செல்டவருக்கு ரூ.7500 கோடி நிலுவைத்தொகை… வங்கிகளில் கடன் கேட்டு அலையும் Vi நிறுவனம்!

353 0

அறிக்கையின்படி, Vi நிறுவனம்  Indus க்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை சுமார் 7,500 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

பிரபல தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான Vi , 7,000 கோடி ரூபாய்க்கு மேல் கடனைத் திரட்டுவதற்காக பல கடன் வழங்குநர்களை அணுகியுள்ளதாக தி எகனாமிக் டைம்ஸ் ஜனவரி 6 அன்று தெரிவித்தது.  கடனாக கேட்கும் தொகையில்  பெரும்பகுதி இண்டஸ் டவர்ஸுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை  செலுத்த பயன்படுத்தப்படும் என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.

பல பிரபல வங்கி மற்றும் கடன் தரும் நிறுவனங்களிடம் 15,000 கோடி வங்கி உத்தரவாதங்கள் மற்றும் புதிய கடன்களை வழங்குமாறு  Vi கேட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் சமீபகாலமாக Vi நிறுவனம் சுமார் 75,830.8 கோடி எதிர்மறை நிகர மதிப்பைக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

நஷ்டத்தை குறிக்கும் எதிர்மறை நிகர மதிப்பு கொண்ட நிறுவனத்திற்கு வங்கி அமைப்புகள் கடன்களை வழங்க முடியாது என்பதால் எல்லா இடங்களிலும் மறுப்பு செய்தி மட்டுமே கிடைத்து வருகிறது, இந்த கடன் இன்றோ நேற்றோ தொடங்கியது அல்ல.

நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருந்த இங்கிலாந்தின் வோடபோன் மற்றும் இந்தியாவின் ஆதித்யா பிர்லா குழுமம்  (ஏபிஜி) இணைந்து vi என்ற புதிய கூட்டு சேவையை 2020 ஆம் ஆண்டு தொடங்கியது. அதற்காக Indus டவர் நிறுவனத்திடம் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் Vi நிறுவனம் நஷ்டத்தில் சென்றுகொண்டு இருப்பதால் டவர் நிறுவனத்திற்கு சரிவர பணம் செலுத்தவில்லை.

சென்ற ஆண்டே Indus நிறுவனம் Vi நிறுவனம்  பணம் செலுத்தப்படாவிட்டால் டவர் தளங்களுக்கான அதன் அணுகலைத் துண்டிக்கும் என்று எச்சரித்திருந்தது.  பின்னர் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒத்திவைக்கப்பட்ட கட்டண திட்டத்தை வழங்கியது, அதை டவர் நிறுவனமும் ஏற்றுக்கொண்டது.

அதன்படி டவர் நிறுவனத்திற்கு ஜனவரி முதல் அதன் தற்போதைய நிலுவைத் தொகையில் 100 சதவீதத்தை செலுத்த உறுதியளித்துள்ளது. அறிக்கையின்படி, Vi நிறுவனம்  Indus க்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை சுமார் 7,500 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

டவர் நிறுவனத்திற்கு Vi நிறுவனம்  மாதந்தோறும் செலுத்த வேண்டிய தொகை ரூ.250-300 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதை செலுத்த பணம் இல்லாத நிலையில்தான் கடன் கேட்டு வங்கிகளுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் அலைந்து வருகிறது.

Related Post

வாட்ஸ்அப் பயனர்களுக்கு எச்சரிக்கை! உங்கள் தனியுரிமையை பாதுகாக்கும் புதிய வசதி – முழு விவரம்

Posted by - February 9, 2026 0
வாட்ஸ்அப் பயன்படுத்தும் பயனர்களுக்காக, அவர்களின் தனியுரிமையை மேலும் பாதுகாக்கும் வகையில் புதிய வசதி ஒன்று அறிமுகமாகியுள்ளது. இந்த வசதி குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி…

1/4 கப் உளுந்தும், தேங்காயும் இருக்கா? அப்ப இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. அருமையா இருக்கும்…

Posted by - December 20, 2023 0
தினமும் காலையில் இட்லி, தோசைக்கு ஒரே மாதிரியான சட்னி செய்து போரத்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையைக் கொண்ட சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உளுத்தம் பருப்பு…

வெறும் சப்பாத்தி சாப்பிட்டு போரடிச்சுருச்சா? அப்ப மசாலா சப்பாத்தி செஞ்சு சாப்பிடுங்க…

Posted by - December 8, 2023 0
ஒவ்வொரு நாள் காலையிலும் என்ன சமைப்பது என்று யோசிப்பீர்களா? எப்போதும் இட்லி, தோசை செய்து போரடித்துவிட்டதா? சப்பாத்தி செய்யலாம் என்று பார்த்தால், சப்பாத்தியும் போரடித்துவிட்டதா? ஆனால் நீங்கள்…

தொடர்ந்து 4 சீரியல்களை நிறுத்தப்போகும் விஜய் டிவி- எந்தெந்த தொடர்கள் தெரியுமா?

Posted by - April 3, 2023 0
விஜய் டிவி தமிழ் சினிமாவில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய். இதில் ரசிகர்களை கவரும் வண்ணம் ஏகப்பட்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. எந்த அளவிற்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பி TRPயை…

உயிருக்கு போராடும் தனம்.. மூர்த்தி பிடிவாதத்தால் வரும் பிரச்சனை! பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரொமோ

Posted by - July 24, 2023 0
பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு தற்போது பிரச்சனை மேல் பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது. கண்ணன் லஞ்சம் வாங்கியதற்காக சிறைக்கு சென்று தற்போது ஜாமீனில் வெளியில் வந்திருக்கிறார்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *