பாகிஸ்தானுக்கு வந்த அவமானம் – ஷபாஸ் செரீஃப் முன்பே, சீனா செய்த சம்பவம், இந்தியா ராக்ஸ்..

140 0

பாகிஸ்தான் பிரதமர் முன்னிலையிலேயே ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில், பஹல்காம் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCO Summit 2025: பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம்:

இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்ட 20 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்ற, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. அதன் முடிவில் பொது அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. உறுப்பு நாடுகளின் தலைவர்களின் பெயரில் வெளியான அறிக்கையில், கடந்த ஏப்ரல் 22ம் தேதி பஹல்காமில் நடந்த திவிரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை பாகிஸ்தான் தான் நடத்தியதாக மத்திய அரசு குற்றம்சாட்டி வரும் நிலையில், அந்த நாட்டின் பிரதமர் பங்கேற்ற மாநாட்டிலேயே பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டனமும், இரங்கலும்

மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள் சார்பில் வெளியான கூட்டு அறிக்கையில், “ பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறோம். அதே நேரத்தில் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியவர்கள், ஏற்பாட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளனர்.

பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான உறுப்பு நாடுகளின் உறுதிப்பாட்டை ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் கூட்டு அறிக்கை உறுதிப்படுத்தியது. தீவிரவாத குழுக்களை “அரசியல் அல்லது கூலிப்படை நோக்கங்களுக்காக” பயன்படுத்துவதற்கான எந்தவொரு முயற்சியையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது” என கண்டித்துள்ளனர்.

ஒத்துழைப்பு அவசியம்

மேலும், “உறுப்பு நாடுகள் பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் கடுமையாகக் கண்டிக்கின்றன, பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இரட்டை நிலைப்பாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதை வலியுறுத்துகின்றன. பயங்கரவாதிகளின் எல்லை தாண்டிய இயக்கம் உட்பட பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட சர்வதேச சமூகத்தை அழைக்கிறோம்” என்று ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் கூட்டு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு நோஸ் கட்

பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் காரணம் என மத்திய அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. ஆனால், அதனை அந்நாடு தொடர்ந்து மறுத்து வருகிறது. இதனால் இருநாடுகளுக்கு இடையே ராணுவ மோதலும் தொடங்கியது. அப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில், பாகிஸ்தான் எல்லையில் இருந்த தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதலும் நடத்தியது. இதற்கு பதிலடி தர பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட முயற்சிகளுக்கும்  சீனாவும் உதவியதாக கூறப்பட்டது. இந்நிலையில் தான் சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில், பஹல்காம் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிஃபும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. சர்வதேச நாடுகள் யாரும் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்காதது, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு கிடைத்த தோல்வி என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தன. இந்நிலையில், 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு, பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

Related Post

இரண்டு வாரங்களில் 6 ஆயிரத்திற்கும் அதிக நிலநடுக்கங்கள் – சிக்கித் திணறிய துருக்கி

Posted by - February 20, 2023 0
துருக்கியில் பிப்ரவரி 6 ஆம் தேதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் சுமார் 6 ஆயிரத்திற்கும் அதிகமுறை நில அதிர்வுகள் ஏற்பட்டதாக…

சிம் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி.. வருகிறது E-Sim.. ஆண்ட்ராய்டு போன் வைத்து உள்ளவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

Posted by - January 19, 2023 0
Android 13 | இவை சாத்தியமானால், நிறுவனம் தனது செயல்பாட்டில் துரிதமாக எந்த தடை மற்றும் தாமதமின்றி செயல்பட வேண்டும். இதற்கு ஆப்பிள் நிறுவனமே மிகப்பெரிய உதாரணம்!…

ஜப்பானில் விசித்திர நிகழ்வு- தீவு முழுவதும் சூழ்ந்த ஆயிரக்கணக்கான காகங்கள்: இயற்கை பேரழிவுக்கான அறிகுறியா?

Posted by - February 16, 2023 0
டோக்கியோ: ஜப்பானின் கிழக்கு பகுதியில் உள்ள ஹோன்சு தீவில் ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான காகங்கள் கூட்டம் கூட்டமாக சூழ்ந்த விசித்திர நிகழ்வு அரங்கேறியுள்ளது. அங்குள்ள கட்டிடங்கள், சாலைகள்…

178 ஆண்டுகளுக்கு பிறகு மகாளய அமாவாசை தினத்தில் சூரிய கிரகணம்

Posted by - October 14, 2023 0
வாஷிங்டன்: சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும் போது கிரகணம் ஏற்படுகிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் போது…

பாக்., இல்ல பிரச்னையே சீனா தான் – என்னெல்லாம் செய்றாங்க தெரியுமா? இந்தியாவை எச்சரித்த அமெரிக்கா

Posted by - May 26, 2025 0
இந்தியாவின் பிரதான எதிரி சீனா தான் என அமெரிக்கா பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது. இந்தியாவிற்கு பாகிஸ்தான் துணை பாதுகாப்பு பிரச்னை மட்டுமே என அமெரிக்கா எச்சரித்துள்ளது. ”பாகிஸ்தானை வளர்த்துவிடும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *