உன் பொண்ணா இருந்தா இப்படி பண்ணுவியா.? +2 மாணவியை ஓடவிட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர்…

249 0

வாணியம்பாடி அருகே தேர்வுக்காக காத்திருந்த 12-ம் வகுப்பு மாணவி, நிறுத்தத்தில் அரசுப் பேருந்து நிற்காமல் வேகமாக சென்றதால், அதை பின் தொடர்ந்து சென்று பேருந்தில் ஏறிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

வாணியம்பாடியில், அரசுப் பேருந்து ஒன்று நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதால், தேர்வுக்காக காத்திருந்த 12-ம் வகுப்பு மாணவி ஒருவர், வெகு தூரம் பேருந்தின் படியில் உள்ள கம்பியை பிடித்துக்கொண்டு அபாயகரமாக ஒடிய காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பேருந்தை பிடிக்க அபாயகரமாக ஓடிய மாணவி

பள்ளி மாணவர்களுக்கு தற்போது தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த கொத்தகோட்டை பகுதியில், 12 ஆம்  வகுப்பு மாணவி ஒருவர் தேர்வுக்கு செல்வதற்காக, பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார். இந்த நிலையில், திருப்பத்தூரில் இருந்து வாணியம்பாடி வழியாக ஆலங்காயம் செல்லக்கூடிய அரசுப் பேருந்து, கொத்தகோட்டை பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் வேகமாக சென்றுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, தேர்வுக்கு நேரமாகிவிடும் என்ற அச்சத்தில், பேருந்தை பின் தொடர்ந்து ஓடி, படியில் உள்ள கம்பியை பிடித்துக்கொண்டு, தொடர்ந்து ஓடியுள்ளார். வெகு தூரம் இப்படி மாணவியை ஓடவிட்ட பேருந்து ஓட்டுநர், பின்னர் ஒருவழியாக பேருந்தை நிறுத்தியுள்ளார். அதன் பிறகு அந்த மாணவி பேருந்து ஏறிச் சென்ற வீடியோ, சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

இன்று காலை நிகழ்ந்த இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அந்த பேருந்து ஓட்டுநருக்கு மனசாட்சியே இல்லையா என்றும், அவருடைய பெண்ணாக இருந்தால் இப்படி செய்வாரா என்றும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கோபத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதற்கிடையே, மாணவி பேருந்துக்காக ஓடிய வீடியோ வைரலான நிலையில், அந்த பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்க, போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Post

+2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தலைவர்கள் வாழ்த்து…

Posted by - March 3, 2025 0
தமிழ்நாட்டில் +2 மாணவர்களுக்கு இன்று பொதுத்தேர்வு தொடங்கும் நிலையில், பல்வேறு தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் இன்று தொடங்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை 8 லட்சத்திற்கும் அதிகமான…

ராகுகாலம்: அதன் பலன்கள் & நாள் வாரியாக நேரம்…

Posted by - December 11, 2025 0
#Rahukalam #RahukalamToday #TamilNews #TamilAstrology#TamilUpdates #AstrologyTamil #TodayRahukalam #TamilDailyNews ராகுகாலம் என்பது ஒவ்வொரு நாளும் ஓர் நிரந்தரமான நேரத்தில் வரும் அசுப காலம். இந்த நேரத்தில் புதிய…

நிலக்கரி எடுக்க எழுந்த எதிர்ப்பு… டெல்டாவில் எதற்கெல்லாம் அனுமதி கிடையாது தெரியுமா?

Posted by - April 4, 2023 0
பாதிப்பை ஏற்படுத்தும் தொழிற்சாலைகளையும், திட்டங்களையும் இந்த பகுதிகளில் செயல்படுத்த முடியாது காவிரி டெல்டா பகுதி, ஏற்கெனவே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு எதற்கெல்லாம் அனுமதியில்லை…

டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை – 1.30 லட்சம் ஏக்கர் இளம் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

Posted by - October 22, 2025 0
காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்மழை காரணமாக 1.30 லட்சம் ஏக்கர் இளம் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியதாலும், அறுவடைக்கு தயாரான குறுவை நெற்கதிர்களை மழைநீர் சூழ்ந்ததாலும் விவசாயிகள்…

சென்னையில் 10 ஆயிரம் பேர்களை ஏமாற்றி ரூ.800 கோடி மெகா மோசடி- 3 முக்கிய பெண் குற்றவாளிகள் கைது

Posted by - February 16, 2023 0
சென்னை: சென்னை கீழ்பாக்கத்தில் ஹிஜாவு அசோசியேட்ஸ் என்ற தொழில் நிறுவனம் செயல்பட்டு வந்தது. அந்த நிறுவனம், பல்வேறு தொழில்களை செய்து வருவதாகவும், தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *