மக்களே ரெடியா இருங்க; 2 மாதத்தில் வருது ஸ்டார்லிங்க் இன்டர்நெட் – வெளியான விலை விவரங்கள்

173 0

இந்தியாவில் சேவையை வழங்க ஸ்டார்லிங்க ஏற்கனவே லைசென்ஸ் பெற்றுவிட்ட நிலையில், 2 மாதங்களுக்குள் சேவை தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அதன் விலை என்ன தெரியுமா.?

எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம், இந்தியாவில் செயற்கைக்கோள் மூலமான இணைய சேவைகளை வழங்குவதற்கான உரிமத்தை கடந்த வாரம் பெற்றது. அதைத் தொடர்ந்து, இன்னும் 2 மாதங்களுக்குள் இந்தியாவில் அதன் சேவை தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, அதன் விலை விவரங்களும் வெளியாகியுள்ளன. அது குறித்து தற்போது பார்க்கலாம்.

இந்தியாவில் இணைய சேவை வழங்க உரிமம் பெற்ற ஸ்டார் லிங்க்

எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு தொலைத்தொடர்புத் துறையிடமிருந்து உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் உறுதியான தகவல்கள் வெளியானது. இதே போன்ற விண்ணப்பத்தை அளித்திருந்த யூடெல்சாட்டின் ஒன்வெப் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவிற்கும் உரிமம் வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்திய தொலைத்தொடர்புத் துறையிடம் இருந்து உரிமம் பெற்ற மூன்றாவது நிறுவனமாக ஸ்டார்லிங்க் மாறியது.

எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு தொலைத்தொடர்புத் துறையிடமிருந்து உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் உறுதியான தகவல்கள் வெளியானது. இதே போன்ற விண்ணப்பத்தை அளித்திருந்த யூடெல்சாட்டின் ஒன்வெப் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவிற்கும் உரிமம் வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்திய தொலைத்தொடர்புத் துறையிடம் இருந்து உரிமம் பெற்ற மூன்றாவது நிறுவனமாக ஸ்டார்லிங்க் மாறியது.

கடந்த 2022-ம் ஆண்டு முதல், இந்தியாவில் வணிக ரீதியாக செயல்படுவதற்கான உரிமத்திற்காக ஸ்டார்லிங்க் காத்திருந்தது. ஆனால், தேசிய பாதுகாப்பு கவலைகள் உள்ளிட்ட காரணங்களால் உரிமம் வழங்குவதில் தாமதங்கள் ஏற்பட்டன. செயற்கைக்கோள் சேவைகளுக்கு எவ்வாறு அலைக்கற்றையை வழங்குவது என்பது தொடர்பாக, மஸ்க்கின் நிறுவனம், சில மாதங்களாக கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் நிறுவனமான ஜியோவுடன் மோதல் போக்கில் இருந்துவந்தது. அலைக்கற்றைகள் ஏலம் விடப்படாமல், ஒதுக்கீடு முறையில் வழங்கப்பட வேண்டும் என்பதில், இந்திய அரசாங்கம் மஸ்க்கின் பக்கம் சாய்ந்த நிலையில், ஸ்டார்லிங்கிற்கு குளோபல் மொபைல் பெர்சனல் கம்யூனிகேஷன் பை சேட்டிலைட்(GMPCS) உரிமம், தொலைத்தொடர்புத் துறையிடமிருந்து வழங்கப்பட்டுள்ளது.

ஸ்டார்லிங்க் இன்டர்நெட் சேவைக்கான விலை என்ன.?

ஸ்டார்லிங்க இந்தியாவில் சேவைகளை வழங்க உரிமம் பெற்ற நிலையில், இன்னும் 2 மாதங்களுக்குள் தனது சேவைகளை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஸ்டார்லிங்க் சேவையை பெற, முதலில் அதன் கருவியை 33,000 ரூபாய் செலுத்தி பயனாளர்கள் வாங்க வேண்டும். அதன் பின்னர், மாதம் 3,000 ரூபாயில் அன்லிமிடெட் சேவையை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டார்லிங்க் முதன் முறையாக இந்தியாவில் சேவையை தொடங்குவதால், அதன் டிஷ்-ஐ வாங்கும் வாடிக்கையாளருக்கு, ஒரு மாத இலவச சேவையை வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஸ்டார்லிங்கின் இந்த கட்டணங்கள் வீட்டு பயனாளர்களுக்கு சற்று அதிகம் என்றே தோன்றுகிறது. தடையில்லாத அதிவேக இன்டர்நெட் சேவை கிடைக்கும் என்பதால், நிறுவனங்களுக்கு அது பயனுள்ளதாக இருக்கும். வீட்டு உபயோகிப்பாளர்களுக்கும் பயனளிக்கும் என்றாலும், விலை சற்று அதிகம் என்றே தொன்றுகிறது. அதிலும், நடுத்தர குடும்பங்கள் டிஷ் வாங்குவதற்கு 33,000 ரூபாய் செலவு செய்வார்களா என்பது கேள்விக்குறியே.!!

Related Post

சந்திரயான்-3 லேண்டர் எடுத்த நிலவின் புதிய புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ

Posted by - August 21, 2023 0
ஸ்ரீஹரிகோட்டா: நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக ‘சந்திரயான்-3’ விண்கலத்தை ரூ.615 கோடி செலவில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இந்த விண்கலம் எல்.வி.எம்.3 ராக்கெட் மூலம்…

நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சுவதால் நிலைகுலையும் பூமியின் சுழற்சி: விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

Posted by - June 20, 2023 0
புதுடெல்லி: மனிதர்கள் நிலத்துக்கு அடியில் இருக்கும் தண்ணீரை அளவுக்கு அதிகமாக உறிஞ்சி வெளியேற்றி வருவதன் காரணமாக பூமி 1993 2020 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 80 சென்டிமீட்டர்…

UPI ட்ரான்ஸாக்ஷன்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டால் இனி UPI பேமெண்ட் பயன்படுத்த மாட்டோம்: கருத்துக்கணிப்பில் தகவல்!

Posted by - March 11, 2024 0
ஆரம்பத்தில் UPI மூலமாக செய்யப்படும் டிஜிட்டல் ட்ரான்ஸாக்ஷன் நமக்கு சௌகரியமானதாகவும், பழக்கப்பட்ட ஒன்றாகவும் இல்லாத காரணத்தினால் அதனை நாம் குறை கூறி வந்தோம். ஆரம்பத்தில் UPI மூலமாக…

Post Office அக்கவுண்ட்டில் பணம் கட்ட க்யூவில் நிற்க வேண்டியிருக்கா..? வீட்டில் இருந்தே எந்நேரமும் பணம் செலுத்த எளிய வழி இதோ!

Posted by - December 21, 2022 0
போஸ்ட் ஆஃபிஸ் அட்டகாசமான வழி ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இனி நீங்கள் வீட்டிலிருந்தபடியே போஸ்ட் ஆஃபிஸில் பரிவர்த்தனை செய்யலாம். சேமிப்பு என்பது மிகவும் அவசியமானதாக இருக்கிறது. பணத்தை செலவு…

ராபிடோ புக் செய்த கேரள பெண்.. வன்கொடுமை செய்த ட்ரைவர்.. அதிர்ச்சி சம்பவம்!

Posted by - November 30, 2022 0
கார் டாக்சியில் பலாத்காரம், கூட்டு பலாத்காரம் என்ற செய்திகள் வந்த நிலையில் பைக் டாக்ஸி இதுவரை பாதுகாப்பானதாக கருதப்பட்டது. ஆனால் தற்போதைய சம்பவத்திற்கு பிறகு அதுவும் கேள்விக்குறியாகியுள்ளது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *