பிரபல தொலைக்காட்சியை வாங்கப்போகும் தவெக?

67 0

தமிழ்நாட்டின் பிரபலமான செய்தி தொலைக்காட்சி ஒன்றை வாங்க தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் மிகவும் தீவிரமாக செயலாற்றி வருகின்றனர். திமுக, அதிமுக என அரைநூற்றாண்டுகளைக் கடந்து இரு கட்சிகளுக்கும் போட்டியாக தமிழக வெற்றிக் கழகம் இறங்கியுள்ளது.

நெருங்கும் தேர்தல்:

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் கட்சியைத் தொடங்கிய விஜய், கடந்தாண்டு பிற்பாதி முதலே தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். ஆனால், கரூர் சம்பவம் தவெக-வை மிக கடுமையாக பாதித்தது. செங்கோட்டையன் வருகைக்கு பிறகு விஜய்யின் அரசியல் பயணம் தீவிரமாகும் என்று எதிர்பார்த்த நிலையில், அவர் ஜனநாயகன் சிக்கலில் சிக்கி அமைதியாகவே உள்ளார்.

தொலைக்காட்சி தொடங்கும் தவெக:

ஒவ்வொரு முன்னணி கட்சிகளும் தங்களுக்கு என்று தொலைக்காட்சிகள் வைத்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகமும் தங்களுக்கு சாதகமாக செயல்பட தொலைக்காட்சியை தொடங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். புதியதாக தொலைக்காட்சி தொடங்க உரிமம் வாங்குவது உள்பட பல சவால்கள் இருப்பதால், ஏற்கனவே இயங்கி வரும் தொலைக்காட்சியை வாங்க தவெக நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்காக, தமிழ்நாட்டில் ஒளிபரப்பாகி வரும் மிகவும் பழமையான ஊடக நிறுவனத்தின் தொலைக்காட்சியை வாங்குவதற்கு தமிழக வெற்றிக் கழகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதற்காக, அந்த தொலைக்காட்சி நிறுவனத்திற்கு 3 முறை நேரடியாக சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

கட்டுப்படியாகாத விலை:

ஆனால், அந்த நிறுவனம் கூறிய விலை தவெக எதிர்பார்த்த தொகையை காட்டிலும் அதிகளவு இருப்பதால் அந்த தொலைக்காட்சியை வாங்குவதில் இழுபறியாக உள்ளது. மேலும்,  மற்றொரு தொலைக்காட்சியிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் பெயர் மாற்ற ஒப்புக்கொள்ள மறுத்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக, அந்த தொலைக்காட்சியை கைப்பற்ற தமிழக வெற்றிக் கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

விரைவில் அறிவிப்பு:

திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில்,  தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயும், அக்கட்சியின் நிர்வாகிகளும் முக்கிய விவகாரங்களில் வாயைத் திறக்காமல் தொடர்ந்து மெளனம் காத்து வருகின்றனர்.

தங்களுக்கு சாதகமாக ஒரு தொலைக்காட்சி செயல்பட்டால் அது தவெக-வின் குரலாக ஒலிக்கும் என்றும் எதிர்பார்க்கின்றனர். தொலைக்காட்சியின் விலை தவெக எதிர்பார்த்த தொகைக்கு வந்தால் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்வம்:

தற்போது வரை விஜய்க்கும், தமிழக வெற்றிக் கழகத்திற்கும் ஆதரவாக எக்ஸ், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்களும், தவெக ஆதரவாளர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல, திமுக – அதிமுக ஆகிய கட்சிகளுக்கு ஆதரவாகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால், இணையத்தில் தொடர் மோதல் வெடித்து வருகிறது. ஆனால், தங்களுக்கு என்று அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி இருந்தால் சாமானிய மக்களைச் சென்றடைவது இன்னும் எளிதாக இருக்கும் என்பதால் இந்த தொலைக்காட்சியை விரைவில் தொடங்க தவெக ஆர்வம் காட்டி வருகிறது.

 

Related Post

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000 வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Posted by - January 4, 2026 0
சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இயற்கையின் முதன்மை வடிவாய்…

ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்.. புது காரணத்தை சொன்ன ஆர்.என். ரவி – சட்டபேரவையில் என்ன பிரச்னை?

Posted by - January 20, 2026 0
 தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் உரையை வாசிக்காமலேயே தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆளுநர் ஆர். என் ரவி வெளிநடப்பு செய்தார். TN Assembly 2026: தமிழ்நாடு சட்டமன்றத்தில்…

அ.தி.மு.க. கூட்டணியில் சேர திட்டம்? – கட்சி நிர்வாகிகளுடன் சீமான் தீவிர ஆலோசனை

Posted by - July 23, 2025 0
  #Seeman #NaamThamizha Katchi #ADMK #TNAssemblyElection #சீமான் #நாம்தமிழர்கட்சி #அதிமுக #எடப்பாடிபழனிசாமி #தமிழகசட்டசபைதேர்தல் 2010-ம் ஆண்டு முதல் நாம் தமிழர் கட்சியை வழி நடத்தி வரும்…

விண்டேஜ் கார் ஓட்டுவதையும், சிலம்பம் சுற்றுவதையும் ரீல்ஸ் பதிவிட்டு விளையாடுவதா.!

Posted by - January 12, 2026 0
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாக தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, 3 மாத காலத்திற்குள் முடிவு எட்டப்படும் என தெரிவித்துள்ளார். அரசு மருத்துவமனையில் கொலை சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் அதிகாலையில் ரவுடி ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தின் தலைநகர்…

தீர்ப்பு வழங்கியதற்காகவே மோசமாக விமர்சிக்கின்றனர்: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி

Posted by - October 6, 2025 0
சென்னை: வழக்குகளில் தீர்ப்பு வழங்கியதற்காக நீதிபதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் பின்புலம் குறித்து சமூக வளைதளத்தில் மோசமாக விமர்சிக்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.செந்தில்குமார் தெரிவித்துள்ளார். யூடியூப்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *