அமெரிக்காவிற்கு எதிராக திரும்பிய இந்திய கூட்டாளிகள் – ”ஈரானை அடிச்சது தப்பு” பாக்.,ற்கு கொட்டு

199 0

இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் அமைப்பு நாடுகள் அமெரிக்காவின் சரிநிகர் வரி விதிப்பு முறைக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

BRICS Summit: பிரிக்ஸ் அமைப்பு நாடுகள் பஹல்காம் தாக்குதல் மற்றும் ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களுக்கும் கண்டனம் தெரிவித்துள்ளன.

பிரிக்ஸ் அமைப்பு கண்டனம்:

ஒற்றுமை மற்றும் வலுவான எதிர்ப்பின் வெளிப்பாடாக, பிரிக்ஸ் நாடுகள் ஈரான் மீதான சமீபத்திய ராணுவத் தாக்குதல்கள் மற்றும் ஒருதலைப்பட்ச வர்த்தக வரிகளை அதிகரிக்கும் குறிப்பாக அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளன. ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற கூட்டத்தில், உலகளாவிய வர்த்தக சிக்கல்கள், ராணுவ அதிகரிப்புகள் மற்றும் தீவிரம் குறித்த தங்களது ஒத்த கவலைகளை வெளிப்படுத்தும் வகையில், ரியோ டி ஜெனிரோ பிரகடனம் என்று அழைக்கப்படும் ஒரு கூட்டு அறிக்கையை பிரிக்ஸ் நாடுகள் வெளியிட்டன. புதியதாக இணைந்த எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், இந்தோனேசியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட 11 உறுப்பு நாடுகளை உள்ளடக்கிய விரிவாக்கப்பட்ட பிரிக்ஸ் கூட்டணி, அதிகரித்து வரும் பாதுகாப்புவாதத்தின் மீதான தாக்கம் குறித்து உறுதியான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

11 நாடுகள் சொல்வது என்ன?

கூட்டு அறிக்கையில், “வர்த்தகக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் பெருக்கம், அதன் கண்மூடித்தனமான வரி உயர்வு மற்றும் வரி அல்லாத நடவடிக்கைகள் போன்ற வடிவங்களில் இருந்தாலும் சரி… உலகளாவிய வர்த்தகத்தை மேலும் குறைக்கவும், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை சீர்குலைக்கவும், சர்வதேச பொருளாதார மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் நிச்சயமற்ற தன்மையை அறிமுகப்படுத்தவும் அச்சுறுத்துகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக வர்த்தக அமைப்பின் (WTO) கொள்கைகளுக்கு எதிரான ஒருதலைப்பட்ச வர்த்தக நடவடிக்கைகள் குறித்து இந்தக் குழு கடுமையான கவலைகளை வெளிப்படுத்தியது. தங்கள் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திய தலைவர்கள், விதிகள் அடிப்படையிலான, திறந்த மற்றும் உள்ளடக்கிய பலதரப்பு வர்த்தக முறைக்கு ஆதரவாக தங்கள் ஆதரவை அளித்தனர். WTO கட்டமைப்பிற்குள் வளரும் பொருளாதாரங்களுக்கு சிறப்பு மற்றும் வேறுபட்ட சிகிச்சையின் அவசியத்தை வலியுறுத்தினர்.

பஹல்காம் தாக்குதலுக்கு கண்டம்:

ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரில் 26 பேர் கொல்லப்பட்ட கொடிய தாக்குதலுக்கு பிரிக்ஸ் நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அதில், “பயங்கரவாதத்திற்கு பூஜ்ஜிய சகிப்புத்தன்மையை உறுதி செய்ய நாங்கள் வலியுறுத்துகிறோம், பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் இரட்டை நிலைப்பாடுகளை நிராகரிக்கிறோம்” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சர்வதேச முயற்சிகளை ஆதரித்து, சர்வதேச பயங்கரவாதம் குறித்த விரிவான திட்டங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்ததுள்ளது. தீவிரவாதச் செயல்களின் நோக்கத்தைப் பொருட்படுத்தாமல், எந்தவொரு நியாயப்படுத்தலும் அவற்றை மன்னிக்க முடியாது என்பதை மீண்டும் வலியுறுத்தியது.

ஈரான் மீதான தாக்குதலுக்கு கண்டனம்:

ஜூன் 13 அன்று தொடங்கிய ஈரான் மீதான ராணுவத் தாக்குதல்கள் தொடர்பாகவும், பிரிக்ஸ் நாடுகள் தங்களது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளன. அதில் இந்தத் தாக்குதல்களை சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. சாசனத்தின் “தெளிவான மீறல்” என்று கூறிய பிரிக்ஸ், சர்வதேச அணுசக்தி அமைப்பின் (IAEA) கண்காணிப்பின் கீழ் இயங்கும் பொதுமக்கள் உள்கட்டமைப்பு மற்றும் அணுசக்தி நிலையங்கள் குறிவைக்கப்படுவது குறித்து கடுமையான கவலையையும் வெளிப்படுத்தியுள்ளது.

இதுபோக சர்வதேச பாதுகாப்புகளைத் தவிர்த்து, குற்றச் செயல்களுக்கு நிதியளிக்க தீவிரவாதக் குழுக்கள் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் டிஜிட்டல் நாணயங்களை – கிரிப்டோகரன்சிகள் போன்றவற்றை பயன்படுத்துவதாகவும் பிரிக்ஸ் அமைப்பு எச்சரித்துள்ளது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Related Post

சிங்கப்பூரில் பரவி வரும் புது வகை கொரோனா!..

Posted by - May 22, 2024 0
நோய் வருவதும், அதைக் குணப்படுத்துவதும், சாதாரண மருத்துவ நிகழ்வுதான் என்றாலும், அந்த நோய் தொற்று நோயாக இருக்கும் பட்சத்தில், அது பரவாமல் தடுப்பது மிகவும் முக்கியமானது. புதுவகையான…

இந்த மாத இறுதியில் சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை கடலில் விடுகிறது ஜப்பான்

Posted by - August 7, 2023 0
ஜப்பானில் 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், ஒரு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் விளைவாக ஏற்பட்ட சுனாமியினால் பெரும் கடல் அலைகள் ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையத்தின்…

ஏர்செல் ஓனருக்கு பின்னால் இப்படி ஒரு கதையா? ரூ.40,000 கோடி சொத்துக்கு ஒரே வாரிசு ***வியாக மாறிய கதை!

Posted by - August 25, 2023 0
உலக பணக்காரர்களில் முதன்மையான ஒருவரின் மகன் 40,000 கோடி சொத்துகளை வேண்டாம் என்று விலகி துறவியாகியுள்ளார். அவரை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். உலகின் மாபெரும் பணக்காரர்கள்,…

2026 எப்படி இருக்கும்? : பகீர் கிளப்பும் கணிப்புகள்!

Posted by - December 31, 2025 0
புதிய வருடத்தில் உலகளவில் என்ன மாற்றங்கள் நிகழும், எத்தகைய அரசியல் மாற்றங்கள் ஏற்படும், இயற்கை சீற்றங்கள் பேரழிவுகள் எப்படி இருக்கும் என்பது குறித்தெல்லாம் பாபா வாங்கா என்ன…

இரண்டு வாரங்களில் 6 ஆயிரத்திற்கும் அதிக நிலநடுக்கங்கள் – சிக்கித் திணறிய துருக்கி

Posted by - February 20, 2023 0
துருக்கியில் பிப்ரவரி 6 ஆம் தேதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் சுமார் 6 ஆயிரத்திற்கும் அதிகமுறை நில அதிர்வுகள் ஏற்பட்டதாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *