சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்… புதிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்ப்பு…

278 0

Tamil Nadu Budget 2024:

மாபெரும் தமிழ்க் கனவு என்ற தலைப்பின் கீழ் ஏழு தலைப்புகளில் முக்கிய அறிவிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும்: தமிழக அரசு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கை தொடர்பாக மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. மாபெரும் தமிழ் கனவு என்ற தலைப்பின் கீழ் இந்த நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட இருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

2024-2025ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை பேரவையில் தாக்கல் செய்கிறார். மக்களவைத் தேர்தலுக்கு சில வாரங்களே உள்ள நிலையில் தாக்கல் செய்யப்படும் இந்த நிதிநிலை அறிக்கையில், பல புதிய நலத்திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதியமைச்சராக தங்கம் தென்னரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இதுவாகும். மாபெரும் தமிழ்க் கனவு என்ற தலைப்பின் கீழ் ஏழு தலைப்புகளில் முக்கிய அறிவிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் முதன்மையாக சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதில், சமூக நல திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போன்று, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம் ஆகியவையும் குறிப்பிடப்பட்டுள்ளன.
சமத்துவ நோக்கில் மகளிர் நலம் என்ற தலைப்பின் கீழ் மகளிர் நலன் தொடர்பான அறிவிப்புகளும் வெளியாகவுள்ளன. பசுமைவழிப் பயணம் என்ற அம்சத்தின் கீழ், மின்சார வாகனங்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.
பட்ஜெட்டின் ஏழாவது அம்சமாக தாய்த் தமிழும், தமிழர் பண்பாடும் இடம்பெற்றுள்ளன. இதனிடையே, நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதற்கான முத்திரை சின்னத்தை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான செய்திக் குறிப்பில், புரட்சி கவிஞர் பாரதிதாசனின் பாடலுக்கு ஏற்ப, அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்ட தமிழ்நாடு, எத்திசையிலும் புகழ் பதித்து திகழ்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Post

ராமதாஸ் ஐசியுவில் உள்ளதால் அவரை பார்க்க முடியவில்லை: மருத்துமனையில் அன்புமணி பேட்டி

Posted by - October 6, 2025 0
சென்னை: சென்னையில் உள்ள தனியார் மருத்துமனையில் பாமக நிறுவனர் ராமதாஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் மகனும், பாமக தலைவருமான அன்புமணி மருத்துவமனைக்கு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதயம் தொடர்பான…

பணிநேரம் முடியும்வரை ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை.. அதிரடி உத்தரவு

Posted by - March 29, 2023 0
விடைத்தாள் திருத்தும்போது தேவையின்றி பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பிளஸ் 2 விடைத்தாள்களை திருத்தும்போது ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு தேர்வுகள்…

உங்க வயித்துல ‘இந்த’ அறிகுறிகள் இருக்கா? அப்ப அது ஆபத்தான வயிற்று புற்றுநோயா இருக்கலாமாம்..!

Posted by - November 10, 2023 0
வயிற்று உப்புசம் மற்றும் வீக்கம் பெரும்பாலும் எல்லாருக்கும் ஏற்படும் ஓர் பொதுவான பிரச்சனை. ஆனால், சில நேரங்களில் இது புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். வயிற்றுப் புற்றுநோய், இரைப்பை…

மாஸ்க், தடுப்பூசி, ஆக்சிஜன் எல்லாத்தை ரெடி பண்ணுங்க.. மருத்துவமனைகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு!

Posted by - December 27, 2022 0
கொரோனா தடுப்பூசி மையம் போதிய மருத்துவ பணியாளர்களுடன் தயாராக இருக்க மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை…

ஏங்க.. கூமாப்பட்டியை விடுங்க.. விருதுநகரில் சுத்திப்பார்க்க இவ்ளோ இடம் இருக்குதா!

Posted by - June 28, 2025 0
விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது கூமாபட்டி என்ற கிராமம். இந்த கிராமத்தில் வசிப்பவர் தங்கபாண்டி. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூமாபட்டி கிராமத்தின் அழகை வர்ணித்து வெளியிட்ட வீடியோக்கள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *