‘சஸ்பெண்ட் செய்யப்படுகிறாரா பொன்முடி?’ பதவியை பிடுங்கியும் வாய் பேசுவதால் திட்டம்..!

159 0

”பொன்முடி மீது நடவடிக்கை எ டுக்கவில்லையென்றால் விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டி வரும் மற்ற நிர்வாகிகளின் பணிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், இது பற்றி திமுக தலைமை ஆலோசனை”

விழுப்புரம் மாவட்டம் என்றாலே ‘பொன்முடி’ என்று இருந்த காலம் ஒன்று இருந்தது. ஆனால், அந்த பெயரை தன் வாயாலேயே கெடுத்துக்கொண்டிருக்கிறார் பொன்முடி. அதனால், அவரது கட்சி பதவியான துணைப் பொதுச்செயலாளர் என்ற முக்கிய பொறுப்பை முதல்வர் மு.க.ஸ்டாலினே நேரடியாக பறித்தார். பின்னர், அவரது அமைச்சர் பொறுப்பும் அவரிடமிருந்து பறிக்கப்பட்டது. இதனால், தான் கட்டி ஆண்ட விழுப்புரம் மாவட்டத்தில் தன் புகைப்படம் கூட கட்சி பேனர்களில் இடம் பெறாத போன நிலை இருந்தாலும், தொடர்ந்து தன்னுடைய ஆதரவாளர்களிடம் பேசி வரும் பொன்முடி, தன் பதவியை பறித்த கட்சி தலைமையையும் இதற்கு காரணமானவர்களையும் கடுமையாக விமர்சித்து பேசி வருவதாக பரபரப்பு தகவல் அறிவாலயத்திற்கு சென்றிருக்கிறது.

திமுக தலைமை, அதிகாரிகளை அவதூறு பேசும் பொன்முடி?

கட்சி பொறுப்பும், அமைச்சர் பொறுப்பும் பறிக்கப்பட்ட பொன்முடி, அதனை தாங்கிக் கொள்ள முடியாமலும் தன்னுடைய உள்ளக் குமுறலை வெளிப்படுத்த முடியாமல் இருந்து வந்தார். குறிப்பாக, கட்சி பதவி பறிப்புக்கு பிறகு முதல்வரை சந்திக்க சென்னை கிளம்பிய பொன்முடிக்கு பாசிட்டிவாக எந்த பதிலும் முதல்வர் தரப்பிலிருந்து வரவில்லை. அதற்கு காரணம், பொன்முடிக்கு எதிராக திமுகவின் இன்னொரு துணைப் பொதுச்செயலாளரும் முதல்வரின் தங்கையுமான கனிமொழியே பகிரங்கமாக தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவு செய்ததுதான். அதுமட்டுமில்லாமல், முதல்வரிடம் பல மகளிர் பொன்முடியின் பேச்சு குறித்து மன வேதனையுடன் பேசிய காரணமும் சேர்ந்து பொன்முடிக்கு எதிரான கடுமையான கோபத்தை முதல்வர் ஸ்டாலினுக்கு கொடுத்துள்ளது. அதன் காரணமாக, கட்சி பொறுப்பு பறிப்புக்கு பின்னர் அவரது அமைச்சர் பதவியும் தயவு தாட்சண்யம் இன்றி பறிக்கப்பட்டது.

இதனால் கோபமான பொன்முடி, சமீபத்தில் தன்னுடைய ஆதரவாளர்களை சந்திக்கும்போதெல்லாம், விழுப்புரத்தில் என்னால்தான் கட்சி வளர்ந்தது என்றும் முதல்வர் ஸ்டாலினுக்கும் அவரது குடும்பத்திற்கும் தான் விசுவாசமாக இருந்ததற்கு இப்போது பரிசு கிடைத்திருக்கிறது என்றும் பேசியிருப்பதாக அவருடைய தரப்பில் தகவல் கசிந்துள்ளது. அதுமட்டுமின்றி, தன்னுடைய பதவி பறிப்பிற்கு கோட்டையில் கோலோச்சிக்கொண்டிருக்கும் இரண்டு முக்கிய அதிகாரிகள் தனக்கு எதிராக முதல்வரிடம் பேசியதே காரணம் என்றும் அவர் பொங்கித் தள்ளியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதோடு, விழுப்புரத்தில் யாருக்கு புதிய பதவி கொடுத்தாலும் தன்னால் மட்டுமே திமுக வேட்பாளர்களை ஜெயிக்க வைக்க முடியும். லட்சுமணன் போன்றவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் அவர் கடுமையாக விமர்சித்து வருவது பற்றியும் உளவுத்துறை திமுக தலைமைக்கு ரிப்போட் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அப்டெட்டில் முதல்வர், அடுத்த ஆக்‌ஷன் இதுதான் ?

பதவியை பறித்தும் வாய் துடுக்காக தன்னுடைய ஆதரவாளர்களிடம் பேசி வரும் பொன்முடியின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி கடும் கோபத்தில் இருப்பதாகவும், அவரை சில நாட்களுக்கு கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்தால் மட்டுமே அவர் அமைதியாக இருப்பார் என்று முதல்வருக்கு முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை சொல்லியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இல்லையென்றால் விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது செயல்பட்டுக்கொண்டிருக்கும் லட்சுமணன் உள்ளிட்டவர்களின் பணிகளை முடக்கும் நடவடிக்கைகளை பொன்முடியின் ஆதரவாளர்கள் செய்வார்கள் என்பதால், அது தேர்தல் பணிகளை பாதிக்கும் என்ற எண்ணத்தில் இந்த நடவடிக்கையை எடுக்கலாமா என்பது குறித்து திமுக தலைமையும் ஆலோசித்து வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Post

உங்களுக்கு சர்க்கரை நோய் வராமல் தடுக்கணுமா? அப்ப தினமும் ‘இந்த’ உலர் பழத்தை சாப்பிடுங்க…!

Posted by - November 16, 2023 0
அதிகரித்து வரும் சுகாதார பிரச்சனைகளுக்கு இடையில், சர்க்கரை நோயின் பாதிப்பு எல்லா மக்களையும் அச்சத்திலேயே வைத்திருக்கிறது. 30 வயதை கடந்தவுடன் சர்க்கரை நோய் வந்துவிடுமோ என்ற பயம்…

இனிமே தாறுமாறா கரண்ட் பில் உயராது..

Posted by - August 11, 2025 0
தமிழ்நாட்டில் திடீரென வீடுகளில் அபரிமிதமான மின்கட்டணம் வருவதை தடுக்க தமிழக அரசு புதிய நடைமுறையை செயல்படுத்த உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள வீடுகளில் தற்போது மின்மீட்டர் மூலமாக மின்சார…

டாஸ்மாக் ஊழலை எதிர்த்து பாஜக போராட்டம்.. அண்ணாமலை, தமிழிசை கைது…

Posted by - March 17, 2025 0
டாஸ்மாக் ஊழல் தொடர்பாக இன்று பாஜகவினர் போராட்டம் நடத்தும் நிலையில், அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை…

TVK கட்சிக்கு அஜித் ஆதரவா? Race Car – ஒரே Colour -ல இருக்கே! குழப்பத்தில் நெட்டிசன்ஸ்!

Posted by - November 28, 2024 0
அஜித்தும், விஜயும் சினிமாவுல அறிமுகமாகி கிட்டத்தட்ட 30 வருஷத்துக்கு மேல ஆகிருச்சு. ஆரம்பத்தில அஜித் – விஜய் – பிரசாந்த் என மூனுபேருக்கும் போட்டி இருந்துச்சு. அப்புறம்…

சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்… புதிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்ப்பு…

Posted by - February 19, 2024 0
Tamil Nadu Budget 2024: மாபெரும் தமிழ்க் கனவு என்ற தலைப்பின் கீழ் ஏழு தலைப்புகளில் முக்கிய அறிவிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும்: தமிழக அரசு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *