என் குழந்தையோட அப்பா..! கர்ப்பமாக்கி ஏமாற்றிய மாதம்பட்டி ரங்கராஜ்? ஜாய் கிரிசில்டா புகார்

62 0

நடிகரும், சமையல் கலை நிபுணருமான மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா குற்றம்சாட்டியுள்ளார்.

Madhampatty Rangaraj: மாதம்பட்டி ரங்கராஜிற்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகார்?

நடிகரும், சமையல் கலை நிபுணருமான மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக, பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், “சென்னையில் கோயிலில் வைத்து  தன்னை திருமணம் செய்து கொண்ட ரங்கராஜ் சேர்ந்து வாழ மறுக்கிறார்” என குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணம் செய்து கொள்வதாக கூறி கர்ப்பமாக்கி விட்டு தன்னுடன் சேர்ந்து வாழாமல் ஏமாற்றிவிட்டதாக குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கர்ப்பமான நிலையில் திருமணம்?

மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்கான்வே ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து, தனது இரண்டு மகன்களுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தான், அவர் வேறொரு பெண்ணுடன் உறவில் இருப்பதாக தகவல்கள் கசிந்தன. யாரும் எதிர்பாராத விதமாக, ரங்கராஜ் தன்னை திருமணம் செய்துகொண்டதாக இருவரும் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை ஹாய் அண்மையில் சமூக வலைதளத்தில் வெளியிட்டார். தொடர்ந்து அடுத்த சில தினங்களிலேயே நாங்கள் 6 மாத கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார்.

நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்ட ஜாய்

தொடர்ந்து தனது நிறைமாத கர்பத்தை வெளிப்படுத்தும் விதமான புகைப்படங்களையும், மருத்துவமனையில் பரிசோதனைக்கு சென்றது, தனது குழந்தைக்கு ராஹா என பெயர் சூட்டி இருக்கிறேன் என்பது தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டார். மேலும், ரங்கராஜ் உடன் பல்வேறு நேரங்களில் இருந்தபோது எடுத்த புகைப்படங்களையும் சமூக வலைதளங்களிலும் பதிவிட்டார். அதேநேரத்தில், இதுகுறித்து எதுவும் பேசாமல் அமைதி காத்து வந்த ரங்கராஜ், தனது மனைவி ஸ்ருதியுடன் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்ற புகைப்படங்கள் வெளியாக பேசுபொருளாகின. இந்நிலையில் தான், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாக, காவல்துறையில் ஜாய் கிரிசில்டா புகாரளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜாய் – ரங்கராஜ் இடையே மோதல்?

ஸ்ருதி உடனான திருமண உறவை தாண்டியே, ஜாயை காதலித்து ரங்கராஜ் திருமணம் செய்துள்ளார். இது ரகசியமாகவே இருந்த நிலையில் தான், இருவருக்கும் இடையே ஏதோ மனக்கசப்பு ஏற்பட்டதாகவும், அதன் விளைவாகவே ஜாய் திருமண புகைப்படங்களை வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ரங்கராஜ் தரப்பு அதிருப்தி அடைய, அதன் உச்சபட்சமாகவே ஜாய் காவல்துறையை அணுகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யார் இந்த மாதம்பட்டி ரங்கராஜ்

உணவுத்துறையை சேர்ந்த பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த ரங்கராஜும், பிரபலமான சமையல் கலை நிபுணராக அறியப்படுகிறார். அதையும் தாண்டி மெஹந்தி சர்கஸ் எனும் திரைப்படத்தின் மூலம் நடிகர் பயணத்தை தொடங்கினார். தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சமையல் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் மூலம் வெகுஜன மக்களிடையே மிகவும் பிரபலமானவராக மாதம்பட்டி ரங்கராஜ் உருவெடுத்துள்ளார். இதுபோக, தமிழ்நாட்டின் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களின் வீடுகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில், மாதம்பட்டி ரங்கராஜின் உணவு வகைகள் தான் விருந்தினரை ஆச்சரியமைடய செய்கிறது.

Related Post

இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்காத ஸ்டாலினுக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்! : வானதி சீனிவாசன்

Posted by - April 10, 2024 0
‘இந்துஸ்தான் டைம்ஸ்’ ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நாங்கள் அனைத்து மதத்தினரின் நலன்களையும் பாதுகாப்பவர்கள். கடந்த 3 ஆண்டுகால திமுக ஆட்சியில் 1500-க்கும் அதிகமான…

ரவுண்டு கட்டப்பட்ட 6 திமுக அமைச்சர்கள் – வீட்டுக்கா? சிறைக்கா? தலை தப்புமா? ஆட்சி கிட்டுமா?

Posted by - April 26, 2025 0
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் 6 அமைச்சர்களுக்கு வழக்குகளால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் சில அமைச்ச்சர்களுக்கு, பழைய வழக்குகள் தற்போது…

“பொறுப்புணர்வு இல்லாமல் கேட்கப்படுவது மன்னிப்பே அல்ல” – கவுரி கிஷன்

Posted by - November 11, 2025 0
பொறுப்புணர்வு இல்லாமல் கேட்கப்படும் மன்னிப்பு என்பது மன்னிப்பே அல்ல. அதுவும், வழக்கமாக சொல்லப்படும் “தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது” என்ற சால்ஜாப்போடு கோரப்படும் மன்னிப்பு இன்னும் கொடுமையானது” என்று…

மும்மொழி கொள்கைக்கு ஆன்லைன் மூலம் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் ஆதரவு : அண்ணாமலை

Posted by - March 6, 2025 0
ஆன்லைன் மூலம் நடைபெறும் கையெழுத்து இயக்கத்திற்கு 1 லட்சத்துக்கும் அதிகமானோர் ஆதரவு தெரிவித்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்…

CM ஸ்டாலினை ரவுண்டு கட்டிய சீமான்…

Posted by - June 10, 2025 0
 முதலமைச்சர் மோசமான நிர்வாகத்தை கொண்டிருப்பதாக, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார். Seeman Slams CM Stalin: அரசு மருத்துவமனைகளில் தொடரும் பணியாளர்கள் பற்றாக்குறையை போக்க…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *