முருகன் மாநாட்டால் திமுக அதிர்ச்சி – அதிமுக வாய் திறக்காது ஏன்? அடுக்கடுக்கான கேள்வி

110 0

பாஜகவின் முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் செயல்பாட்டினை, திமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

பாஜகவின் முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் செயல்பாடு, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியுமா? எனவும் கிண்டல் செய்து வருகின்றனர்.

முருக பக்தர்கள் மாநாட்டில் அரசியல்:

மதுரையில் பாஜகவின் மற்றொரு பிரிவாக கருதப்படும் இந்து முன்னணி அமைப்பினர் சார்பில், முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதுபோக பாஜகவின் கூட்டணியில் உள்ள அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் பங்கேற்றனர். முருக பக்தர்கள் மாநாடு என்று கூறினாலும், இதில் முற்றிலுமான அரசியல் நெடியே வீசியது. அப்போது நடந்த சில நிகழ்வுகளுக்கு எந்தவித கருத்தும், ஆட்சேபனையும் கூட தெரிவிக்காமல்  முன்னாள் அமைச்சர்கள் அமைதியாக இருந்ததே, தற்போது அதிமுகவின் மீதான விமர்சனங்களுக்கு காரணமாகியுள்ளது.

சைலண்ட் மோடில் முன்னாள் அமைச்சர்கள்:

மாநாட்டு திடலில் ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. அதில் ஒன்றில், “முருகா திராவிடத்தை அழிக்க வேலெடுத்து ஓடி வா” என்ற வாசகம் அச்சடிக்கப்பட்டு இருந்தது. இதனை குறிப்பிட்டு. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்னு பேரு வச்சிருக்கிங்க. அவன் என்னடான்னா திராவிடத்தை அழிக்கனும்னு பேனர் வெச்சிட்டு இருக்கான். அத பாத்து எப்படியா எதுவுமே பேசாமா சைலண்ட இருக்கிங்க?” என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ”அந்த அம்மா இருந்திருந்தா இப்படிலாம்நடந்து இருக்குமா?” என கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்து இருக்கின்றனர்.

”வீடியோவிற்கும் வாய் திறக்கல”

பேனர் ஒருப்பக்கம் சர்ச்சையை கிளப்ப, மாநாட்டில் ஒளிபரப்பப்பட்ட வீடியோ ஒன்றும் அதிமுகவினருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் அதிமுக தனது கொள்கை தலைவர்களாக கொண்டிருக்கும் பெரியார் மற்றும் அண்ணா ஆகியோர் விமர்சிக்கப்பட்டு இருந்தனர். ஆனால், அதற்கு கூட அதிமுகவினர் எந்தவித கருத்தும் ,ஆட்சேபனையும் தெரிவிக்காமல் அமைதியாகவே இருந்ததும் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்சிக்காகவும் பேசமாட்டீர்கள்? கட்சி கொள்கை தலைவர்களுக்காகவும் பேசமாட்டீர்களா? அதிமுகவை மொத்தமாக பாஜகவிடம் அடகு வைத்துவிட்டீர்களா? என்றும் திமுகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். வழக்குகளுக்கு பயந்து தான் வேண்டா வெறுப்பாகவே பாஜகவுடன், அதிமுக கூட்டணி வைத்து இருப்பதையே இந்த சம்பவங்கள் உணர்த்துகின்றன என்றும் குற்றம்சாட்டிவருகின்றனர்.

Related Post

ஜெயிலுக்கு போயும் நீ திருந்த மாட்டியா..? திமுகாவின் சர்ச்சை பேச்சாளரை வச்சு செய்த ராதிகா..!!

Posted by - May 15, 2024 0
நடிகர் சரத்குமார் குறித்து ஒருமையில் பேசிய திமுகாவின் சர்ச்சை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு நடிகை ராதிகா சரத்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பல மேடைகளில் பல சர்ச்சை…

காதலை கண்டித்ததால் ஆத்திரம்- தம்பியை கொன்று 20 துண்டுகளாக வெட்டி ஏரியில் வீசிய அக்காள்

Posted by - March 21, 2023 0
ஓசூர்: கர்நாடக மாநிலம், விஜயபுரா மாவட்டம் சிந்திகி தாலுகாவுக்கு பட்ட தேவனாங்காவ் கிராமத்தை சேர்ந்தவர் சித்தப்பா பூசாரி. இந்த கிராமம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ளது.…

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 22 ஆம் தேதி வரை நீட்டிப்பு!

Posted by - April 18, 2024 0
தற்போது செந்தில் பாலாஜி ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் செந்தில்…

தொடங்கியது மீன்பிடி தடைக்காலம்.. அசைவப்பிரியர்களே உஷார்..

Posted by - April 17, 2023 0
மீன்பிடி தடை காலம் என்பதால் மீன்கள் விலை வரும் நாட்கள் உயர வாய்ப்புள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். கடல்வாழ் உயிரினங்கள் இனப்பெருக்கத்திற்காக, ஏப்ரல், மே மாதங்களில் மீன் பிடிக்க,…

இரட்டை இலை சின்னம் யாருக்கு.? சிதறுமா வாக்குகள்.. திரும்பும் எம்.ஜி.ஆர். கால வரலாறு!?

Posted by - February 3, 2023 0
AIADMK : ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு தனி சின்னத்தில் போட்டியிட்டால் யாருக்கு லாபம்? அதிமுக வாக்குகள் சிதறுமா? இரட்டை இலை சின்னம் முடங்க தான் காரணமாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *