா, பாகிஸ்தானில் ஏராளமான முதலீட்டை செய்துள்ளது ஏற்கனவே தெரிந்த விஷயம்தான். அதில் முக்கியமான ஒன்று, சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம். இது வடக்கு-தெற்கு பொருளாதார பாதை எனவும் அழைக்கப்படுகிறது. இந்த வழித்தடம், பல்வேறு திட்டங்களை உள்ளடக்கிய முக்கியமான பொருளாதார பாலம். இதன் மொத்த கட்டுமானச் செலவு சுமார் 54 பில்லியன் டாலர்களாகும்.

சிபிஇசி என அழைக்கப்படும் இந்த வழித்தடம், சீனாவின் காசர் நகரையும், பாகிஸ்தானின் குவாடர் நகரையும் சாலை, குழாய்கள், இருப்புப் பாதை வழியே இணைக்கும் திட்டமாகும். இந்த பொருளாதார பாதை, பாகிஸ்தானின் உள்கட்டமைப்பை விரைவாக மேம்படுத்துவதுடன், இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார உறவை பலப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படுகிறது. மேலும், உள்கட்டமைப்பு மட்டுமல்லாமல், சீனாவிற்கும் பாகிஸ்தானுக்கு இடையேயான ஒத்துழைப்புப் பகுதிகளையும் இத்திட்டம் கொண்டுள்ளது. இது ஒருபுறமிருக்க, இந்த வழித்தடத்தால், ஐரோப்பாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகம் மேம்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தான் வரை நீட்டிக்கப்படும் சிபிஇசி

இந்த சீனா-பாகிஸ்தான் பொருளாதாரப் பாதை ஆப்கானிஸ்தான் வரை நீட்டிக்கப்பட உள்ளது. இன்று சீனாவின் பெய்ஜிங்கில் மூன்று நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும் பங்கேற்ற கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில், சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெறியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் தார் மற்றும் ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முத்தகி ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த முத்தரப்பு சந்திப்பின்போது, சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை, ஆப்கானிஸ்தான் வரை நீட்டிக்க 3 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் தேசிய கண்ணியத் பாதுகாக்க சீனா ஆதரவளிப்பதாக, சீன வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. இத்தகவலை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தர் தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படத்துடன் உறுதி செய்துள்ளார்.

Related Post

காயம் அடைந்தவர்கள், வெளிநாட்டினர் வெளியேற காசா எல்லை திறக்கப்பட்டது

Posted by - November 2, 2023 0
ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் காசா மீது அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் காசா பகுதி சீர்குலைந்துள்ளது. ஹமாஸ் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து, இஸ்ரேல் ஏவுகணை…

பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்.. அனுமதியுடன் சொல்கிறேன்.. பழ.நெடுமாறன் பரபரப்பு பேட்டி..!

Posted by - February 14, 2023 0
விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் தமிழர் தேசிய முன்னணி அமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை ராணுவம்…

திருப்பி அடித்த சீனா.. வெந்த புண்ணில் பாய்ந்த வேல்.. தாங்குவாரா ட்ரம்ப்..?

Posted by - April 5, 2025 0
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த பரஸ்பர வரிகளால் உலகம் முழுவதும் பங்குச்சந்தைகள் வீழ்ந்துள்ளன. குறிப்பாக அமெரிக்காவில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், சீனா அதே அளவு வரியை…

இந்த மாத இறுதியில் சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை கடலில் விடுகிறது ஜப்பான்

Posted by - August 7, 2023 0
ஜப்பானில் 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், ஒரு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் விளைவாக ஏற்பட்ட சுனாமியினால் பெரும் கடல் அலைகள் ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையத்தின்…

தவறுதலாக வீட்டு முகவரிக்கு ஆணுறை ஆர்டர் செய்த வாலிபர்- தாயின் கைக்கு கிடைத்ததால்…

Posted by - July 8, 2023 0
அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் வரை எல்லாவற்றையும் ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஆன்லைனில் ஆணுறை (காண்டம்) ஆர்டர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *