இன்று நெல்லை வரும் அமித்ஷா.. நயினார் வீட்டில் விருந்து..! விஜய்க்கு எதிராக வியூகம் வகுப்பாரா?

145 0

திருநெல்வேலியில் இன்று நடக்கும் பாஜக பூத் கமிட்டி முதல் மண்டல மாநாட்டில் பங்கேற்பதற்காக அமித்ஷா இன்று வருகிறார்.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.  அதற்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். மத்தியில் ஆளுங்கட்சியான பாஜக தமிழ்நாட்டில் அதிமுக-வுடன் கூட்டணி வைத்துள்ளது.

திருநெல்வேலி வரும் அமித்ஷா:

இந்த பரபரப்பான சூழலில், தமிழ்நாட்டிற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிறார். கேரளாவில் இன்று மதியம் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு மதியம் 2.50 மணியளவில் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு அமித்ஷா வருகிறார். தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தரும் அமித்ஷா அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டைக்குச் செல்கிறார்.

நயினார் வீட்டில் விருந்து:

பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்திற்கு ஹெலிகாப்டர் மூலமாக வரும் அமித்ஷா அங்கிருந்து பெருமாள்புரத்தில் அமைந்துள்ள என்ஜிஓ காலனியில் உள்ள தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டிற்குச் செல்கிறார். நயினார் நாகேந்திரன் வீட்டில் அமித்ஷாவிற்கு தேநீர் விருந்துக்கு அளிக்கப்படுகிறது.

பின்னர், நயினார் நாகேந்திரன் வீட்டில் இருந்து இன்று திருநெல்வேலியில் பாஜக பூத் கமிட்டி முதல் மண்டல மாநாட்டில் பங்கேற்கிறார். வண்ணாரப்பேட்டை வழியாக பாஜக பூத் கமிட்டி மண்டல மாநாட்டிற்கு வரும் அமித்ஷா மதியம் 3.20 மணியளவில் பங்கேற்கிறார்.

தவெக பற்றி பேசுவாரா?

இந்த பூத் கமிட்டி மண்டல மாநாட்டில் தமிழ்நாட்டில் பாஜக-வை வலுப்படுத்துவது எப்படி? பாஜக-வின் வாக்குகளை எப்படி அதிகரிப்பது? வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக-வுடனான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு, தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்க உள்ளனர்.

தமிழ்நாட்டில் வரும் சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் கட்சி என்று எதிர்பார்க்கப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகம் பற்றியும் இந்த பூத் கமிட்டி மண்டல மாநாட்டில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், தமிழக வெற்றிக் கழகம் தன்னுடைய கொள்கை எதிரி என்று பாஜக-வையே குறிப்பிட்டு வருகின்றனர்.

பலத்த பாதுகாப்பு:

மதுரையில் நேற்று நடந்த மாநாட்டில் பாஜக- அதிமுக கூட்டணியை மிக கடுமையாக விமர்சித்தார். அமித்ஷா பங்கேற்கும் இந்த மாநாட்டில் நயினார் நாகேந்திரன், தமிழிசை சவுந்தர்ராஜன், அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன் , எச்.ராஜா உள்ளிட்ட பலரும் பங்கேற்கின்றனர்.

அமித்ஷா வருகையை முன்னிட்டு ஒட்டுமொத்த திருநெல்வேலியும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆயுதப்படை மைதானம் முதல் விழா மேடை வரை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அமித்ஷாவின் வருகைக்கு பிறகு தமிழக பாஜக சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளில் மேலும் தீவிரம் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாநாட்டிற்காக தமிழ்நாடு வரும் அமித்ஷா தமிழக பாஜக-வின் தலைவர்களுடனும் தனியாக ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நயினார் நாகேந்திரன் வீட்டில் இந்த ஆலோசனை நடக்கும் என்று கருதப்படுகிறது. இந்த ஆலோசனையில் தமிழக பாஜக தலைவர்களுக்கு சில தனிப்பட்ட உத்தரவுகளை அமித்ஷா வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

என்ன தொல்லை கொடுத்தாலும் தமிழக வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது: தென்காசியில் முதல்வர் பேச்சு

Posted by - October 29, 2025 0
தென்காசி: என்ன தொல்லை கொடுத்தாலும் தமிழக வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அருகே அரசு சார்பில் ரூ.1.020…

“சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பில்லை, எங்கே போனார் அப்பா.?“

Posted by - July 19, 2025 0
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எழுச்சிப் பயணம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்று இரவு திருவாரூரில் பேசியபோது, திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். ‘மக்களை…

தாக்கும் காங்கிரஸ்… தயங்கும் திமுக! – என்ன மாயம் செய்தார் ராஜேந்திர பாலாஜி?

Posted by - November 17, 2025 0
சிவகாசியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், இம்முறை சிவகாசியில் போட்டியிடும் திட்டத்துடன் இருக்கும் திமுக மவுன சாட்சியாக நிற்பது…

விஜய் முதலமைச்சர் ஆவாரா?

Posted by - February 10, 2026 0
நடிகர் விஜய் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட தொடங்கிய பிறகு, அவரை பற்றிய பேச்சு தேசிய அளவிலும் வர தொடங்கி இருக்கிறது. அவரது கடைசி படமான…

ஆசிரியர் தகுதித் தேர்வு: கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி! திமுக அரசுக்கு வைத்த கோரிக்கை என்ன?

Posted by - August 12, 2025 0
நிர்வாகத் திறனற்ற திமுக அரசு, நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என அறிவித்து விளம்பரம் வெளியிட்டுள்ளது – எடப்பாடி பழனிசாமி.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *