அப்செட்டில் ராமதாஸ் – தலைவராகும் அன்புமணி? ஒகே சொன்ன நீதிமன்றம் – இன்று பாமக பொதுக்குழு

136 0

அன்புமனி அறிவித்தபடி பாமக பொதுக்குழுவை கூட்ட எந்த தடையு,ம் விதிக்க முடியாது என, ராமதாஸின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

உட்கட்சி விவகாரம் தொடர்பான ராமதாஸ் சிவில் நீதிமன்றத்தை நாடலாம் என, ராமதாஸிற்கு உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

ராமதாஸின் கோரிக்கை:

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பாமகவில் அதிகாரம் யாருக்கு என்ற பெயரில் மோதல் வெடித்துள்ளது. கட்சி நிறுவனர் ராமதாஸிற்கும், அவரது மகனும் பாமகவின் தலைவருமான அன்புமணிக்கும் இடையேயான பிரச்னை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. அன்புமணி தன்னிடம் இருந்து கட்சியை கபளிகரம் செய்ய முயல்வதாக வெளிப்படையாகவே ராமதாஸ் குற்றம்சாட்டினார். இந்நிலையில், அவர் அறிவித்த பொதுக்குழுவிற்கு எதிராக அன்புமணி ஒரு பொதுக்குழு கூட்டத்தை அறிவித்தார். அதற்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

பேச்சுவார்த்தை நடத்திய நீதிபதி:

மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே தனிப்பட்ட முறையில் நான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கூறி பலரையும் ஆச்சரியப்படுத்தினார். தொடர்ந்து, மாலை 5.30 மணியளவில் இருவரும் என்னை தனியே நேரில் சந்திக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அதன்படி, ராமதாஸ் காணொலி வாயிலாக ஆஜராகி நீதிபதியிடம் தனது தரப்பு விளக்கங்களை எடுத்துரைத்தார். அதேநேரம், அன்புமணி தனியாக நீதிபதியை சந்தித்து விளக்கமளித்தார். தொடர்ந்து, நீதிமன்றத்திலும் இருதரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

அன்புமணிக்கு ஓகே சொன்ன நீதிமன்றம்:

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், இறுதியில் அன்புமணி பொதுக்குழு கூட்டத்தை கூட்ட தடை விதிக்க முடியாது என தீர்ப்பளித்தார். உட்கட்சி விவகாரம் தொடர்பாக ராமதாஸ் சிவில் நீதிமன்றத்தை நாடலாம் எனவும் உறுதியளித்தார். இதனை தொடர்ந்து அன்புமணி அறிவித்தபடி, அவரது தலைமையில் இன்று பாமக பொதுக்குழு கூட உள்ளது. அதேநேரம், உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராமதாஸ் தரப்பு முடிவு செய்துள்ளதாம்.

தலைவராகும் அன்புமணி?

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் இந்த பொதுக்குழு கூட்டம் கூட உள்ளது. அதன் முடிவில், நிர்வாகிகளின் ஆதரவுடன் அன்புமணி மீண்டும் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என கூறப்படுகிறது. பாமகவின் சட்டவிதிகளின்படி அன்புமணியிம் 3 ஆண்டுகால தலைவர் பதவி கடந்த ஆகஸ்ட் மாதமே முடிவடைந்துவிட்டது. எனவே ஒட்டுமொத்த அதிகாரமும் தனக்கே இருப்பதாக ராமதாஸ் கூறி வருகிறார். அதை மேலும் வலுப்படுத்தவே பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, தன்னையே தலைவராக அறிவித்துக்கொள்ள முடிவு செய்தார். அந்த திட்டத்தை முறியடிக்கும் விதமாகவே, அன்புமணி முன்கூட்டியே இன்று பொதுக்குழு கூட்டத்தை அறிவித்துள்ளார். அதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை என்ற ராமதாஸின் கோரிக்கையை தான், நீதிமன்றமும் புறக்கணித்துள்ளது. இதனால், அன்புமணி மீண்டும் அதிகாரப்பூர்வமாக பாமகவின் தலைவராவது உறுதியாகியுள்ளது.

ராமதாஸிற்கு என்ன வாய்ப்பு:

ஏற்கனவே பெரும்பாலான நிர்வாகிகள் அன்புமணிக்கே ஆதரவு தெரிவிப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே பலரையும் நீக்கிவிட்டு, தனக்கு ஆதரவானவர்களுக்கு ராமதாஸ் பதவிகளை வழங்கி வந்தார். ஆனால், அதுதொடர்பான அறிவிப்புகள் செல்லாது என அன்புமணி அறிவித்து வருகிறார். இந்நிலையில் தான் உட்கட்சி விவகாரத்திற்கு தீர்வு காண ராமதாஸ் சிவில் நீதிமன்றத்தை அடையலாம் என உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. அப்படியே செய்தால், தற்போது அதிமுக கட்சி தொடர்பான வழக்குகள் ஆண்டுகணக்கில் செல்வதை போன்றே நீடிக்கும். உடனடியாக எந்தவொரு தீர்ப்பும் கிடைக்காது என்பதே நிதர்சனமாக உள்ளது. எனவே, அந்த முயற்சியை ராமதாஸ் முன்னெடுப்பாரா? அல்லது மேல்முறையீட்டில் அவருக்கு சாதகமான சூழல் அமையுமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Related Post

ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக

Posted by - November 20, 2025 0
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தநிலையில் கடந்த 2 மாதமாக அமைதி காத்து வந்த விஜய், வருகிற டிசம்பர் 4ஆம் தேதி சேலத்தில்…

நீதிமன்றங்களின் தொடர் குட்டுகளால் அறிவாலய அரசு கதிகலங்கிப் போயுள்ளது – நயினார் நாகேந்திரன்

Posted by - October 11, 2025 0
நீதிமன்றங்களின் தொடர் குட்டுகளால் அறிவாலய அரசு கதிகலங்கிப் போய் கிடப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில்,   பகுஜன்…

“ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது” – பிரதமர் மோடி

Posted by - January 23, 2026 0
“ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது. தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறது” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.…

விண்டேஜ் கார் ஓட்டுவதையும், சிலம்பம் சுற்றுவதையும் ரீல்ஸ் பதிவிட்டு விளையாடுவதா.!

Posted by - January 12, 2026 0
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாக தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, 3 மாத காலத்திற்குள் முடிவு எட்டப்படும் என தெரிவித்துள்ளார். அரசு மருத்துவமனையில் கொலை சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் அதிகாலையில் ரவுடி ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தின் தலைநகர்…

பிரபல தொலைக்காட்சியை வாங்கப்போகும் தவெக?

Posted by - January 21, 2026 0
தமிழ்நாட்டின் பிரபலமான செய்தி தொலைக்காட்சி ஒன்றை வாங்க தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் மிகவும் தீவிரமாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *