மாரிமுத்துவின் கேரக்டருக்கு சரியான நபர் கிடைத்தால் குணசேகரன் மீண்டும் என்ட்ரி ஆகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்நீச்சல் மெகா தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர் மாரிமுத்து உயிரிழந்த நிலையில், அந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு தற்போது எப்படி உள்ளது என்று பார்க்கலாம். சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் தொடர் மூலமாக தமிழகம் முழுவதும் பிரபலம் அடைந்தவர் நடிகர் மாரிமுத்து. இவர் இந்த சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருந்தார்.
பல்வேறு தமிழ் படங்களில் நடித்தும், உதவி இயக்குனராக மாரிமுத்து பணியாற்றியிருந்தாலும் எதிர்நீச்சல் சீரியல்தான் அவரது கெரியரில் திருப்பு முனையாக அமைந்தது. இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பாக மாரிமுத்து மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஏராளமான திரை பிரபலங்கள் மாரிமுத்துவின் உடலுக்கு மரியாதை செலுத்தினர். தற்போது எதிர்நீச்சல் தொடரில் மாரிமுத்துவுக்கு பதிலாக யார் நடிப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே நேரம் மாரிமுத்து இல்லாத எதிர் நீச்சல் தொடர் எப்படி இருக்கிறது என்பதையும் ரசிகர்கள் ஆர்வமாக பார்த்து வருகிறார்கள்.தற்போது மாரிமுத்து வீட்டை விட்டு வெளியேறி விட்டதாக என்பதாக திரைக்கதையை வடிவமைத்துள்ள இயக்குனர் திருச்செல்வம், விறுவிறுப்பு குறையாமல் காட்சிகளை உருவாக்கியுள்ளார். இதனால் மாரிமுத்து இல்லாத ஒரு குறையை தவிர்த்து மற்றபடி எல்லாம் ஓகே என்கிறார்கள் எதிர்நீச்சல் ரசிகர்கள். இதனால் தற்போதும் சீரியில் நம்பர் ஒன் இடத்தை எதிர் நீச்சல் பிடித்திருக்கிறது. டி.ஆர்.பி. ரேட்டிங்கில் 10.79 புள்ளிகளை எதிர்நீச்சல் பெற்றுள்ளது.