தொடங்கியது மீன்பிடி தடைக்காலம்.. அசைவப்பிரியர்களே உஷார்..

207 0

மீன்பிடி தடை காலம் என்பதால் மீன்கள் விலை வரும் நாட்கள் உயர வாய்ப்புள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடல்வாழ் உயிரினங்கள் இனப்பெருக்கத்திற்காக, ஏப்ரல், மே மாதங்களில் மீன் பிடிக்க, மத்திய அரசு ஆண்டு தோறும் தடை விதிக்கிறது. இக்காலக் கட்டத்தில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் என்பதால் மீன்வளத்தை பாதுகாக்க இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டிற்கான மீன்பிடி தடை காலம் தமிழகத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் நேற்று நள்ளிரவு துவங்கி, ஜூன் 14-ம் தேதி வரை, மொத்தம் 61 நாட்கள் அமலில் இருக்கும்.

தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் சுமார் 15 ஆயிரம் விசைப்படகுகள் கரைந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த நாட்களில் மீன்களின் விலை கடுமையாக உயரக்கூடும் என்பதால் அசைவப் பிரியர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று காசிமேடு, வானகரம், திருவான்மியூர், சிந்தாதிரிப்பேட்டை, காவாங்கரை,பெரம்பூர்,வில்லிவாக்கம்,பெரம்பூர்,வில்லிவாக்கம், நொச்சிக்குப்பம்,பட்டினப்பாக்கம் உள்ளிட்ட சென்னையின் முக்கிய மீன் மார்கெட்டில் மீன்களை வாங்க அசைவ பிரியர்கள் குவிந்தனர்.

 

மீன்பிடி தடை காலங்களில் மீன்களின் விலை கடுமையாக உயரும். ஆனால் இந்த முறை தடைக்காலம் தொடங்கியுள்ளபோதும் மீன்கள் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யபட்டது. இது குறித்து பேசிய மீனவர்கள் தற்போது போதுமான அளவு மீன்கள் கையிருப்பு உள்ளதால் மீன்கள் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் ஆனால் வரும் காலங்களில் மீன்கள் இருப்பு குறைந்தால் மீன்கள் விலை உயர வாய்ப்பு உள்ளதாக கூறினர்.

Related Post

உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?

Posted by - April 25, 2024 0
தற்போது கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனையை மக்கள் ஆதரிக்கத் துவங்கியுள்ளனர் என்பது தான் உண்மை. அதேபோல் இந்தியா முழுவதும் கூகுள் பே…

திமுக தோல்வி அடைந்தால் தான் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் கிடைக்கும் – அன்புமணி தேர்தல் பரப்புரை..!!!

Posted by - April 12, 2024 0
திமுக தோல்வி அடைந்தால் தான் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் கிடைக்கும் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம்…

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது: 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை

Posted by - December 2, 2023 0
சென்னை: தென்கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி சமீபத்தில் உருவானது. இது கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெற்று வருகிறது.…

போட்டி போட்டு ட்ரெண்ட் செய்யும் மத்திய மாநில ஆளும் கட்சிகள்.. பந்தயத்துக்கு நாங்க வரலாமா, TVKForTN

Posted by - February 22, 2025 0
சில நாட்களாகவே சோசியல் மீடியாவில் அனல் பறந்து கொண்டிருக்கிறது. அதுவும்  கெட் அவுட் மோடி என்ற ஹாஷ் டேக் நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் இருந்தது. திமுக கட்சியினருக்கு…

பாக்கியலட்சுமி சீரியல் இனியாவா இது? இந்த உடையில் அடையாளமே தெரியலையே

Posted by - January 7, 2023 0
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் மகள் ரோலில் நடித்து வருபவர் நேஹா. அவர் நடித்துவரும் இனியா ரோல் அந்த தொடரின் கதையில் முக்கிய ஒன்றாக இருந்து வருகிறது. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *