அடர் சிவப்பு நிறத்தில் அழகாக தோன்றிய ‘ரத்த நிலா’ – ​முழு சந்திர கிரகணத்தை மக்கள் கண்டு ரசித்தனர்

75 0

சென்னை: வானியல் அபூர்​வ​மான முழு சந்​திர கிரகணம் நேற்று நிகழ்ந்​தது. கிரகணத்​தின்​போது, அழகிய சிவப்பு நிறத்​தில் காணப்​பட்ட சந்​திரனை ஏராள​மானோர் உற்​சாகத்​துடன் பார்த்து மகிழ்ந்​தனர்.

சூரியன், சந்​திரன், பூமி மூன்​றும் ஒரே நேர்க்​கோட்​டில் வரும்​போது கிரகணங்​கள் நிகழ்​கின்​றன. அப்​போது நில​வின் நிழல் சூரியனை மறைத்​தால் அது சூரிய கிரகணம் என்​றும், பூமி​யின் நிழல் சந்​திரனை மறைத்​தால் அது சந்​திர கிரகணம் என்​றும் அழைக்​கப்​படு​கிறது.ஆண்​டு​தோறும் சராசரி​யாக 4 கிரகணங்​கள் வரை நிகழும். சந்​திரனை பூமி முழு​மை​யாக மறைத்​தால் முழு சந்​திர கிரகணம் எனவும், ஒரு குறிப்​பிட்ட பகு​தியை மட்​டும் மறைத்​தால் பகுதி கிரகணம் எனவும் கூறப்​படு​கிறது. பவுர்​ணமி நாளில் மட்​டுமே சந்​திர கிரகணம் நிகழும்.அந்த வகை​யில், இந்த ஆண்​டின் முதல் சந்​திர கிரகணம் கடந்த மார்ச் மாதம் நிகழ்ந்​தது. அதை தொடர்ந்​து, 2-வது சந்​திர கிரகணம் நேற்று நிகந்​தது. இந்​திய நேரப்​படி இரவு 9.57 முதல் 1.27 மணி வரை கிரகணம் தெரிந்​தது. அதில் முழு சந்​திர கிரகணத்தை நள்​ளிரவு 11.42 முதல் 12.33 மணி வரை காண முடிந்​தது. அப்​போது ‘ரத்த நிலா’ (பிளட் மூன்) எனப்​படும் முழு​மை​யான அடர் சிவப்பு நிறத்​தில் சந்​திரன் காட்​சி​யளித்​தது.

ஐரோப்​பா, ஆசி​யா, ஆஸ்​திரேலி​யா, ஆப்​பிரிக்​கா, தென் அமெரிக்​கா, பசிபிக், அட்​லான்​டிக், ஆர்​டிக் உட்பட உலகின் பல்​வேறு பகு​தி​களில் இதை பார்க்க முடிந்​தது. குறிப்​பாக, இந்​தி​யா​வில் இரவு நேரம் என்​ப​தால் பல்​வேறு இடங்​களில் சந்​திர கிரகணத்தை மக்​கள் தெளி​வாக கண்டு ரசித்​தனர். தமிழகத்​தில் சில இடங்​களில் வானம் மேகமூட்​டத்​துடன் காணப்​பட்​ட​தால் பார்​வை​யாளர்​கள் ஏமாற்​றம் அடைந்​தனர்.

அடுத்த முழு சந்​திர கிரகணம் 2028 டிசம்​பர் 31-ம் தேதி​தான் நடை​பெறும். அதே​போல, செப்​டம்​பர் 21, 22-ம் தேதி​களில் நிகழ உள்ள பகுதி சூரிய கிரகணம் இந்​தி​யா​வில் தெரி​யாது. தெற்கு ஆஸ்​திரேலி​யா, தெற்கு பசிபிக், அட்​லான்​டிக் மற்​றும் அன்​டார்​டி​கா​வின் சில பகு​தி​களில் மட்​டுமே தெரி​யும்​ என்​பது குறிப்பிடத்தக்கது.

Related Post

காதலிக்கு அடித்த ஜாக்பாட்: ரூ.900 கோடி சொத்தை உயில் எழுதி வைத்த முன்னாள் இத்தாலி பிரதமர்

Posted by - July 10, 2023 0
ஐரோப்பிய நாடான இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி. இவர் கடந்த மாதம் காலமானார். இறந்தபின் அவரது உயில் வாசிக்கப்பட்டபோது, அவர் தனது சொத்துக்களில் ரூ. 905,86,54,868…

சவூதி அரேபியாவில் பேருந்து விபத்து – 42 இந்திய யாத்ரீகர்கள் பலி!

Posted by - November 17, 2025 0
சவூதி அரேபியாவில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 42 இந்திய யாத்ரீகர்கள் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. பேருந்து ஒன்று மெக்காவில் இருந்து மதீனாவுக்குப் சென்று கொண்டிருந்தது, இதில் இந்திய …

உக்ரைனுக்கு 5.5 பில்லியன் டாலர் நிதியுதவி அளிக்கிறது ஜப்பான்

Posted by - February 21, 2023 0
டோக்கியோ: உக்ரைன் நாட்டின் மீது ரஷியா நடத்தி வரும் போர் ஓர் ஆண்டை நிறைவு செய்ய உள்ளது. இந்நிலையில், போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு 5.5 பில்லியன்…

பிரபல கூகுள் CEO…சுந்தர் பிச்சை அவர்களின்…ஒரு வினாடி சம்பளம் எவ்வளவு தெரியுமா…?

Posted by - January 6, 2025 0
மதுரையில் பிறந்த பிச்சை சுந்தர் ராஜன் என்ற சுந்தர் பிச்சை, தனது பள்ளிப் படிப்புகளை மதுரையில் கொஞ்சம் சென்னையில் கொஞ்சம் என முடித்து விட்டு ஐஐடி கரக்பூரில்…

ஆங்கில புத்தாண்டு – உலகம் முழுவதும் கோலாகல கொண்டாட்டம்!

Posted by - January 1, 2026 0
உலகம் முழுவதும் புத்தாண்டு பிறந்ததையடுத்து, அனைத்து நாடுகளிலும் கொண்டாட்டங்கள் களைகட்டின. துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபா, பிரமிக்க வைக்கும் அளவுக்கு வண்ண…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *