முருகன் மாநாட்டால் திமுக அதிர்ச்சி – அதிமுக வாய் திறக்காது ஏன்? அடுக்கடுக்கான கேள்வி

103 0

பாஜகவின் முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் செயல்பாட்டினை, திமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

பாஜகவின் முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் செயல்பாடு, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியுமா? எனவும் கிண்டல் செய்து வருகின்றனர்.

முருக பக்தர்கள் மாநாட்டில் அரசியல்:

மதுரையில் பாஜகவின் மற்றொரு பிரிவாக கருதப்படும் இந்து முன்னணி அமைப்பினர் சார்பில், முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதுபோக பாஜகவின் கூட்டணியில் உள்ள அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் பங்கேற்றனர். முருக பக்தர்கள் மாநாடு என்று கூறினாலும், இதில் முற்றிலுமான அரசியல் நெடியே வீசியது. அப்போது நடந்த சில நிகழ்வுகளுக்கு எந்தவித கருத்தும், ஆட்சேபனையும் கூட தெரிவிக்காமல்  முன்னாள் அமைச்சர்கள் அமைதியாக இருந்ததே, தற்போது அதிமுகவின் மீதான விமர்சனங்களுக்கு காரணமாகியுள்ளது.

சைலண்ட் மோடில் முன்னாள் அமைச்சர்கள்:

மாநாட்டு திடலில் ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. அதில் ஒன்றில், “முருகா திராவிடத்தை அழிக்க வேலெடுத்து ஓடி வா” என்ற வாசகம் அச்சடிக்கப்பட்டு இருந்தது. இதனை குறிப்பிட்டு. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்னு பேரு வச்சிருக்கிங்க. அவன் என்னடான்னா திராவிடத்தை அழிக்கனும்னு பேனர் வெச்சிட்டு இருக்கான். அத பாத்து எப்படியா எதுவுமே பேசாமா சைலண்ட இருக்கிங்க?” என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ”அந்த அம்மா இருந்திருந்தா இப்படிலாம்நடந்து இருக்குமா?” என கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்து இருக்கின்றனர்.

”வீடியோவிற்கும் வாய் திறக்கல”

பேனர் ஒருப்பக்கம் சர்ச்சையை கிளப்ப, மாநாட்டில் ஒளிபரப்பப்பட்ட வீடியோ ஒன்றும் அதிமுகவினருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் அதிமுக தனது கொள்கை தலைவர்களாக கொண்டிருக்கும் பெரியார் மற்றும் அண்ணா ஆகியோர் விமர்சிக்கப்பட்டு இருந்தனர். ஆனால், அதற்கு கூட அதிமுகவினர் எந்தவித கருத்தும் ,ஆட்சேபனையும் தெரிவிக்காமல் அமைதியாகவே இருந்ததும் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்சிக்காகவும் பேசமாட்டீர்கள்? கட்சி கொள்கை தலைவர்களுக்காகவும் பேசமாட்டீர்களா? அதிமுகவை மொத்தமாக பாஜகவிடம் அடகு வைத்துவிட்டீர்களா? என்றும் திமுகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். வழக்குகளுக்கு பயந்து தான் வேண்டா வெறுப்பாகவே பாஜகவுடன், அதிமுக கூட்டணி வைத்து இருப்பதையே இந்த சம்பவங்கள் உணர்த்துகின்றன என்றும் குற்றம்சாட்டிவருகின்றனர்.

Related Post

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அவலம்.

Posted by - December 12, 2025 0
மயிலாடுதுறை மாவட்ட தலைமை மருத்துவமனையில் நிலவும் சேவை குறைபாடுகளை களைய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை…

சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று தக்காளி கிலோவுக்கு ரூ.15 அதிகரிப்பு

Posted by - July 25, 2023 0
தக்காளி விலை தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும ஜெட்வேகத்தில் உயர்ந்து 100-க்கும் மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தென்மேற்கு பருவமழை காரணமாக தக்காளி உற்பத்தியில் பாதிப்பு, கனமழை…

+2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தலைவர்கள் வாழ்த்து…

Posted by - March 3, 2025 0
தமிழ்நாட்டில் +2 மாணவர்களுக்கு இன்று பொதுத்தேர்வு தொடங்கும் நிலையில், பல்வேறு தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் இன்று தொடங்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை 8 லட்சத்திற்கும் அதிகமான…

“மியூட் மோடில் திமுக அரசு” தீக்குளித்த விவசாயி.. பொங்கி எழுந்த இபிஎஸ்

Posted by - June 5, 2025 0
“80 வயது மூதாட்டிக்கு பாதுகாப்பு இல்லை என்பது எவ்வளவு வெட்கக்கேடான நிலை? ஒரு முதல்வராக இந்த செய்தியெல்லாம் ஸ்டாலினை ஏன் உறுத்தவில்லை?” என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.…

பூண்டு விலை… இல்லத்தரசிகள் அதிர்ச்சி…

Posted by - February 16, 2024 0
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அன்றாட உணவின் அத்யாவசிய காய்கறிகளான தக்காளி ,சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றின் விலை உயர்ந்து காணப்படுகிறது. Garlic Price இதனையடுத்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *