பிறந்தது டிசம்பர்… இன்று முதல் புதிதாக நடைமுறைக்கு வர உள்ள புதிய விதிகள்.!

211 0
எனவே ஒவ்வொருவரும் என்ன விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதை அறிந்து கொள்வது முக்கியம். அந்த வகையில் இந்த 2022-ஆம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பரில் 1-ஆம் தேதி முதல், இந்திய குடிமக்களின் வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் நடைமுறைக்கு வர உள்ள சில முக்கிய மாற்றங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். டிசம்பர் 1 முதல் நடைமுறைக்கு வர உள்ள மாற்றங்கள் கீழே:பஞ்சாப் நேஷ்னல் பேங்க் ஏடிஎம் கார்டு: நீங்கள் பஞ்சாப் நேஷ்னல் பேங்க் வாடிக்கையாளர் என்றால் உங்களுக்கு இது முக்கியமான அப்டேட் ஆகும். ஏனென்றால் மோசடியில் இருந்து உங்களை பாதுகாக்க, டெபிட் கார்டை பயன்படுத்தி ATM-ல் பணம் எடுப்பதற்கான நடைமுறையை பஞ்சாப் நேஷ்னல் பேங்க் திருத்தியமைத்துள்ளது. இப்போது உங்கள் கார்டை ATM மெஷினில் இன்சர்ட் செய்த பின் , உங்கள் ரிஜிஸ்டர்ட் மொபைல் நம்பருக்கு OTP வரும். உங்களுக்கு தேவைப்படும் பணத்தை எடுக்க இந்த OTP-ஐ என்டர் செய்து வழக்கம் போல ஏடிஎம் கார்டின் பின் நம்பரை பயன்படுத்தவும்.ஜீவன் பிரமான் (வாழ்க்கை சான்றிதழ்): ஓய்வூதியம் பெறுபவர்கள் தாங்கள் உயிர் வாழ்வதை உறுதிப்படுத்துவதற்கான வாழ்க்கை சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 30 நவம்பர் 2022 ஆகும். இந்தநிலையில் நவம்பர் 30 தேதிக்குள் ஓய்வூதியதாரர்கள் தங்களது வாழ்க்கை சான்றிதழை சமர்ப்பிக்கவில்லையென்றால் அவர்களது பென்ஷன் நிறுத்தப்படலாம்.LPG விலைகள்: நவம்பர் மாதத்தில் கமர்ஷியல் LPG -யின் விலை ஒரு யூனிட்டுக்கு ரூ.115 வரை குறைக்கப்பட்டது. எனினும் கடந்த ஜூலை முதல் டொமஸ்டிக் LPG சிலிண்டரின் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இந்நிலையில் ஆண்டின் கடைசி மாதமான இந்த டிசம்பரில் எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்கள் (oil making companies) டொமஸ்டிக் சிலிண்டர்களின் விலையை குறைக்க கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.ரயில் அட்டவணையில் மாற்றங்கள்: டிசம்பர் மாதத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் குளிர்காலம் தீவிரமாக தொடங்குகிறது. இந்த குளிர் சீசனில் மூடுபனியும் அதிகரிக்கத் தொடங்குகிறது. இதனால் ரயில்கள் இயக்குவதில் சிக்கல் ஏற்படும். எனவே பல ரயில்களை ரத்து செய்ய இந்திய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பனிமூட்டம் காரணமாக ரயில்வே தனது நேர அட்டவணையை மாற்றும் என்பதால் டிசம்பர் மாதத்தில் ரயில்வே நேர அட்டவணை திருத்தம் செய்யப்பட்டு, புதிய நேர அட்டவணையின்படி ரயில்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்புகள் டிசம்பர் 1-ல் வெளியாகலாம்.வங்கி விடுமுறைகள்: இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வங்கி விடுமுறைப் பட்டியலின்படி, டிசம்பர் மாதம் மொத்தம் 14 விடுமுறை நாட்கள் வங்கிகளுக்கு இருக்கின்றன. இதில் வார இறுதி நாட்கள், இரண்டாவது/நான்காவது சனிக்கிழமைகள் மற்றும் திருவிழா நாட்கள் அடங்கும். எனவே பேங்கிற்கு செல்லும் முன் வேலை நாளா அல்லது விடுமுறை நாளா என்பதை உறுதிப்படுத்தி கொண்டு செல்லுங்கள்.

Related Post

தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்

Posted by - December 28, 2023 0
சென்னை: தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் நேற்று முன்தினம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் ஓரிரு நாளைக்குள் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக சார்பில்…

தாய்கோ வங்கியில் ரூ. 94 லட்சம் மோசடி- 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 3 பேர் கைது

Posted by - August 5, 2023 0
சேலம்: சேலம் 4 ரோடு அருகே தாய்கோ வங்கி உள்ளது. இங்கு 2010-ம் ஆண்டு தொடங்கி 2020 வரை போலி நககைளை அடகு வைத்து ரூ. 94…

“அதிமுக வரலாறு அண்ணாமலைக்கு தெரியாது.. அரசியலில் பக்குவப்படவில்லை” – கடம்பூர் ராஜூ விமர்சனம்

Posted by - March 8, 2023 0
ஒன்றிய அரசு என்று கூறும் திமுகவிற்கு எதிராக பேசி தான் வருகிறார் தவிர எந்த எதிர்வினையும் அவர் ஆற்றவில்லை என கடம்பூர் ராஜூ கேள்வி தானாக விரும்பி…

இனியும் பெண் கொடுக்க தயங்குவீர்களா…! ஒரே நாளில் ரூ.4 லட்சத்திற்கு தக்காளி விற்பனை செய்த விவசாயி

Posted by - August 2, 2023 0
திருப்பூர்: தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் கடந்த சில வாரங்களாகவே தக்காளியின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் தக்காளி விலை உயர்ந்து வருவதால், நடுத்தர…

பிடிஆர் ஆடியோ விவகாரம்.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி பதில்

Posted by - May 2, 2023 0
‘உங்களில் ஒருவன் பதில்கள் ’ பதிவில் பிடிஆர் ஆடியோ விவகாரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார் தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஓர் ஆடியோ…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *