‘சஸ்பெண்ட் செய்யப்படுகிறாரா பொன்முடி?’ பதவியை பிடுங்கியும் வாய் பேசுவதால் திட்டம்..!

146 0

”பொன்முடி மீது நடவடிக்கை எ டுக்கவில்லையென்றால் விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டி வரும் மற்ற நிர்வாகிகளின் பணிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், இது பற்றி திமுக தலைமை ஆலோசனை”

விழுப்புரம் மாவட்டம் என்றாலே ‘பொன்முடி’ என்று இருந்த காலம் ஒன்று இருந்தது. ஆனால், அந்த பெயரை தன் வாயாலேயே கெடுத்துக்கொண்டிருக்கிறார் பொன்முடி. அதனால், அவரது கட்சி பதவியான துணைப் பொதுச்செயலாளர் என்ற முக்கிய பொறுப்பை முதல்வர் மு.க.ஸ்டாலினே நேரடியாக பறித்தார். பின்னர், அவரது அமைச்சர் பொறுப்பும் அவரிடமிருந்து பறிக்கப்பட்டது. இதனால், தான் கட்டி ஆண்ட விழுப்புரம் மாவட்டத்தில் தன் புகைப்படம் கூட கட்சி பேனர்களில் இடம் பெறாத போன நிலை இருந்தாலும், தொடர்ந்து தன்னுடைய ஆதரவாளர்களிடம் பேசி வரும் பொன்முடி, தன் பதவியை பறித்த கட்சி தலைமையையும் இதற்கு காரணமானவர்களையும் கடுமையாக விமர்சித்து பேசி வருவதாக பரபரப்பு தகவல் அறிவாலயத்திற்கு சென்றிருக்கிறது.

திமுக தலைமை, அதிகாரிகளை அவதூறு பேசும் பொன்முடி?

கட்சி பொறுப்பும், அமைச்சர் பொறுப்பும் பறிக்கப்பட்ட பொன்முடி, அதனை தாங்கிக் கொள்ள முடியாமலும் தன்னுடைய உள்ளக் குமுறலை வெளிப்படுத்த முடியாமல் இருந்து வந்தார். குறிப்பாக, கட்சி பதவி பறிப்புக்கு பிறகு முதல்வரை சந்திக்க சென்னை கிளம்பிய பொன்முடிக்கு பாசிட்டிவாக எந்த பதிலும் முதல்வர் தரப்பிலிருந்து வரவில்லை. அதற்கு காரணம், பொன்முடிக்கு எதிராக திமுகவின் இன்னொரு துணைப் பொதுச்செயலாளரும் முதல்வரின் தங்கையுமான கனிமொழியே பகிரங்கமாக தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவு செய்ததுதான். அதுமட்டுமில்லாமல், முதல்வரிடம் பல மகளிர் பொன்முடியின் பேச்சு குறித்து மன வேதனையுடன் பேசிய காரணமும் சேர்ந்து பொன்முடிக்கு எதிரான கடுமையான கோபத்தை முதல்வர் ஸ்டாலினுக்கு கொடுத்துள்ளது. அதன் காரணமாக, கட்சி பொறுப்பு பறிப்புக்கு பின்னர் அவரது அமைச்சர் பதவியும் தயவு தாட்சண்யம் இன்றி பறிக்கப்பட்டது.

இதனால் கோபமான பொன்முடி, சமீபத்தில் தன்னுடைய ஆதரவாளர்களை சந்திக்கும்போதெல்லாம், விழுப்புரத்தில் என்னால்தான் கட்சி வளர்ந்தது என்றும் முதல்வர் ஸ்டாலினுக்கும் அவரது குடும்பத்திற்கும் தான் விசுவாசமாக இருந்ததற்கு இப்போது பரிசு கிடைத்திருக்கிறது என்றும் பேசியிருப்பதாக அவருடைய தரப்பில் தகவல் கசிந்துள்ளது. அதுமட்டுமின்றி, தன்னுடைய பதவி பறிப்பிற்கு கோட்டையில் கோலோச்சிக்கொண்டிருக்கும் இரண்டு முக்கிய அதிகாரிகள் தனக்கு எதிராக முதல்வரிடம் பேசியதே காரணம் என்றும் அவர் பொங்கித் தள்ளியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதோடு, விழுப்புரத்தில் யாருக்கு புதிய பதவி கொடுத்தாலும் தன்னால் மட்டுமே திமுக வேட்பாளர்களை ஜெயிக்க வைக்க முடியும். லட்சுமணன் போன்றவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் அவர் கடுமையாக விமர்சித்து வருவது பற்றியும் உளவுத்துறை திமுக தலைமைக்கு ரிப்போட் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அப்டெட்டில் முதல்வர், அடுத்த ஆக்‌ஷன் இதுதான் ?

பதவியை பறித்தும் வாய் துடுக்காக தன்னுடைய ஆதரவாளர்களிடம் பேசி வரும் பொன்முடியின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி கடும் கோபத்தில் இருப்பதாகவும், அவரை சில நாட்களுக்கு கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்தால் மட்டுமே அவர் அமைதியாக இருப்பார் என்று முதல்வருக்கு முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை சொல்லியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இல்லையென்றால் விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது செயல்பட்டுக்கொண்டிருக்கும் லட்சுமணன் உள்ளிட்டவர்களின் பணிகளை முடக்கும் நடவடிக்கைகளை பொன்முடியின் ஆதரவாளர்கள் செய்வார்கள் என்பதால், அது தேர்தல் பணிகளை பாதிக்கும் என்ற எண்ணத்தில் இந்த நடவடிக்கையை எடுக்கலாமா என்பது குறித்து திமுக தலைமையும் ஆலோசித்து வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Post

புஸ்ஸி ஆனந்த் இல்ல, விஜய்க்கு அரசியல் நகர்வை வகுத்து கொடுக்கும் பெரிய புள்ளி.. யாரு சாமி இவரு?

Posted by - January 28, 2025 0
விஜயின் அரசியல் பயணத்தை பரந்தூருக்கு முன், பின் என பிரித்துக் கொள்ளலாம். முதல் அரசியல் மாநாடு சாதாரணமான நடிகருக்கு கூடிய கூட்டம் என சொல்லி முடித்து விட்டார்கள்.…

கழிப்பறை இருக்கையில் இருந்து ‘இந்த’ ஆபத்தான நோய்களால் நீங்க பாதிக்கப்படலாம்… அப்ப என்ன செய்யணும் தெரியுமா?

Posted by - December 28, 2023 0
கழிப்பறை இருக்கைகள் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், நீங்கள் ஆபத்தான தொற்றுநோய்களை பெற வாய்ப்புள்ளது. கழிப்பறை இருக்கையிலிருந்து நீங்கள் பெறக்கூடிய சில நோய்த்தொற்றுகள் பற்றி…

தீக்காயம் ஏற்பட்டால் கண்களைப் பாதுகாப்பது எப்படி?

Posted by - October 18, 2025 0
கடந்த தீபாவளித் திருநாளில் 10 வயது பெண் குழந்தை புஸ்வாணத்தைப் பற்ற வைத்தது. ஆனால், புஸ்வாணம் மத்தாப்புகளை உதிர்க்கவில்லை. உடனடியாக அந்தக் குழந்தை புஸ்வாணத்தின் திரியைச் சரிசெய்ய,…

ராமதாஸ் ஐசியுவில் உள்ளதால் அவரை பார்க்க முடியவில்லை: மருத்துமனையில் அன்புமணி பேட்டி

Posted by - October 6, 2025 0
சென்னை: சென்னையில் உள்ள தனியார் மருத்துமனையில் பாமக நிறுவனர் ராமதாஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் மகனும், பாமக தலைவருமான அன்புமணி மருத்துவமனைக்கு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதயம் தொடர்பான…

“தளபதி டிவி”.. விஜயகாந்த் சேனலை வாங்கும் விஜய்! சுளீர் பிளான்! என்ன நடக்குது?

Posted by - February 9, 2024 0
சென்னை: தமிழக வெற்றி கழகம் சார்பாக புதிய சேனல் தொடங்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளாராம். இதற்காக இரண்டு திட்டங்களை அவர் கையில் எடுத்துள்ளாராம். நடிகர் விஜய் லோக்சபா…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *