“சோறு கூட போடுறோம், ஆனா ஓட்டு போட மாட்டோம்“ – நயினாரை அதிர்ச்சியில் உறையவைத்த பாஜக தொண்டர்

160 0

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம், மக்கள் சோறு போட தயாராக இருப்பதாகவும், ஆனால் ஓட்டு போட மாட்டோம் என்று கூறுவதாகவும் தொண்டர் ஒருவர் தெரிவித்ததால், அவர் அதிர்ச்சி அடைந்தார்.

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கட்சிகள் அனைத்தும், தேர்தல் வேலைகளை தொடங்கி தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில், பாஜக பூத் கமிட்டி ஆய்வுக்கு வந்த அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம், அக்கட்சியின் தொண்டர் ஒருவர், சோறு கூட போடுறோ, ஆனா ஓட்டு போட மாட்டோம் என்று மக்கள் கூறுவதாக தெரிவித்து, அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

பாஜக பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் தீவிரம்

தமிழ்நாட்டில், அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், தேர்தலுக்கான பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் பாஜக பூத் கமிட்டி அமைத்து வருகிறது.

இந்நிலையில், விருதுநகரில் பூத் கமிட்டி ஆய்வுக்கு திடீரென சென்றார் அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன். அங்குள்ள ரோசல்பட்டி சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே, அவர் பூத் கமிட்டி ஆய்வுக்கு சென்றார்.

“சோறு கூட போடுறோம், ஆனா ஓட்டுப் போட மாட்டோம்“

அப்போது, அங்கு வந்திருந்த பாஜக தொண்டர் ஒருவர், “நீங்கள் தேர்தலில் நில்லுங்கள், உங்களுக்கு சாப்பாடு கூட போடுறோம், ஆனா ஓட்டுப் போட மாட்டோம் என எல்லாரும் சொல்றாங்க“ என்று நயினார் நாகேந்திரனிடம் தெரிவித்தார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்தார் நயினார் நாகேந்திரன். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட பாஜக நிர்வாகிகள், அந்த தொண்டரிடம், அதைப் பற்றி பிறகு பேசிக் கொள்ளலாம் எனக் கூறி அவரை அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவத்தால் நயினார் அதிர்ச்சியடைந்தாலும், அங்கிருந்த மற்றவர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அந்த தொண்டரின் கருத்து மக்களின் எண்ணங்களை அப்படியே பிரதிபலிப்பதாக சிலர் கமெண்ட் செய்துள்ளனர்.

பொதுவாக இது போன்ற விஷயங்களில் அண்ணாமலை உஷாராக இருப்பார். அவரது அதிரடி நடவடிக்கைகள், பேச்சுக்களால், பாஜக தொண்டர்கள் அவர் அருகில் போவதற்கே யோசிப்பார்கள். ஆனால், நயினார் நாகேந்திரன் அடிப்படையிலேயே மென்மையான போக்கைக் கொண்டவர். இதனால் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துவிட்டது. இதற்குப் பிறகாவது, அவர் கொஞ்சம் ஸ்ட்ரிக் ஆஃபீசராக மாறுவாரா என்று பார்க்க வேண்டும்.

தேர்தல் நெருங்கி வருவதால், இதுபோன்ற கட்டெண்ட்டுகளை கொடுக்காமல் இருப்பது கட்சிக்கு நல்லது. என்ன செய்வார் நயினார்.?

 

Related Post

’திமுக மாவட்ட செயலாளர்கள் மாற்றம்’ அதிரடி காட்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

Posted by - October 8, 2025 0
சென்னையை அமைப்பு ரீதியாக 7 மாவட்டங்களாக பிரிக்கவும், டெல்டாவில் உள்ள ஒரு மாவட்டத்தை இரண்டாக பிரிக்கவும் திமுக தலைமை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. விரைவில் ஆறு மாவட்ட…

’’அமைச்சர் பொன்முடிக்கு பட்டை நாமம்’’- பதவியை பறித்த முதல்வர் ஸ்டாலின்- இதுதான் காரணமா?

Posted by - April 11, 2025 0
திமுக துணை பொது செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் பொன்முடி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். தந்தை பெரியார் திராவிடர் கழக…

”தமிழக அரசே.. விஜயை சுதந்திரமாக பேச விடுங்க” காங்., தலைவர் செல்வப்பெருந்தகை கோரிக்கை

Posted by - September 23, 2025 0
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சுதந்திரமாக பேசவும், பயணிக்கவும் தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். வாக்குத் திருட்டுக்கு…

த.வெ.க.வை கண்டு பயத்தின் உச்சத்தில் தி.மு.க. – விஜய் கடும் விமர்சனம்

Posted by - September 9, 2025 0
வெற்று விளம்பர மாடல் அரசு, நமது தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் நலனுக்கான செயல்பாடுகளைக் கண்டாலே அஞ்சி நடுங்குகிறது. ஆனந்த் மீதும் கழகத் தோழர்கள் மீதும் பதியப்பட்ட…

நடிகர் பிரகாஷ் ராஜ் அரசியல் அனுபவம் இல்லாதவர் – போறபோக்கில் கலாய்த்த அண்ணாமலை

Posted by - May 30, 2024 0
பாஜகவை பற்றி பேசும் அளவுக்கு நடிகர் பிரகாஷ் ராஜுக்கு , அரசியல் அனுபவம் இல்லை என தமிழக தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது தற்போது செம வைரலாக வலம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *