வருகிற நாடாளுமன்றத் தேர்தல் 4வது போர் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

298 0

சமூகநீதி மண்ணான தமிழ்நாட்டில் எல்லோரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு சமத்துவத்தை – சகோதரத்துவத்தை பேணிகாப்போம் என உரையாற்றினோம்

அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தல் நான்காவது போர் என விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் முத்தரையர் சமூகத்தின் தலைமை அலுவலகத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சியினர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை பார்த்து பயப்படுகிறார்கள் எனத் தெரிவித்தார். கருணாநிதியை விட, சமூக நீதியை காக்க மு.க.ஸ்டாலின் செயல்படுவதால்தான் அவரை பார்த்து பயப்படுகின்றனர் என்றும் கூறினார்.

கடந்த 2019 நாடளுமன்ற தேர்தல், அடுத்து வந்த சட்டமன்றத் தேர்தல், அதற்கடுத்து வந்த உள்ளாட்சித் தேர்தல் என மூன்று போர்களிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது எனக் கூறிய உதயநிதி ஸ்டாலின், வர இருக்கிற 2024 நாடளுமன்ற தேர்தல் 4வது போர் என்றும் அதிலும் திமுக வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார்.

சமூகநீதி மண்ணான தமிழ்நாட்டில் எல்லோரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு சமத்துவத்தை – சகோதரத்துவத்தை பேணிகாப்போம் என்று உரையாற்றினார்.

முத்தரையர் சமூக மக்களுக்கு ஏராளமான திட்டங்களை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கொண்டு வந்து செயல்படுத்தியுள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

Related Post

எதிர்க்கட்சிகளுக்கு செங்கோட்டையன் வார்னிங்!

Posted by - February 9, 2026 0
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அரசியல் களத்தில் விறுவிறுப்பாக செயல்பட்டு வரும் நிலையில் தலைவர் விஜய் இதுவரை செய்தியாளர்களை சந்திக்காமல் இருப்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.…

கருவை கலைக்க சொல்கிறார், இரண்டு முறை தாக்கினார்.. CWC நடுவர் மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி ஜாய் கிரிஸில்டா அதிர்ச்சி புகார்

Posted by - August 29, 2025 0
குக் வித் கோமாளி ஷோவில் நடுவராக இருப்பவர் மாதம்பட்டி ரங்கராஜ். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கும் நிலையில் சமீபத்தில் ஜாய் கிரிஸில்டா என்ற ஆடை…

களத்தில் விஜய்! 2026 தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு ஆட்டம் காட்டும் பரந்தூர் விமான நிலையம்!

Posted by - January 20, 2025 0
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழுவினரை விஜய் நேரில் சந்தித்துள்ள நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் இந்த விவகாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு…

விஜய் மக்கள் சந்திப்பு: காஞ்சிபுரத்தில் நாளை நடைபெறும் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு அனுமதி மறுப்பு! பரபரப்பு அறிக்கை வெளியீடு!

Posted by - November 22, 2025 0
“காஞ்சிபுரம் அருகே நாளை விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில், கட்சி நிர்வாகிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது நாளை நடைபெறும் விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டத்தில்…

போலி வாக்காளர்களை நீக்கவே S.I.R பணி நடைபெறுகிறது – எல்.முருகன் விளக்கம்!

Posted by - November 19, 2025 0
போலி வாக்காளர்கள் மற்றும் இரட்டை வாக்காளர்களை நீக்கவே S.I.R பணி மேற்கொள்ளப்படுவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் விளக்கமளித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகளின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *