அடர் சிவப்பு நிறத்தில் அழகாக தோன்றிய ‘ரத்த நிலா’ – ​முழு சந்திர கிரகணத்தை மக்கள் கண்டு ரசித்தனர்

86 0

சென்னை: வானியல் அபூர்​வ​மான முழு சந்​திர கிரகணம் நேற்று நிகழ்ந்​தது. கிரகணத்​தின்​போது, அழகிய சிவப்பு நிறத்​தில் காணப்​பட்ட சந்​திரனை ஏராள​மானோர் உற்​சாகத்​துடன் பார்த்து மகிழ்ந்​தனர்.

சூரியன், சந்​திரன், பூமி மூன்​றும் ஒரே நேர்க்​கோட்​டில் வரும்​போது கிரகணங்​கள் நிகழ்​கின்​றன. அப்​போது நில​வின் நிழல் சூரியனை மறைத்​தால் அது சூரிய கிரகணம் என்​றும், பூமி​யின் நிழல் சந்​திரனை மறைத்​தால் அது சந்​திர கிரகணம் என்​றும் அழைக்​கப்​படு​கிறது.ஆண்​டு​தோறும் சராசரி​யாக 4 கிரகணங்​கள் வரை நிகழும். சந்​திரனை பூமி முழு​மை​யாக மறைத்​தால் முழு சந்​திர கிரகணம் எனவும், ஒரு குறிப்​பிட்ட பகு​தியை மட்​டும் மறைத்​தால் பகுதி கிரகணம் எனவும் கூறப்​படு​கிறது. பவுர்​ணமி நாளில் மட்​டுமே சந்​திர கிரகணம் நிகழும்.அந்த வகை​யில், இந்த ஆண்​டின் முதல் சந்​திர கிரகணம் கடந்த மார்ச் மாதம் நிகழ்ந்​தது. அதை தொடர்ந்​து, 2-வது சந்​திர கிரகணம் நேற்று நிகந்​தது. இந்​திய நேரப்​படி இரவு 9.57 முதல் 1.27 மணி வரை கிரகணம் தெரிந்​தது. அதில் முழு சந்​திர கிரகணத்தை நள்​ளிரவு 11.42 முதல் 12.33 மணி வரை காண முடிந்​தது. அப்​போது ‘ரத்த நிலா’ (பிளட் மூன்) எனப்​படும் முழு​மை​யான அடர் சிவப்பு நிறத்​தில் சந்​திரன் காட்​சி​யளித்​தது.

ஐரோப்​பா, ஆசி​யா, ஆஸ்​திரேலி​யா, ஆப்​பிரிக்​கா, தென் அமெரிக்​கா, பசிபிக், அட்​லான்​டிக், ஆர்​டிக் உட்பட உலகின் பல்​வேறு பகு​தி​களில் இதை பார்க்க முடிந்​தது. குறிப்​பாக, இந்​தி​யா​வில் இரவு நேரம் என்​ப​தால் பல்​வேறு இடங்​களில் சந்​திர கிரகணத்தை மக்​கள் தெளி​வாக கண்டு ரசித்​தனர். தமிழகத்​தில் சில இடங்​களில் வானம் மேகமூட்​டத்​துடன் காணப்​பட்​ட​தால் பார்​வை​யாளர்​கள் ஏமாற்​றம் அடைந்​தனர்.

அடுத்த முழு சந்​திர கிரகணம் 2028 டிசம்​பர் 31-ம் தேதி​தான் நடை​பெறும். அதே​போல, செப்​டம்​பர் 21, 22-ம் தேதி​களில் நிகழ உள்ள பகுதி சூரிய கிரகணம் இந்​தி​யா​வில் தெரி​யாது. தெற்கு ஆஸ்​திரேலி​யா, தெற்கு பசிபிக், அட்​லான்​டிக் மற்​றும் அன்​டார்​டி​கா​வின் சில பகு​தி​களில் மட்​டுமே தெரி​யும்​ என்​பது குறிப்பிடத்தக்கது.

Related Post

பின் வாசலால் சென்ற தமிழரசுக்கட்சி: அநுரவிடம் கேட்டது இதைத் தான்..! அம்பலப்படுத்திய தமிழ் எம்.பி

Posted by - November 22, 2025 0
ஒற்றையாட்சி அரசியலமைப்பையே தற்போது தமிழரசு கட்சி வலியுறுத்தி வருவதாக தமிழ்த் தேசியமக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் (Colombo) நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில்…

அமெரிக்காவில் எலும்பை உறைய வைக்கும் குளிர்.. சமாளிக்க முடியாமல் 22 பேர் பலி!

Posted by - December 27, 2022 0
கடும் பனியுடன் மணிக்கு 65 மைல் வேகத்தில் காற்றும் வீசுவதால் மக்கள் வீடுகளுக்குள் முடக்கம் அமெரிக்காவில் வீசும் பனிப்புயலால் 22 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் பெரும்பாலான மாகாணங்களில்…

பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்.. அனுமதியுடன் சொல்கிறேன்.. பழ.நெடுமாறன் பரபரப்பு பேட்டி..!

Posted by - February 14, 2023 0
விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் தமிழர் தேசிய முன்னணி அமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை ராணுவம்…

சீனாவில் மீண்டும் கொரோனா போன்ற கொடிய தொற்று பரவும் அபாயம்- நிபுணர்கள் எச்சரிக்கை

Posted by - September 27, 2023 0
பீஜிங்: கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் உருவான கொரோனா என்ற கொடூர நோய் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் முழுவதும் பரவி லட்சக்கணக்கான மக்கள் உயிரை…

இந்த மாத இறுதியில் சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை கடலில் விடுகிறது ஜப்பான்

Posted by - August 7, 2023 0
ஜப்பானில் 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், ஒரு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் விளைவாக ஏற்பட்ட சுனாமியினால் பெரும் கடல் அலைகள் ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையத்தின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *