வருகிற நாடாளுமன்றத் தேர்தல் 4வது போர் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

303 0

சமூகநீதி மண்ணான தமிழ்நாட்டில் எல்லோரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு சமத்துவத்தை – சகோதரத்துவத்தை பேணிகாப்போம் என உரையாற்றினோம்

அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தல் நான்காவது போர் என விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் முத்தரையர் சமூகத்தின் தலைமை அலுவலகத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சியினர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை பார்த்து பயப்படுகிறார்கள் எனத் தெரிவித்தார். கருணாநிதியை விட, சமூக நீதியை காக்க மு.க.ஸ்டாலின் செயல்படுவதால்தான் அவரை பார்த்து பயப்படுகின்றனர் என்றும் கூறினார்.

கடந்த 2019 நாடளுமன்ற தேர்தல், அடுத்து வந்த சட்டமன்றத் தேர்தல், அதற்கடுத்து வந்த உள்ளாட்சித் தேர்தல் என மூன்று போர்களிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது எனக் கூறிய உதயநிதி ஸ்டாலின், வர இருக்கிற 2024 நாடளுமன்ற தேர்தல் 4வது போர் என்றும் அதிலும் திமுக வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார்.

சமூகநீதி மண்ணான தமிழ்நாட்டில் எல்லோரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு சமத்துவத்தை – சகோதரத்துவத்தை பேணிகாப்போம் என்று உரையாற்றினார்.

முத்தரையர் சமூக மக்களுக்கு ஏராளமான திட்டங்களை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கொண்டு வந்து செயல்படுத்தியுள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

Related Post

ஆவின் பால் பாக்கெட் கலர் வித்தியாசம்.. இவ்வளவு விஷயம் இருக்கா? பலருக்கும் இது தெரியாது!

Posted by - April 5, 2023 0
#Aavin Milk : ஆவின் பால்பாக்கெட்டுகள் பல வண்ணங்களில் கிடைக்கும். பச்சை பால், நீல பால் என நிறத்துக்கு ஏற்ப கடைகளில் கேட்டு வாங்கினாலும் ஒவ்வொரு வண்ணத்துக்கும்…

அராஜக தி.மு.க அரசால் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் ஆசிரியர்கள்!-ஆதவ் அர்ஜுனா த.வெ.க .

Posted by - July 18, 2025 0
அராஜக தி.மு.க அரசால் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் ஆசிரியர்கள்! #Aadhavarjuna #TVK #Teachers_Protest #Tamilnadu_CM #pixeltv  #TamilNews #pixelmedia           குற்றவாளிகளைப் போல…

”தமிழக அரசே.. விஜயை சுதந்திரமாக பேச விடுங்க” காங்., தலைவர் செல்வப்பெருந்தகை கோரிக்கை

Posted by - September 23, 2025 0
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சுதந்திரமாக பேசவும், பயணிக்கவும் தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். வாக்குத் திருட்டுக்கு…

“புதுக்கோட்டையில் கனிமவள கொள்ளைக்கு எதிராக புகார் அளித்தவர் காட்டிக் கொடுக்கப்பட்டார்” – எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

Posted by - January 20, 2025 0
கனிமவளக் கொள்ளையர்கள் மட்டுமின்றி, அவர் கொடுத்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி, வலியுறுத்தியுள்ளார். புதுக்கோட்டையில்…

கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன்… தேர்தல் பணிகளை துரிதப்படுத்துங்கள்… நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் அட்வைஸ்

Posted by - January 23, 2024 0
கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்கள் நீதி மய்யம் சார்பில் பூத் கமிட்டி அமைக்க வேண்டும் – கமல்ஹாசன் நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்க…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *