இனிமே தாறுமாறா கரண்ட் பில் உயராது..

84 0

தமிழ்நாட்டில் திடீரென வீடுகளில் அபரிமிதமான மின்கட்டணம் வருவதை தடுக்க தமிழக அரசு புதிய நடைமுறையை செயல்படுத்த உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள வீடுகளில் தற்போது மின்மீட்டர் மூலமாக மின்சார அளவு கணக்கிடப்பட்டு அதற்கு ஏற்றாற்போ மின்கட்டணம் பெறப்பட்டு வருகிறது. ஆனால், பலரது வீடுகளிலும் மின் கட்டணம் அந்த வீட்டின் அளவு மற்றும் பயன்பாட்டிற்கு தொடர்பே இல்லாத அளவிற்கு மின்கட்டணம் அவ்வப்போது பதிவாகி வருகிறது.

திடீரென எகிறும் மின்கட்டணம்:

அதாவது, மின் விசிறி, தொலைக்காட்சி, மிக்சி, விளக்குகள் பயன்படுத்தும் சராசரியான வீட்டின் மின்கட்டணமே ரூபாய் 10 ஆயிரம் வந்த கொடுமை அரங்கேறியதும் தமிழ்நாட்டில் நடந்தது.கணக்கெடுப்பு தவறாக நடந்து இருந்து இந்த தவறு அரங்கேறியிருந்தாலே, மின் மீட்டரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் இந்த தவறு நடந்து இருந்தாலோ இதுபோன்று நடந்திருக்கலாம். இந்த கட்டணத்தை கணினியில் பதிவேற்றிவிட்டால் அந்த கட்டணத்தை பயனாளர் கட்ட வேண்டிய அவலமும் இருந்து வருகிறது.

தொடர் புகார்கள்:

தற்போதுள்ள நடைமுறையில் பாதிக்கப்பட்ட நபரின் வீட்டிற்கும் மின் கட்டணத்திற்கும் சம்பந்தமே இல்லை என்று தெரிந்தாலும், கட்டணத் தொகையை செலுத்திய பிறகே அதை புகாராக அளிக்க முடியும்.

அந்த புகார் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு கணக்கீடு தவறு என்று கண்டறியப்பட்டால் அடுத்தடுத்த மின்கட்டணத்தில் கழித்துக் கொள்ளப்படும். இந்த முறையில் எப்படியானாலும் நுகர்வோரே பாதிக்கப்படும் நிலை உள்ளது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் இருந்து வருகிறது. இந்த சிக்கலால் தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரும் வேறு வழியின்றி அதிக மின்கட்டணத்தையும் செலுத்திய பரிதாபமும் நடந்தது.

தீர்வு கண்டுபிடித்த மின்வாரியம்:

அதன்படி, இந்த சிக்கலுக்கு தீர்வு காண மின்வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி, வழக்கமாக மின்கட்டணம் வரும் வீட்டில் திடீரென தொடர்பே இல்லாமல் அபரிமிதமான மின்கட்டணம் வந்தால் அதாவது, 500 ரூபாய் கட்டணம் வரும் வீட்டில் ரூபாய் 5 ஆயிரம் மின்கட்டணம் வந்தால் மின் கட்டணத்திற்கான பதிவேட்டில் கணினி இனி பதிவு செய்யாது.

இதையடுத்து, மின் கட்டணம் அபரிமிதமாக வந்த வீட்டிற்கு மின்வாரிய அதிகாரி நேரில் சென்று ஆய்வு செய்வார். அதன்பின்பு, அந்த வீட்டில் பயன்படுத்தப்பட்ட அளவிற்கு மின் பயன்பாடு கணக்கீடு செய்யப்பட்டு மின்கட்டணம் வசூல் செய்யப்படும். இதனால், திடீர் திடீரென ஆயிரக்கணக்கில் மின்கட்டணம் வந்து அதிர்ச்சிக்குள்ளாகும் மக்கள் நிம்மதி அடைவார்கள்.

மென்பொருள்:

இதற்கான சாஃப்ட்வேர் எனப்படும் மென்பொருள் தயாரிக்கும் பணிகளை தமிழக அரசு விரைவுப்படுத்தியுள்ளது. அந்தந்த பயனாளர் எந்தளவு மின்சாரம் பயன்படுத்துவார் என்பதை அடிப்படையாக கொண்டு இந்த மென்பொருள் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது. விரைவில் இந்த நடைமுறை அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் சட்டமன்ற தேர்தலுக்குள் இந்த நடைமுறையை தமிழக அரசு செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

3 பேரை திருமணம் செய்து மோசடி.எஸ்கேப்.. சிக்கிய கல்யாண ராணி..!

Posted by - April 18, 2023 0
2 குழந்தைகளுக்கு தாயானவர் புதுமணப் பெண் எனக் கூறி பல திருமணங்களை செய்து மோசடி செய்து தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபாளையம்,…

கோவில்களுக்குள் செல்போன், கேமராக்கள் கொண்டு செல்ல அனுமதிக்கக்கூடாது- அறநிலையத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு

Posted by - September 2, 2023 0
சென்னை: பழனி தண்டாயுதபாணி கோவில் கருவறைக்குள் எடுக்கப்பட்ட புகைப்படம் என ஒரு படம் சமூக வலைதளங்களில் உலாவி வருவதாக சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த…

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை – த.வெ.க தலைவர் விஜய் அறிவிப்பு

Posted by - June 19, 2024 0
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் அறிவித்துள்ளார் . இதுகுறித்து த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்…

திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணன் கைது

Posted by - July 11, 2023 0
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் சண்டை பயிற்சியாளராக இருப்பவர் கனல் கண்ணன். இவர் இந்து மதத்திற்கு ஆதரவாகப் பேசுகிறேன் என்ற…

உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?

Posted by - April 25, 2024 0
தற்போது கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனையை மக்கள் ஆதரிக்கத் துவங்கியுள்ளனர் என்பது தான் உண்மை. அதேபோல் இந்தியா முழுவதும் கூகுள் பே…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *