ரசிகர்களை சுயநலத்திற்காகவோ, தவறாகவோ பயன்படுத்த மாட்டேன் – நடிகர் அஜித் குமார்

146 0

ரசிகர்களின் அன்பை சுயநலத்திற்காகவோ, தவறாகவோ பயன்படுத்த மாட்டேன் என நடிகர் அஜித் குமார் தெரிவித்துள்ளார்.

சினிமாத் துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள அஜித் குமார், தனது ரசிகர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், எந்த பின்புலமோ, யாருடைய சிபாரிசோ இல்லாமல் தான் சினிமா துறைக்குள் நுழைந்ததாக தெரிவித்துள்ள அஜித் குமார்,  எண்ணில் அடங்காத வெற்றிகளையும், தோல்விகளையும் சினிமா துறையில் பார்த்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு முறை தனது வெற்றி மீது சந்தேகம் கொள்ளும்போதும் ரசிகர்களின் அன்பும், ஆதரவுமே தன்னை மீண்டு வர செய்துள்ளதாகவும், ரசிகர்களின் அன்புக்கு என்றும் உண்மையாகவும், உறுதுணையாகவும் இருப்பேன் என்றும் அஜித் குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், தான் இன்று என்னவாக இருக்கிறேனோ அதற்கு முக்கிய காரணம் தனது ரசிகர்கள் மட்டுமே என தெரிவித்துள்ள அவர், ரசிகர்களின் அன்பை தனது சுயநலத்திற்காகவோ, தவறாகவோ பயன்படுத்த மாட்டேன் எனவும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

33 ஆண்டுகால சினிமாத் துறையில் தனக்கு ஊக்கமளித்து, உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ள நடிகர் அஜித் குமார்,  தனக்கு பத்ம பூஷன் விருது வழங்கி தனது சமூக மரியாதை மற்றும் பொறுப்பை மேலும் பலப்படுத்திய குடியரசு தலைவர், பிரதமர் மற்றும் மத்திய அரசுக்கு அதற்காக நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Related Post

இந்த புகைப்படத்தில் இருக்கும் டாப் ஹீரோ யார் தெரியுமா..

Posted by - February 29, 2024 0
வைரல் புகைப்படம் திரையுலகில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாகும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் டாப் நட்சத்திரமாக இருந்த ஒருவரின் சிறு…

நாட்டாமை படத்தில் முதலில் நடிக்கவிருந்தது குஷ்பூ இல்லை.. உண்மையை கூறிய கே.எஸ். ரவிகுமார்

Posted by - May 18, 2024 0
கே.எஸ். ரவிக்குமார் தமிழ் சினிமாவில் கமர்ஷியல் இயக்குனர்களில் பல சூப்பர்ஹிட் கொடுத்தவர் கே.எஸ். ரவிக்குமார். நாட்டாமை,  முத்து, படையப்பா, தசாவதாரம், வரலாறு என பல படங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.…

மூக்குத்தி அம்மன் பார்ட் 2 – இம்முறை அம்மனாக நயன்தாரா கிடையாதாம்..?

Posted by - June 1, 2024 0
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாக இருக்கும் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று இணையத்தில் செம் வைரலாக வலம் வருகிறது. தமிழ் சினிமாவில்…

சிம்பு ரசிகர்கள் கொண்டாட்டம்..திரையரங்கில் வெளியான அரசன் ப்ரோமோ..இதுலகூட டப்பிங் பிழையா!

Posted by - October 17, 2025 0
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் அரசன் படத்தின் ப்ரோமோ  திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. வடசென்னையை கதையுலகில் பகுதியாக வெற்றிமாறன் சிம்புவை வைத்து இயக்கி வரும் திரைப்படம் அரசன்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *