நடிகர் சரத்குமார் குறித்து ஒருமையில் பேசிய திமுகாவின் சர்ச்சை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு நடிகை ராதிகா சரத்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பல மேடைகளில் பல சர்ச்சை பேச்சுக்களை பேசி திமுகவின் பேச்சாளராக வலம் வளம் வருபவர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி . கடந்த ஆண்டு நிர்மலா சீதாராமன் உளப்பட ஏரளமான அரசியல் தலைவர்களை மிகவும் தரைகுறைவாகி பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி திமுகவிலிருந்து நீக்கப்பட்டு பிறகு மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டார் .
இந்நிலையில் சமீபத்தில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சரத்குமாரை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். இரவு 2 மணிக்கு மனைவியை எழுப்பி பாஜகவில் இணைய போவதாக சரத்குமார் சமீபத்தில் பேட்டி கொடுத்தார் என மிகவும் அதை கொச்சையாக விமர்சனம் செய்திருந்தார் .
இதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் தற்போது நடிகர் ராதிகா சரத்குமார் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.இதுகுறித்து ராதிகா வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
ஏன் டா படுபாவி! ஜெயிலுக்கு போயும் நீ திருத்த மாட்டியா? உன்னை எல்லாம் இன்னும் அந்த கட்சியில் வெச்சிருக்காங் களே…அவங்களதான் குத்தம் சொல்லணும். இதுல உனக்கு அந்த சாம்ராஜ்ய சக்ரவர்த்தியோட பேரு வேற! உன்னை மாதிரி ஆட்கள் எல்லாம் கடுமையாக தண்டிக்கப்படனும் என நடிகர் ராதிகா தெரிவித்துள்ளார்.