“புலம்பெயர் பிகார் மக்கள் தமிழ்நாட்டு வாக்காளர்களாக இங்கே வாக்களிக்க முடியும்” – தேர்தல் ஆணையம் விளக்கம்!

109 0

புலம்பெயர்ந்தவர்களை தமிழ்நாட்டு வாக்காளர்களாக அங்கீகரிப்பது சட்டவிரோதமானது என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்ந்த பிகார் மாநிலத்தவர்கள், தமிழ்நாட்டு வாக்காளர்களாக, இங்கேயே வாக்களிக்க முடியும் என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
பிகாரில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு வாக்காளர் திருத்தத்தில், சுமார் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. இதில், ஆறரை லட்சம் வாக்காளர்கள் தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்ந்ததாகவும், அவர்கள் தமிழ்நாட்டு வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவார்கள் என்றும் தகவல் வெளியானது. இதனை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் கருத்து உண்மைக்குப் புறம்பானது என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

அதாவது, அரசியலமைப்பு சட்டப்படி இந்தியாவின் எந்தப் பகுதியிலும், ஒரு குடிமகனால் வாக்காளராக மாற முடியும் என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால், இதுவரை எந்த கணக்கெடுப்பும் எடுக்காத நிலையில், பிகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களில் ஆறரை லட்சம் பேர் தமிழ்நாட்டு வாக்காளர் பட்டியலில் சேர்வார்கள் என்று கூறுவது உண்மைக்குப் புறம்பானது என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
அதே சமயம், பிகாரைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் வசித்துவந்தால், அவர்கள் இங்கேயே வாக்காளர் அட்டை பெற்று வாக்களிக்க முடியும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் திருத்தப்பணிகள் இன்னும் தொடங்கப்படாத நிலையில், தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.முன்னதாக, புலம்பெயர்ந்தவர்களை தமிழ்நாட்டு வாக்காளர்களாக அங்கீகரிப்பது சட்டவிரோதமானது என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டு வாக்காளர்கள் தங்களுக்கு விருப்பமான அரசைத் தேர்ந்தெடுக்கும் உரிமையில் மிகப்பெரிய தாக்கத்தை இது ஏற்படுத்தும் என்றும் கவலை தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையம் தனது அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்து மாநிலங்களின் தேர்தல் தன்மை மற்றும் முறைகளை மாற்ற முயற்சி செய்வதாகவும், இதற்கு எதிராக அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் போராட வேண்டும் என்றும் ப.சிதம்பரம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Post

கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?

Posted by - December 8, 2025 0
பணி நியமனங்களில் முறைகேடு விவகாரத்தில் 1,020 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக தெரிவித்துள்ள அமலாத்துறை அமைச்சர் கே என் நேரு மீது எப்ஐஆர் பதிவு செய்ய கோரி…

மாம்பழம் விற்பது போல கூவி கூவி ஆட்களைச் சேர்த்து வருகின்றனர் திமுகவினர் : அண்ணாமலை

Posted by - July 18, 2025 0
மாம்பழம் விற்பது போலக் கூவி கூவி ஓரணியில் தமிழ்நாடு என ஆட்களை திமுக சேர்த்து வருவதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இத்தொடர்பாகத் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பேசியவர்,…

பொது சொத்துக்கள் சேதம்! ”சட்டம் தன் கடமையை செய்யும்”அமைச்சர் ரகுபதி விஜய்க்கு பதிலடி

Posted by - September 15, 2025 0
“விஜய்யின் வருகையால் திமுகவின் வாக்கு வங்கி பாதிக்க எந்த ஒரு வாய்ப்பும் கிடையாது. தவெக விதிமுறைகளை மீறிய விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும் என்று அமைச்சர்…

விஜய் சொன்ன முக்கிய தகவல்..

Posted by - February 2, 2026 0
தவெக 3ஆம் ஆண்டையொட்டி விஜய் கூறுகையில், ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம். சலனங்களைப் புறந்தள்ளி, சமநிலை தவறாத, அளக்கவியலாத ஆழ்கடல் த.வெ.க.; எவராலும் விலக்க இயலாத விரிவானம்…

அமைச்சர் மெய்யநாதனை புறக்கணிக்கிறாரா அமைச்சர் ரகுபதி?

Posted by - August 26, 2025 0
புதுக்கோட்டை மாவட்ட திமுக-வில் அமைச்சர்கள் ரகுபதியும் சிவ.வீ.மெய்யநாதனும் அசைக்கமுடியாத சக்தியாக இருப்பவர்கள். இதில், ரகுபதி புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் இருப்பதால் கூடுதல் அதிகாரத்துடன் கோலோச்சி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *