ரூ.500 கோடி சொத்து மதிப்பு கொண்ட அல்லு அர்ஜுன் திடீர் கைது.. என்ன நடந்தது..?!

224 0

ஹைதராபாத்தில் டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற்ற அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 திரைப்பட வெளியீட்டு விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் ஒரு பெண் இறந்தது தொடர்பாக, நடிகர் அல்லு அர்ஜுனை காவல்துறையினர் இன்று விசாரணை அழைத்து சென்றுள்ளனர், ஆனால பல ஊடகங்களில் இவர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
காவல்துறையினரின் அறிக்கையின்படி, டிசம்பர் 4ஆம் தேதி இரவு சுமார் 10:30 மணியளவில் நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா திரைப்படத்தைப் பார்க்க தியேட்டருக்கு வந்துள்ளார், அவரை நெருக்கமாகப் பார்க்க ரசிகர்கள் முண்டியடித்து முன்னேறியதால் மோசமான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதன் விளைவாக, பலர் மூச்சுத் திணறல் மற்றும் பல்வேறு காயங்களுக்கு ஆளாகினர்.
இந்த சம்பவத்தில் 39 வயது பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், அவரது மகன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உயிரிழந்த பெண்ணின் பெயர் ரேவதி, அவர் தில்சுக்நகரைச் சேர்ந்தவர். தனது கணவர் பாஸ்கர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் திரைப்பட வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார், அப்போது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.

தற்போது சிக்கடபள்ளி காவல் நிலையத்தில் அல்லு அர்ஜுனிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், இவர் காவல் துறை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அல்லு அர்ஜுன் சம்பளம்: புஷ்பா படத்திற்காக அல்லு அர்ஜுன் சுமார் 300 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார். இந்த படத்தைத் தயாரித்தது மைத்ரேயி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமாரன் ரைட்டிங்ஸ். இந்த 300 கோடி ரூபாய் சம்பளத்தின் மூலம் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் ஹூக்கர் பட்டியலில் முன்னேறியுள்ளார்.

பொதுவாக பாலிவுட்டில் பெரிய ஹீரோக்கள் படத்தில் நடிக்க சம்பளமாக வாங்காமல் படத்தின் வசூலில் ஒரு சிறு பங்கீட்டை வாங்கும் வழக்கம் கொண்டு உள்ளனர். ஆனால் சில படங்களுக்குச் சம்பளமும் வாங்குகின்றனர், இப்படி சம்பளம் வாங்குவோர் பட்டியலில் அல்லு அர்ஜுன் முதல் புஷ்பா 2 படத்தின் மூலம் முதல் இடத்தை பிடித்துள்ளார். அல்லு அர்ஜுன் சொத்து மதிப்பு: தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான அல்லு அர்ஜுன், சுமார் 500 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் பணக்கார நடிகராக உள்ளது. அவரது வருமானம், சொத்து மதிப்பு வெறும் நடிப்பை மட்டும் சார்ந்தது அல்ல; முதலீடுகள், விளம்பர ஒப்பந்தங்கள் மற்றும் சமூக ஊடக விளம்பரங்கள் மூலம் பெரும் வருமானத்தை ஈர்த்து வருகிறார். அல்லு அர்ஜுன் வீடு: அவரது சொத்துக்களில், ஹைதராபாத்தில் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர வீடு மிகவும் முக்கியமான ஒன்று. அங்கு அவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். பிற முக்கிய சொத்துக்கள்: அவரது சொத்து மதிப்பில் ஒரு பிரைவேட் ஜெட் , அவரது ஆடம்பர வாழ்க்கை முறையை பிரதிபலிக்கிறது, அத்துடன் பல ரியல் எஸ்டேட் சொத்துக்கள் மற்றும் உயர் ரக சொகுசு வாகனங்களின் கலெக்ஷனும் அடங்கும். ப்ரோமோஷன் மற்றும் பிராண்ட் என்டோர்ஸ்மென்ட்: சமூக வலைத்தளத்தில் ஒவ்வொரு விளம்பர பதிவிற்கும் லட்சக்கணக்கான ரூபாய் வருமானம் ஈட்டி வருகிறார் அல்லு அர்ஜூன். இது தவிர KFC, Frooti, RedBus, Hero MotoCorp, Hotstar மற்றும் Rapido உள்ளிட்ட பல பிரபலமான பிராண்டுகளுடன் அவர் விளம்பர தூதராக பல கோடிகளை சம்பாதித்து வருகிறார். ஒவ்வொரு விளம்பர ஒப்பந்தத்திற்கும் 6 முதல் 7 கோடி ரூபாய் வரை அவர் கட்டணம் வசூலிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கிய முதலீடுகள்: விளம்பரங்கள் மற்றும் நடிப்பைத் தவிர, அல்லு அர்ஜுன் உணவு மற்றும் மதுபானத் துறையில் முதலீடுகளைச் செய்துள்ளார். ஹைதராபாத்தில் பிரபலமான அமெரிக்க ஸ்போர்ட் பார் மற்றும் உணவக சங்கிலியின் உரிமையாளராக உள்ளார். பிற முக்கிய வர்த்தகம்: 2022 ஆம் ஆண்டில், அல்லு அர்ஜுன் ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட அல்லு ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நிறுவினார். இது மட்டும் அல்லாமல் கீதா ஆர்ட்ஸ் என்ப தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனத்தை அவரது குடும்பம் நடத்தி வருகின்றது. மேலும், ஹைதராபாத்தின் அமீர்பேட்டையில் ஒரு மல்டிபிளக்ஸ் வைத்துள்ளார். அவரது தந்தை அல்லு அரவிந்த், Aha என்ற ஸ்ட்ரீமிங் தளத்தின் உரிமையாளராக உள்ளார். அல்லு அர்ஜுன் அதன் பிராண்ட் தூதராகவும் செயல்படுகிறார். ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ஹெல்த்கேர் ஸ்டார்ட்அப் நிறுவனமான கால்ஹெல்த் சர்வீஸிலும் குடும்பம் முதலீடுகளைக் கொண்டுள்ளது. இது அவர்களின் பல்வேறு வணிக நலன்களை மேலும் நிரூபிக்கிறது. சுருக்கமாகக் கூறினால், அல்லு அர்ஜுன் ஒரு வெற்றிகரமான நடிகர் மட்டுமல்ல, ஒரு புத்திசாலித்தனமான வணிகர் என்பதையும் நிரூபித்துள்ளார். ஆனால் இந்த வழக்கு அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையும், பிஸ்னஸையும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

இயற்கை சீற்றங்களுக்கு மத்தியில் இ.ண்.டி.யா கூட்டணியின் கூட்டத்திற்காக டெல்லி சென்ற CM ஸ்டாலின்…

Posted by - December 19, 2023 0
இயற்கை சீற்றங்களுக்கு மத்தியில் இண்டியா கூட்டணியின் கூட்டத்திற்காக டெல்லி சென்ற முதலமைச்சர்.. பிரதமருடனான சந்திப்பில் நேரம் மாற்றம்! வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…

டெல்லியில் பட்டப்பகலில் வழிப்பறி சம்பவம்: இருவர் கைது- போலீஸ் விசாரணை

Posted by - June 27, 2023 0
டெல்லி சாந்தினிசவுக்கில் உள்ள தனியார் நிறுவனத்தில் டெலிவரி ஏஜென்டாக பணியாற்றி வருபவர் பட்டேல் சஜன் குமார். இவர் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை கொடுப்பதற்காக குருகிராமிற்கு காரில் சென்றார். செங்கோட்டை…

மீண்டும் அமலுக்கு வந்த Containment Zone, lockdown வார்த்தைகள்! கொரோனா- நிபா இடையே இத்தனை ஒற்றுமைகளா?

Posted by - September 15, 2023 0
திருவனந்தபுரம்: கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட போது கேட்ட லாக்டவுன், கன்டெய்ன்மென்ட் ஜோன் போன்ற வார்த்தைகள் கேட்ட நிலையில் தற்போது நிபா வைரஸுக்கும் அதே வார்த்தைகள் கேட்கின்றன.…

அந்தமான் தீவுகளில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

Posted by - July 10, 2023 0
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள காம்ப்பெல் விரிகுடாவின் தென்கிழக்கில் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு…

வங்கி கணக்குகளில் ரூ.1 லட்சம் வரை திடீர் டெபாசிட்- இன்ப அதிர்ச்சியில் பொதுமக்கள்

Posted by - August 29, 2023 0
திருப்பதி: தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டம் ஏட்டூர் நகரில் உள்ள பொதுமக்கள் பலரது வங்கி கணக்கில் நேற்று முன்தினம் திடீரென ரூ.10 ஆயிரம் முதல் ரூ ஒரு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *