ரசிகர்களை சுயநலத்திற்காகவோ, தவறாகவோ பயன்படுத்த மாட்டேன் – நடிகர் அஜித் குமார்

147 0

ரசிகர்களின் அன்பை சுயநலத்திற்காகவோ, தவறாகவோ பயன்படுத்த மாட்டேன் என நடிகர் அஜித் குமார் தெரிவித்துள்ளார்.

சினிமாத் துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள அஜித் குமார், தனது ரசிகர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், எந்த பின்புலமோ, யாருடைய சிபாரிசோ இல்லாமல் தான் சினிமா துறைக்குள் நுழைந்ததாக தெரிவித்துள்ள அஜித் குமார்,  எண்ணில் அடங்காத வெற்றிகளையும், தோல்விகளையும் சினிமா துறையில் பார்த்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு முறை தனது வெற்றி மீது சந்தேகம் கொள்ளும்போதும் ரசிகர்களின் அன்பும், ஆதரவுமே தன்னை மீண்டு வர செய்துள்ளதாகவும், ரசிகர்களின் அன்புக்கு என்றும் உண்மையாகவும், உறுதுணையாகவும் இருப்பேன் என்றும் அஜித் குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், தான் இன்று என்னவாக இருக்கிறேனோ அதற்கு முக்கிய காரணம் தனது ரசிகர்கள் மட்டுமே என தெரிவித்துள்ள அவர், ரசிகர்களின் அன்பை தனது சுயநலத்திற்காகவோ, தவறாகவோ பயன்படுத்த மாட்டேன் எனவும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

33 ஆண்டுகால சினிமாத் துறையில் தனக்கு ஊக்கமளித்து, உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ள நடிகர் அஜித் குமார்,  தனக்கு பத்ம பூஷன் விருது வழங்கி தனது சமூக மரியாதை மற்றும் பொறுப்பை மேலும் பலப்படுத்திய குடியரசு தலைவர், பிரதமர் மற்றும் மத்திய அரசுக்கு அதற்காக நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Related Post

அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் எப்படி இருக்கு? படம் பார்த்தவர்கள் கூறிய விமர்சனம்

Posted by - March 20, 2025 0
குட் பேட் அக்லி விடாமுயற்சி படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளிவரவிருக்கும் குட் பேட் அக்லி படத்திற்கு ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.அதுவும், அஜித்தின் தீவிர ரசிகர், இயக்குநர் ஆதிக்…

அர்ஜுனுக்கு முன் 3 நடிகர்களை முதல்வன் படத்தில் நடிக்க வைக்க அணுகியுள்ள ஷங்கர்- யார் யார் தெரியுமா?

Posted by - February 2, 2024 0
முதல்வன் படம் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும் படங்கள் அனைத்துமே மக்களிடம் நல்ல ரீச் பெறும். அப்படி 1999ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான்…

”கண்ணை நம்பாதே” திரை பார்வை..

Posted by - March 18, 2023 0
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மு. மாறன் இயக்கத்தில் இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள திரைப்படம் கண்ணை நம்பாதே. திரில்லர் கதைக்களத்தில் உதயநிதி எப்படி நடித்துள்ளார் என்பதை பார்ப்பதற்காகவே இப்படத்தின்…

கூலி படம் எப்படி இருக்கு? படம் பார்த்துவிட்டு அமைச்சர் உதயநிதி சொன்ன விமர்சனம்

Posted by - August 13, 2025 0
கூலி நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். நாளை இப்படம் வெளிவரவுள்ளது. இந்த நிலையில், கூலி திரைப்படத்தை…

இரண்டாம் திருமணம் செய்யும் நாகா சைதன்யா.. பெண் குடும்பம் பற்றி வந்த தகவல்

Posted by - September 15, 2023 0
தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிகை சமந்தாவை பல வருடங்கள் காதலித்து 2017ல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக 2021ல் பிரிவை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *