அம்பத்தூர் அருகே கஞ்சா போதையில் இளைஞர்கள் வெறிச்செயல் – போலீஸ் வலைவீச்சு!

119 0

மாமூல் தர மறுத்த மளிகைக்கடை உரிமையாளர் கர்ப்பிணி மனைவியை அரிவாளால் வெட்டிய கும்பல்!

சென்னை அம்பத்தூர் அருகே மாமூல் தர மறுத்த மளிகைக்கடை உரிமையாளர், அவரது கர்ப்பிணி மனைவியை 7 பேர்  கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாடி கலைவாணர் நகர்  பகுதியில் வேல்முருகன் என்பவர்க் கடந்த ஓராண்டாக மளிகைக்கடை நடத்தி வருகிறார்.

இவர் நேற்று இரவு கடையை அடைத்துவிட்டு வீட்டிற்குச் செல்லவிருந்தார். அப்போது கஞ்சா போதையில் அங்கு வந்த 7 பேர், கடையைத் தொடர்ந்து நடத்திட மாதம் 5 ஆயிரம் ரூபாய் மாமூல் தரவேண்டுமெனக் கூறி மிரட்டி உள்ளனர்.

வேல்முருகன் அதற்கு மறுத்ததால், அவரை அந்தக் கும்பல் கத்தியால் வெட்டியது. தடுக்க முயன்ற அவரது 8 மாத கர்ப்பிணி மனைவியையும் கஞ்சா போதையில் இருந்த அந்தக் கும்பல் கத்தியால் தாக்கியுள்ளது.

பின்னர்  கடையில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு அவர்கள் அங்கிருந்து தப்பினர். இதில் படுகாயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இது தொடர்பான புகாரை அடுத்து தலைமறைவாக உள்ள 7 பேரையும் போலீசார்  தேடி வருகின்றனர்.

Related Post

மார்ச் 14ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் – அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர் அப்பாவு

Posted by - February 18, 2025 0
தமிழ்நாட்டு நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ளார். மார்ச் 14ஆம் தேதி காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட் தாக்கல்…

தளபதியின் வரலாறு.! தவெக தலைவர் விஜய்க்கு 50ஆவது பிறந்தநாள்..!

Posted by - June 22, 2024 0
தமிழ் சினிமாவில் தனக்கென்று ஓரிடத்தைப் பிடித்துள்ள நடிகர் விஜய், தற்போது அரசியல் கட்சித் தலைவராகவும் உருவெடுத்துள்ளார். பிரபல திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பாடகி ஷோபா தம்பதிக்கு,…

தனியார் சேனல்களில் கட்டண உயர்வு.. கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்!

Posted by - February 25, 2023 0
தனியார் சேனல்களின் கட்டண உயர்வை தடுத்து நிறுத்த வலியுறுத்தி, தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கம் சார்பில், தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும்…

“TVK தலைவருக்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு” மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!

Posted by - February 14, 2025 0
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. விஜய்க்கு பல்வேறு தரப்பில் இருந்து அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறைக்கு…

வாட்டி வதைக்கப்போகும் வெயில்..! மக்களே உஷார்

Posted by - April 11, 2023 0
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, அடுத்த 5…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *